Saturday, May 30, 2015

பர்மிய முஸ்லீம்களும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கீழ் உள்ள முஸ்லீமல்லாதவர்களும்


பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது.



 ஆனால், அவர்களால் ஓரளவிற்கேனும் அநீதிக்கு எதிராகப் பங்காற்ற இயலும் பிரச்சனையில் மெளணம் காக்கிறார்கள். இஸ்லாமிக்-ஸ்டேட்டின் கொலை, கொள்ளைக் கற்பழிப்புகளுக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்தால், அவைகள் பல முஸ்லீம்களைச் சென்றடைந்து பலன் விளைவிக்கும். இந்த இயக்கத்தினர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இருப்பதால், இவர்களால் மிக எளிதாக பணியாற்ற இயலும். ஆனால் மெளணமாக உள்ளனர்.  (இஸ்லாமிக் ஸ்டேட்டின் இழிசெயல்களுக்கு ஆதார செய்தி:  http://www.bbc.com/news/world-middle-east-30573385 ).

 இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர்கள் மாற்று மத ஆண்களை, அவர்கள்
கைதிகளாக‌ இருந்தாலும், அவர்களைக் கொலைச் செய்வதும், பெண்களைக் கற்பழிப்பதும் விற்பதுமாக உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் இந்த இழிசெயல்களை மதம்-சார்ந்த மார்க்க செயலாகச் செய்துவருகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், இவர்களின் இந்தச் செயல்கள் அவர்களது தனிப்பட்ட இயக்கச் செயல்கள் அல்ல. அவைகள் அவர்கள் நம்பும் மதக் கொள்கையினைச் சார்ந்தது. இவ்வாறு தான் நபி அவர்களின் தோழர்கள் செய்ததாகவும் நபி அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களது புகாரி போன்ற புனிதமான புத்தகங்கள் கூறுவதால், இவ்வாறு கற்பழித்து அவர்கள் நம்பும் இஸ்லாத்தின் ப‌ணியினை ஆற்றுகின்றார்

 அந்த புகாரிப் போன்ற புத்தகத்திலுள்ள இதுபோன்ற ஹதீஸ்கள் (அதாவது வரலாற்றுக் குறிப்புக்கள்), அவர்கள் வரையறுத்த "ஆதாரப் பூர்வமானவை" எனும் வகையைச் சேர்ந்ததினால் இவர்களும் அத்தகையக் கற்பழிப்புகளை மார்க்கப் பணியெனக் கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் இந்தச் செயலைக் கண்டிக்கவேண்டும். தனது வளைகுடா-வாழ் தொண்டர்கள் மூலம் இந்தக் கண்டனத்தினை சவுதி அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்தோடல்லாமல், அந்தக் கற்பழிப்பாளர்களுக்கு, இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய முன்வருவார்களா? மாட்டார்கள். செய்யவேண்டும் மென்றால் எப்போதோ செய்திருக்கவேண்டும். வேண்டுமானால், இவைகளை அவதூறு என்று கூறுவாரி மழுப்புவார்களேத் தவிர கண்டிக்க மாட்டார்கள்.

Thursday, June 19, 2014

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தின் படி கணிசமான மக்கள் குவிந்திருந்திருக்கின்றனரென்று தெரிகிறது.

இந்த மக்களைக் குவிக்க, அவர்களை அழைத்து அந்த தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டிருந்த அறிவிப்பு செய்தியும் அவர்களது இணையதளத்தில் காணப்படுகிறது. அந்த அறிவிப்பினைக் கீழே மேற்கோள்-குறிகளுக்கிடயே காட்டியுள்ளேன்:

"
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
"

இவர்களது இந்த அழைப்பு விடுக்கும் அறிவிப்பின் வாசகங்களைப் பார்ப்போம். அதில் உள்ள ஒரு வாசகம்: "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்". இதுவரை நான்கு முஸ்லீம்கள் இறந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் செய்திவெளியிட்ட தேதியன்று மூன்று முஸ்லீம்கள்தான் இறந்துள்ளனர். இப்படியிருக்க, "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்"- என்று எழுதுவது சரியா? இவ்வாறு எழுதுவது அபாண்டமல்லவா? இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா? இவர்களது இந்த துல்லியமற்ற மற்றும் ஏகத்திற்கும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை சோடிப்புகளால், எத்தனைப் பேர்களது மனதில் பதற்றத்தினை அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளனர்? இது முறையா?

