.comment-link {margin-left:.6em;}

இங்கே சொல்லப்படும்

Friday, July 03, 2009

ஹாண்டுராஸில் ஒரு சீர்திருத்த கூ (Coup), ஹி ஹி

இஸ்ரேல் செய்துவரும் பாலஸ்தீன இனஒழிப்பினை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், அதற்குத் தடையாக இருக்கும் ஈரானில் சீர்திருத்தம் வேண்டி மேற்கு நாடுகள் ஆர்வத்துடன் இருந்தபோது, ஈரானில் சீர்திருத்தவாதிகளின் ஆர்பாட்டம் நிகழ்ந்தது.

ஈரான் சீர்திருத்தவாதிகள், மேற்கு விரும்பும் சீர்திருத்தத்தினைத்தானா கொண்டுவரப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், தற்போதைய அரசினை கவிழ்ப்பதில் இருவரும் ஒத்த கருத்து கொண்டுள்ளதால், மேற்கின் ஊடகங்களும் அரசுகளும், ஈரான் சீர்திருத்தவாதிகளுக்குப் பின் அணிவகுத்தன.

அமெரிக்காவால் நிறுவப்பட்ட ஷாஹ்வின் சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்ட தினத்திலிருந்து, மேற்கு நாடுகள் அனைத்தும் அகமேனியக் காலத்துக்கும் முற்பட்ட தனது பாரசீக எதிர்ப்பினை மீண்டும் துவக்கியது. அவைகள் ஏதேனும் வாய்ப்பினை எதிர்நோக்கி உள்ளன.

இந்த நிலையில், ஷாவின் வாரிசான மற்றொரு ஷா அமெரிக்காவிலிருந்து சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். ஈரானின் கலாச்சாரத்தினை Reading Lolita in Tehran எனும் நூலைக் கொண்டு தாக்கி எழுதிய, மற்றும் ஷாவின் அரசில் தனது குடும்பமே பணியாற்றிய பெருமையையுடைய, மற்றும் ஈரான் அரசு எதிர்ப்பு சிந்தனை உருவாக்க மையங்களில் (think tank) பணியாற்றுபவரும் எழுத்தாளருமான அஸார் நஃபிசி அமெரிக்காவிலிருந்து ஈரான் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். ஈரான் மீது குண்டுகள் போட ஆசித்த மெக்கெய்ன் எனும் வலதுசாரி அரசியல்வாதியும், ஈரான் நாட்டு மக்கள் மீது தான் புதுக் கவலையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.


இவ்வாறு மேற்கு நாடுகள் அனைத்தும் "ஜன நாயகம், ஜன நாயகம்" எனப் போலிக் கூக்குரலிட்டாலும் அது உலகில் ஆதரவு அளித்துவரும் சர்வாதிகாரர்கள் தான் எத்தனைப் பேர் !!

ஈரானில் 1950களில் ஜன நாயக ஆட்சியினை வீழ்த்தி 1979 வரை நீடித்த‌ ஷாவின் சர்வாதிகார முடியாட்சியினை ஏற்படுத்தியது யார் ? தற்போது அவர்கள் ஆதரவு அளித்துவரும், எகிப்தின் முபாரக் யார் ?

மேலும் கடாஃபி யார் ?

மேலும் கஸக்ஸ்தான் அதிபர் யார் ?

ஜோர்டான் மன்னர் யார் ?

கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் மன்னர்கள் யார் ?

மேலும் ஈராக்கின் மாலிக்கியும், ஆஃகானிஸ்தானின் கர்சாயும் நேர்மையான தேர்தலில் தான் வந்தவர்களா ?

பெரு நாட்டில் நடப்பது என்ன ? அங்கு அரசினை எதிர்த்துப் போராடிய பூர்வீக குடிமக்கள் மேற்கு சார்பு ஐரோப்பியர்களின் அரசால் நூற்றுக் கணக்கில் சுட்டுகொல்லப்பட்டதை மீடியாக்கள் எப்படி மூடி மறைத்தன ? அவைகளை ஈரான் வீச்சு அளவிற்காவது பரப்பினார்களா ?

தற்போது ஹாண்டுராசில் நடந்துள்ள, மேற்கு-ஆதரவு இராணுவப்-புரட்சியை ஊடகங்கள் எப்படி மிருதுவாக காண்கிறது ? அல்லது அதற்கு மீடியாக்கள் தரும் முக்கியத்துவம் தான் என்ன ?

சிந்தியுங்கள். ஹாண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் வந்துள்ள அதிபர் தனக்கு இஸ்ரேல் மற்றும் தைவானின் துணை இருந்ததாகக் கூறுகிறார். முந்தைய அதிபர் மக்கள் நலன் சார்ந்து அமெரிக்க மற்றும் மேற்குக் கம்பெனிகளுக்கு எதிர் உள்ளம் கொண்டவர். மக்கள் நலன் சார்ந்த மற்றைய சில நாடுகளின் அதிபர்களான சாவேஸ், மொராலஸ் போன்றவர்களின் ஆதவினைப் பெற்றவர்.

மேற்கின் ஜனநாயகம் புல்லரிக்கின்றது

Thursday, June 25, 2009

பிபிசி தனது புரட்டினை ஒப்புக்கொண்டுள்ளது

ஈரான் தேர்தல் பற்றியும் அங்கு நிகழும் போராட்டங்கள் பற்றியும் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையைச்சார்ந்த நோக்கங்களின் அடிப்படையில் பிபிசி நிறுவனம் செய்திகளை பூரட்டுகளாக மாற்றி வெளியிட்டுவந்தது.