மேலும் "சிங்கள ராஜபக்ச அரசைக் கண்டித்து" என்று எழுதியுள்ளனர். அவர் சிங்களராக இருப்பது எப்படி இந்தப் பிரச்சனைக்குப் பொருந்தும். தவ்ஹீத் ஜமாத் முட்டாள்களின் கூடாரம் என்பதற்கு இது சான்றல்லவா? "குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்ற பழமொழிக்கேற்றவாறு குரங்குக் கூட்டமாக இருக்கிறதல்லவா இந்த தவ்ஹீத் ஜமாத்?

இது தவிர,

கீழ் கண்டவாறல்லவா முஸ்லீம்களை வழி நடத்திருக்கவேண்டும்:

1. பெருவாரி மக்களிடம் சிறுமான்மையான முஸ்லீம்களே நீங்கள் உங்கள் அடையாளத்தினைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். அவரகளது கலாச்சாரங்களை அழிக்க முயற்சியெடுக்காதீர்கள். "ஹலால் சர்டிஃபிக்கேட்" போன்ற அடையாள மேலோங்களுக்கான அட்டகாசங்களை விட்டுவிடுங்கள். பெருவாரி மக்களிடம் ஒற்றுமையுடன் நீங்கள் இல்லையென்றால் அழிந்துபோவீர்கள் --- என்று அறிவுறுத்திருக்கவேண்டாமா?

2. இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களே, உங்களிடம் ஏற்கனவே மதத்திற்குட்பட்ட நல்ல செயலான, "தலைக்குத் துண்டு அணிதல்" எனும் பாரம்பரியம் இருந்து வருகிறது. அது போதுமானது. "புர்கா" அணிவதுதான் மார்க்கமென்று ஒன்றுமில்லை. "புர்க்கா" அணிவதால், பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பிரச்சனை வருகிறதென்றால், "புர்கா" அணிவதற்கு பதிலாக உங்கள் பாரம்பரியப் படியே நடந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தினை நீங்கள் பின்பற்றுவதற்கு ஒற்றுமையான சூழல் கட்டாயம் தேவை.  -- என்று அறிவுறுத்த வேண்டாமா?

Wednesday, February 19, 2014

சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல்

 சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பற்பல அரபி கலைச் சொற்கள் உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிமல்லாதோர்களும் விளங்கிக் கொள்வதற்காக அந்த கலைச்சொற்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அந்த வீடியோவினைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் அந்த வீடியோவில் கூறப்படும் சில‌ கருத்துக்களைப் பற்றி சிறு விமர்சனங்களை முன்வைக்கிறேன்.




 அந்த வீடியோவில், அத்வைதக் கோட்பாடுகளுக்கும் சூஃபி தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பேசப்படுகிறது. தீன்-முகம்மதவர்கள், அத்வைதம் பற்றி தான் நன்கு அறிந்தவரல்ல என்றும், சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதினைப் பற்றி சிறிதுப் படித்துள்ளதாகவும் கூறிவிட்டு, சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாகத் தான் படித்த சிலவற்றவைகளையும் கூறுகிறார். பின்பு சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாக தான் கூறியது, எவ்வாறு சூஃபி தத்துவத்தினின்று வேறுபடுகின்றதென்றும் கூறுகிறார்.

ஏறத்தாள இந்தப் பிரபஞ்சமே (Universe, அண்டம், உலகம்) இறைவன் என்று சங்கராச்சாரியார் கூறியதாக தீன்-முகம்மது அவர்கள் அபிப்ராயம் கொண்டுள்ளார். இந்த அபிப்ராயம் சூஃபிக் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது என்றுக் கூறி எவ்வாறு மாறுபடுகிறதென்பதினை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

 பிரபஞ்சத்தில் காணப்படுபவைகளுக்கு இருக்கக் கூடியத் தன்மை போலியானதென்றும், அந்த இருக்கக் கூடியத் தன்மை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றும், ஆனால் பொருட்களுக்கு அந்தத் தன்மை கடவுளிடமிருந்து வழங்கப்படுகிறதென்றும், இது சூஃபி நம்பிக்கையின் அம்சமென்றும் கூறுகிறார் தீன்-முகம்மதவர்கள்.  எனவே பொருட்களின் தொகுப்பினைக் கடவுளென்று கூறமுடியாதென்று தீன்-முகம்மதவர்கள் விளக்குகிறார். எனவே இது சங்கராச்சாரியார் கூறியதாகத் தான் கூறிய‌திலிருந்து வேறுபடுகிறதென்றும் விளக்குகிறார்.

 ஆனால் சங்கராச்சாரியாரவர்கள் கூறியதாக தீன் முகம்மதவர்கள் கூறியதை சங்கராச்சாரியாரவர்கள் கூறவில்லையென்று கருதுகிறேன். பொருட்களைக் கடவுளென்று சங்கராச்சாரியார் கூறியவரல்ல. மாறாக, பொருட்களின் மீதான‌ விளைவுகள், தன்மைகள் அவனுடையவையென்று அவர் கூறியவரென்று நம்புகிறேன். ஏறத்தாழ சூஃபிக்களின் நம்பிக்கையாக தீன்-முகம்மதவர்கள் விவரிப்ப‌தைத்தான் சங்கராச்சாரியாரும் கூறியுள்ளாரென்று நம்புகிறேன். அத்வைதம் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கமும் இதைத்தான் கூறுகிறது. இப்னு-அரபி எனும் சூஃபி கூறியதும்  சங்கராச்சாரியார் கூறியதும், ஒரே வாக்கியங்களில் உள்ளன: "இந்த உலகம் போலி ஆனால் முற்றிலும் போலியல்ல".

 புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவில் கையாளப்படும் உதாரணமாகிய அலை ஒரு நல்ல உதாரணம். பொருட்களைக் கடவுளென்பது, தண்ணீரினை அலையென்று கூறுவதற்கு சமமானது. எனவே தவறானது. மேலும் அலைக்கு இருக்கக்கூடியத் தன்மை நிரந்தரமானதல்ல, எனவே அலையும் கடவுளின் பகுதியல்ல, ஏனெனில் கடவுள் நிரந்தரமானவன். இருக்கக் கூடியத்தன்மை, அலைக்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. அலையின் இருக்கக் கூடியத்தன்மையினை அலையினுடையதென்பது, இறைவனுக்கு இணைவத்தலெனும் இஸ்லாமியக்குற்றமாகும். அது நம்மைப் போலியுலகில் ஆட்டிப்படைக்கும்.

வீடியோவில் கையாளப்படும் பச்சை நிறம் பற்றிய உதாரணமும் அருமை.

  மேலும் பற்பல அம்சங்களில் அத்வைதமும் சூஃபி தத்துவங்களும் உடன்படுகின்றன. சூஃபி தத்துவங்கள், "இறைவன் ஒருவன்", "இறைவனுக்கு இணையில்லை" என்ற கருத்துக்களின் அடிப்படையில் ஏற்பட்ட சிந்தனையாதலால், சூஃபி தத்துவங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய தத்துவங்களுமாகும்.


இப்போது அந்த வீடியோவில் கையாளப்படும் அரபு கலைச் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே உள்ளன. மூன்றாம் நிமிடத்திலிருந்து வரும் காட்சிகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

"ஷாஃபி மத்ஹபு" ----- இலங்கை முஸ்லீம்கள் பின்பற்றும் ஒரு விதமான மதச்சட்ட அமைப்பு முறை;
"காதிரியா, ஷாதுலியா, நக்க்ஷபந்தியா தரீக்காக்கள்" ----- இவைகள் ஒருவிதமான குரு-குல பயிற்சி முறைகள் அல்லது தொடர்கள்;
"திக்ரு"-- இறைவனின் பெயர்களைக் கூறி அவனை ஞாபகம் கொள்ளும் ஒரு முறை
"தசவ்வுஃப்" - சூஃபிஸம்
"சுன்னா"- நபி அவர்களது முறைகள்
"அக்கீதா"- இஸ்லாமிய இறைக் கொள்கை
"வஹ்ஹாபிச இயக்கம்" - குர்-ஆன் மற்றும் நபி அவர்கள் பற்றி நூற்றாண்டு காலங்கள் கழித்து எழுதப்பட்ட செய்திகளை, "ஆதாரபூர்வமானது", "பலஹீனமானது" பிரிக்கும் முறைகளில் எந்த தவறுமில்லையென்று மனப்பூர்வமாக நம்பும் இயக்கங்கள்.
"குஃப்ர்" - இஸ்லாமியக் கொள்கைகளை நிராகரித்தல்
"ஷிர்க்" - இறைவனுக்கு இணையாக எதையாவது கருதுதல்
"மஹப்பத்" - அன்பு
"தீன்"-- இறைவன் பற்றிய‌ நம்பிக்கைகளுடன் வாழும் முறை
"காஃபிர்கள்" -- இறைவனை அல்லது இஸ்லாமிய தத்துவங்களை நிராகரிப்பவர்கள்
"இஸ்லாமிய கிலாஃபத்" -- இந்த வீடியோவில் தீன் முகம்மதவர்கள் இந்த வார்த்தைகள் மூலம் சுட்டுவது அரேபியா மீதான துருக்கிய ஒட்டோமானியர்களின்  இஸ்லாமிய ஆட்சி
"உலமாக்கள்" -- இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பற்றிக் கற்றறிந்தவர்கள்
"கஸ்ஸாலி" -- இவர் சூஃபிஸம் இஸ்லாத்திற்குட்பட்ட நம்பிக்கையே என நிரூபித்தவர்
"ஷாஃபி" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"அபூ ஹனீஃபா" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"இப்னு தைமிய்யா" - இவர் கஸ்ஸாலிக்கு எதிர்பதமானவர்.
"ஷேகுல் இஸ்லாம்" - "இஸ்லாமிய குரு". இது வஹ்ஹாபிகள் இப்னு தைமிய்யாவிற்கு கொடுத்தப் பட்டம்
"அமானத்" - ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை
"வஸீலா தேடுதல்" - உதவி தேடுதல்
"ஹதீஸ்" - நபி அவர்கள் பற்றிய செய்திகள்
"உஜூத்" --- உள்ளமை, இருக்கக்கூடியத் தன்மை, existence
"உஜூதுல் வாஜிப்" --- "கட்டாயமாக இருக்கக் கூடியத் தன்மை"
"மும்கினுல் உஜூத்" --- "இருக்க சாத்தியமானவைகளின் இருக்கக் கூடியத் தன்மை"
"மவ்ஜூத்" --- இருப்பவை
"சிஃபத்" - பண்பு, தன்மை
"ஹதம்" -- இல்லாமை
"குன்" - "ஆகுக" என்று கட்டளையிடுதல்
"வஹ்தத்துல் உஜூத்"  -- இருக்கக் கூடியத் தன்மையினை ஒன்று என நம்பும் மெஞ்ஞானத் தத்துவம் (Oneness of Existence)
"ஒதுவெடுப்பது" --- தொழுகைக்கு முன்பு தனது உறுப்புக்களை தண்ணீர் கொண்டு தூய்மை செய்தல்
"அனல் ஹக்" - நானே உண்மை (இங்கு "உண்மை" என்பது கடவுளின் பெயர்களில் ஒன்று எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது)
"ஷரியத்" - வெளிரங்கமான சட்டதிட்டங்கள்
"மாரிஃபா" - இறைவன் பற்றிய ஞானம்
"காலிக்" - படைப்பவன்
"ஃபத்வா" - மதத் தீர்ப்பு

Friday, February 14, 2014

பிஜேயின் கடவுளின் விலங்கியல் பெயர் : ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ் (Homo Sedentarius-Sedes)


தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான "பிஜே" எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டெதென‌ விவரித்தார். இந்த விவரிப்பு 2010-ல் நிகழ்ந்தது. அவரது விவரிப்பின் படி அவரது கடவுள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றுள்ளது.

1. கடவுள் வானத்தில் ஒரு திசையில் தொலைதூரத்தில் உள்ளது
2. அது ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளது.
3. அந்த நாற்காலியை 8 ஜின்கள்/வானவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்
4. அதற்கு கைகள் மற்றும் கால்கள் உண்டு
5. அது மனிதனை தனது சாயலில் படைத்துள்ளது. அதாவது கடவுள் மனிதனின் சாயலில் இருக்கிறது.
6. ஆனால், அந்த மனிதக் கடவுளுக்கு சாவு கிடையாது.

விலங்கியல் படி அவரது அந்த கடவுள் எனும் விலங்கிற்கு பெயரிடவேண்டும். அதுதான் முறை. ("விலங்கு" எனும் வார்த்தையை நான் "மிருகம்" எனும் தரம் தாழ்ந்த பொருளில் பயன்படுத்தவில்லை. விலங்கியல் அம்சங்களைப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் விலங்குகள் தான். மனிதர்கள் உட்பட விலங்குகள்தான்.)

 அவரது கடவுள், மனிதனைப் போல இருப்பதால், "ஹோமோ" ஜீனஸ் (Genus) வகையைச் சேர்ந்தது. ஆசனத்தில் அமர்ந்துள்ளதென்பதினை இலத்தீனில் மொழிபெயர்த்து அதன் இனப் பெயரினைக் கூறலாம். (அதாவது Species பெயர்). இலத்தீனில் மொழிபெயர்ப்பதென்பது, அறிவியல் மரபிற்க்காக.

"ஆசனத்தில் அமர்ந்துள்ளது" என்பதினை, இலத்தீனில் "செடென்டேரியஸ்-செடெஸ்" (Sedentarius-Sedes) எனக் கூறலாம். இதனை "Google Translator" உதவிகொண்டு மொழிபெயர்த்தேன்.

எனவே பிஜேயின் கடவுளின் அறிவியல் பெயர்: "ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ்" Homo Sedentarius-Sedes.

எனது இந்த அறிவியல்-பணிக்காக சன்மானங்களை வழங்க விரும்புவோர்கள் 123456 என்ற ஸ்டேட் பேங்க் அக்கெளண்டிற்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, February 13, 2014

"கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனை

 கடவுள் ஒருவனே என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது திருமந்திரத்தின் முதல் வரி. "உங்கள் எஜமானன் ஒருவனே" என்பது ஷிர்டி சாய்பாபாவின் முதன்மையான போதனை. இதனையே கபீரும் கூறியுள்ளார். ரிக்-வேத வரிகளும் கூறுகின்றன. "இறைவன் ஒருவன், அவன் எத்தேவையும் அற்றவன்" என்பது முஸ்லிம் குழந்தைகள் மனனம் செய்விப்பதற்கு அவர்களது தாய்மார்கள் தேர்ந்தெடுக்கும் முதல் குர்-ஆன் வரிகள். கடவுளுக்கு ஒப்பில்லையென்று வள்ளுவர் சொல்வதிலிருந்தும், வள்ளுவரும் "கடவுள் ஒருவனே" என்று கூறுபவரென அறியலாம்.

 (இந்தப் பதிவில் "உலகம்" என்ற வார்த்தையை Universe என்ற பொருளிள் பயன்படுத்துகிறேன்). உலகம் ஒரு காலப் புள்ளியில் தோன்றி இருக்கலாம் என்பது அறிவியலும் பல மத-நம்பிக்கைகளும் முன்வைக்கும் கொள்கை. இதன் அடிப்படையில் கடவுளின் "ஒருமை"ப் பற்றி, அதாவது, கடவுளின் ஒருமைத் தன்மைப் பற்றி சில சிந்தனைகள் கீழே:

"உலகம் தோன்றியதன் மூலம் மற்றும் காரண கர்த்தா கடவுளே" என்ற கருத்தினையும், "கடவுள் ஒருவன்" என்ற கருத்தினையும் சேர்த்து ஒரு நேர்கோட்டு சிந்தனை (straight forward thought), சில விஷ‌யங்களைக் கூறுகிறது.

இந்த "ஒருமை" அல்லது "ஒன்று" என்பது, நாம் மனதில் புரிந்து வைத்துள்ள "ஒன்று" என்பதாகாது. ஆனால் பாமர நிலையுள்ள பெரும்பான்மையான மக்கள் கடவுளின் "ஒருமைத் தன்மை" என்பதினை நாம் வழக்கில் பயன்படுத்தும் "ஒன்று" என்பதைப் போன்றதென்று கருதுவது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலைக்கு ஏற்றதே.

 ஏன் கடவுளின் ஒருமையும் நாம் புரிந்து வைத்துள்ள "ஒருமை" அல்லது "ஒன்று"-ம் சமமானதல்ல? சற்று சிந்திப்போம்

நாம் புரிந்து வைத்துள்ள "ஒன்று" எனும் வார்த்தை, அல்லது "ஒருமை" எனும் வார்த்தை, "பன்மை" எனும் வார்த்தையின் புரிதலினால் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, "இரண்டு" எனும் வார்தையின் அர்த்தத்தை மையப்படுத்தி, "ஒன்று" எனும் வார்தையைப் புரிந்து வைத்திருக்கின்றோம். அல்லது, "மூன்று", "நான்கு" எனும் வார்த்தைகளின் அர்த்தங்களை மையப் படுத்தி, "ஒன்று" எனும் வார்த்தையினைப் புரிந்து வைத்திருக்கின்றோம்.

 ஆனால், கடவுளின் "ஒருமை"யென்பது ஆழமானது. உலகம் "தோன்றியது" எனும் கருத்தில் நம்பிக்கை வைத்தால், கடவுளுக்கு அருகில் எதுவுமில்லை என்பது விளங்கும். எனவே "கடவுள் ஒருவன்" என்பதினைப் "பன்மை" என்பதிலிருந்து விளங்க முடியாது.

உங்களுக்கு அருகில் எந்தப் பொருட்களுமே இல்லாத நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலையில், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, நீங்கள் "ஒருவன்" என்றக் கருத்துக்குப் பொருள் உள்ளதா?

கடவுளின் ஒருமையை அவ்வளவு எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. விளங்கிக் கொள்ளும் நிலையைத்தான், சூஃபிக்கள், "மாரிஃபத்" (இறை ஞானம்) என்கிறார்கள். பெளத்தர்கள் இந்த புரிதலை, "பேருண்மையை விளங்குதல்" என்கின்றனர். ஏன் எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை நம்மால்? காரணம், நாம் பன்மையில் ஊறித் திளைக்கின்றோம். பன்மையெனும் அர்த்தத்திலிருந்துதான் ஒருமையெனும் அர்த்தத்தினை விளங்குகிறோம்.

இந்தப் பன்மையின் அர்த்தத்தினை அழிப்பதற்காகத்தான், சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், "திக்ரு" எனும் பயிற்சியினை செய்கின்றனர். உண்ணும் போதும், உறங்கும் போதும், அமர்ந்த நிலையிலும், நடக்கும் போதும், தனது மூச்சுக்காற்றினை விடும்போதும் இழுக்கும்போதும் கடவுளின் பெயர் கூறிவிடுகின்றனர். தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கவனம் செலுத்தி, அவ்வாறு நடக்கும் செயல்களில் கடவுளின் தன்மைகளைத் தேடுகின்றனர். கடவுளின் தன்மைகளாக இஸ்லாமிய நம்பிக்கை, 99 தன்மைகளைப் பட்டியல் இடுகிறது. "அளவற்ற அன்புடையவன்", "அளவற்ற அருளுடையவன்", "மன்னிப்பவன்", "தோழன்", "வழிகாட்டி" முதலியவைகள் அவனது தன்மைகளின் உதாரணங்கள். இவைகளைத் தனது சுற்று சூழலில் கவனிப்பதும் "திக்ர்"-எனும் பயிற்சியின் அங்கம். பின்பு அந்த கடவுள் தன்மைகளை அந்த மாணாக்கன் வெளிப்படுத்த முயற்சிக்கிக்கவும் அந்த "திக்ரு" அவனை வழிப்படுத்துகிறது. இந்தப் பயிற்சி அந்த மாணக்கனை பண் படுத்துகிறது. இந்தப் பயிற்சி அவனது அகந்தையினை முதலில் அழிக்கிறது. அகந்தையே அந்தப் பன்மை-மையப் புரிதலுக்கு ஊற்று.

எப்போது அந்த மாணாக்கன், பன்மை-மையப் புரிதலிலிருந்து விடுபடுகின்றானோ, அப்போது அவன் எங்கும் இறைத் தன்மைகளைக் காணுவான். குர்-ஆன் வரிப்படி, "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்".

இப்போது வஹ்ஹாபிகளின் கொள்கைப் பற்றி வருவோம். (வஹ்ஹாபிகள் பற்றி நான் பேசாமல் இருக்கவே முடியாதென்றே நினைக்கிறேன்). "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்" என்று குர் ஆன் கூறினாலும், வஹ்ஹாபிகள் இதனைப் "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் கொள்கை என்றும், அது இஸ்லாத்திற்கு விரோதமானதென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே சூஃபிக்கள் வழிக்கேடர்கள் என்றும் கூறுகின்றனர்.

வஹ்ஹாபிகளின் இந்தக் கருத்து அறிவிலித்தனமானது. சூஃபிக்கள், தனது பயிற்சியின் மூலம், தான் எனும் அகந்தையினை அழித்தப் பிறகுதான் இது அவர்கள் மனதில் நிகழ்கிரதென்பதினால், அவ்வாறு அகந்தையினை அழிக்காத பாமரனினால் சூஃபிக்களைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்க பாமரன் அவர்களை மதிப்பிட‌ முயற்சிக்கவே கூடாது. (இங்கு அகந்தை என நான் சொல்வதினை, அரபியில் நஃப்ஸ் என்று சொல்லுவார்கள்.)

இது பற்றி மேலும் சிந்திப்போம்.....

"திரும்பிய திசைகளிலெல்லாம் கடவுளின் முகத்தினைக் காண்பார்கள்" என்பதும், "பார்ப்பதெல்லாம் கடவுள்" என்பதும் ஒன்றல்ல. "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் வாக்கியம், பார்க்கும் பொருட்களை "பன்மை" என்பதினைக் கொண்டு வரையறுத்து கடவுளைப் பன்மையின் அடிப்படையிலேயே விளக்க முயச்சிக்கும் வாக்கியம். எனவே இந்த இருவாக்கியங்களும் ஒன்றுபோல தோன்றினாலும் வேறுபட்டவை. இதில் மிக கவனமாக இருக்கவேண்டும். சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், இந்த சருக்கல்களை அறிந்தவர்களே. எனவே இதனை, "கத்திமேல் நடக்கும் பாதை" என்றும் சொல்வார்கள். இந்தப் பாதையில் நடக்கும் போது மதி நுட்பத்துடன் நடக்கவேண்டும்.

இது போன்ற சருக்கல்களின் வாய்ப்பினாலேயே, முகம்மது நபி அவர்கள் இந்தப்பாதையினை தனது நெருங்கிய ஈடுபாடுகொண்ட நண்பர்களுக்கு மட்டும் போதித்தார். அலி மற்றும் அபூபக்கர் போன்றோர்கள் அந்த நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம். இருப்பினும் இந்த பாதையின் கருத்துக்கள் குர்-ஆனில் உள்ள பல வரிகளில் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன. இந்தப் பாதையில், ஒரு மாணவன் செய்யவேண்டிய பணிகள் எல்லாம், உள்ளம் சார்ந்தவை. முகம்மது நபி அவர்கள் போதித்த "ஷரியா" என்பது வெளிரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவைகள் உடை அமைப்பு, கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது. அதே சமயத்தில், உள்ளம் சம்பந்தமாக அவர்கள் கற்றுக் கொடுத்தப் பாதையில், "இறை நம்பிக்கை", "இறை யச்சம்" (அரபியில் "தக்வா") மற்றும் "இஹ்சான்" ஆகியவைகள் அம்சங்கள். இதில் "இஹ்சான்" எனும் அரபி வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இந்த "இஹ்சான்" என்பது தான் நான் இது வரை விவரித்த சூஃபி பாதை. "ஷரியா" எனும் வெளிரங்க வாழ்க்கைமுறையினை பாமரனுக்கும், அந்த ஷரியாவுடன் சேர்த்த "இஹ்சான்" அல்லது சூஃபி பாதையைச் சற்று மதி நுட்பமுடையவர்களுக்கும் என நபி அவர்கள் போதித்தார்கள்.

மேலும் சிந்திப்போம்....

இறைவனது தன்மைகள் அனைத்தும் அளவற்றது. உதாரனத்திற்கு, "அளவற்ற அருளாளன்", "அளவற்ற அன்புடையவன்", "அனைத்தையும் பார்ப்பவன்", "அனைத்தையும் கேட்பவன்". சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இறைவன் எல்லையற்றவன்.

இந்த "எல்லையற்றவன்" என்பதினைக் கருத்தில் கொண்டால், நாம் இன்னொரு சருக்கலிலிருந்தும் விடுபட முடியும். கடவுள் என்பவனை இருப்பவைகளின் தொகுப்பு என்றும் வரையறுக்கக் கூடாது. இந்த எல்லையற்றத் தன்மை என்பதினை நாம் எளிதாக உணரவே முடியாது. கணிதத்தில் "எல்லையற்றது" என ஒரு "எண்" உள்ளது. எல்லையற்றது என்பதினை பாமரன் எப்படிப் புரிந்து கொள்வான்? எல்லையற்றதிலிருந்து "இரண்டு" எண்ணைக் கழித்தால் அது மீண்டும் எல்லையற்றது என்பதினை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது, ஏனென்றால், "எல்லையற்றது" என்பதினை நாம் உணர்ந்தது கிடையாது.

கடவுளின் இந்த "ஒருமைத் தன்மை" மற்றும் "எல்லையற்றத் தன்மை" என்பதினைப் புரிவதன் முதல் படிதான் அகந்தையினை ஒழிப்பதென்பது.