போராட்டங்களின் உண்மைத் தன்மைப் பற்றி 'கார்டியன்' மற்றும் 'டைம்' பத்திரிக்கைகளில் எழுதும் சில பத்திரிக்கையாளர்கள் மூலமாகவும் (இந்த பக்கங்களுக்குச் செல்ல, www.pulsemedia.org எனும் வலைத்தளத்தில் உள்ள பதிவுகளின் மூலமாக செல்லவும்) , மற்றும் பல வலைப்பதிவுகளில் வெளியாகும் செய்திகள் மூலமாகவும் நாம் அறிய முடிந்து, பிபிசியின் சொல்லாடல்களையும் அது மறைக்கும் செய்திகளையும் அறிய முடிந்தது.

அதனது ஒரு செய்தியில் அகமதினேஜாதின் பொதுக்கூட்டத்தினைக் காட்டும் புகைப்படத்தினை வெளியிட்டு, ஆனால் அது அவரது எதிராளரான மெளசவியின் (Mousavi) கூட்டம் எனப் புரட்டியிருந்தது.

அதனை பல வலைப் பதிவர்கள் கண்டுபிடித்து வெளியில் கொணர்ந்ததும், வேறு வழியின்றி பிபிசி அந்த புரட்டினைத் தவறென்று ஒத்துக்கொண்டுள்ளது. அதனை ஒத்துக் கொண்டு அதன் ஆசிரியர்களில் ஒருவர் தனது பிபிசி வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மையில் பிபிசி நேர்மையானதாக இருந்தால் இதனைத் தனது செய்திகள் பிரிவில் வெளியிட்டிருக்கவேண்டும். ஏனெனில் செய்திகள் பிரிவுக்கு செல்லும் வாசகர்கள் அதனது வலைப்பதிவு பிரிவுக்கு செல்லமாட்டார்கள். வேண்டுமானால் மிகக் குறைவானவர்கள் மட்டுமே செல்வர்.

பிபிசியின் இத்தகைய புரட்டுகளால் அதனது பத்திரிக்கையாளர் ஒருவரை ஈரான் வெளியேறச் சொன்னது. உடனே பிபிசி உட்பட்ட பலசெய்தி நிறுவனங்கள், ஈரான் தனது குடிமக்களுக்கு செய்திகளை மறுக்கிறதென்று கூக்குரலிட்டன. ஆனால் அதே பிபிசி உள்ளிட்ட நிறுவனங்கள் ஈரானில் அதிக அதிகாரங்கள் படைத்த 'கமெனி'யின் பேச்சினை முழுமையாக வெளியிடவில்லை. இவ்வாறு அவைகள் உலக மக்களுக்கு செய்திகளை மறுக்கின்றன. இத்தனைக்கும், ஈரானில் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து நேற்றுவரை பிபிசி தளத்தில் தலைப்புச் செய்தியாக ஈரான் செய்தியே இடம்பெற்றிருந்தது. இருப்பினும் கமெனியின் ஓரிரு வாசங்களைத் தவிர மற்ற வாசங்களை அது முழுங்கிவிட்டது.

Thursday, June 18, 2009

"மேம்படுத்தப்பட்ட" சிந்தனைகளும், அதை ஒத்த சிலவைகளும்

மேற்கு எனும் சொல்லிற்கு 'மேலை' அல்லது 'மேல்' எனும் சொற்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். எனவே தான் இந்த தலைப்பு. வெறுமனே "மேற்கத்திய சிந்தனை" என்றால் மேற்கில் வாழ்பவர்களின் சிந்தனை என்றாகிவிடும். நான் சொல்ல வருவது அதுவல்ல. நான் சொல்லவருவது, 'மேற்கத்துவப்படுத்தப்பட்ட சிந்தனைகள்' பற்றி.

இத்தகைய சிந்தனைகள் மேற்கத்தியர்களல்லாத பலரிடமும் உள்ளதால் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.

1. ஜன நாயகம். இதை மேற்கத்தியவர்கள் கண்டறிந்ததாகக் கருதி அவர்களை வியந்து நோக்குவது.

2. வழிபாட்டு உரிமைகள். இதில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் மிகச் சிறந்து விளங்கிவதாகக் கருதுவது. ஒருவரது வழிபாட்டு சமயத்திற்காக அவர் ஏதோ என்றுமே பெரும்பான்மை சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுவதில்லை எனக் கருதுவது. அவ்வாறு கருதுவது சில சமயங்களில் வேண்டுமானால் பொறுத்தமாக இருக்கும். மேற்கத்திய பெரும்பான்மைச் சமூகம் கேள்விபடாத அல்லது சற்று வினோதமான மாற்று வழிபாட்டுச் சமயங்கள் வேண்டுமானால் வழிபாட்டு உரிமைகளை அனுபவிக்கலாம்.

3. கருத்துச் சுதந்திரம். இது ஏதோ மேற்கில் சிறந்து விளங்குவதாகக் கருதுவது. 'ஹோலோகாஸ்ட்' பற்றி கேள்வி எழுப்பினாலே போதும். 15 வருடங்கள் அல்லது 30 வருடங்கள் எனக் கம்பி எண்ண வேண்டியதுதான். அப்படி எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். அல்லது மேற்கத்திய‌ ஆட்சியாளர்களைப் பற்றியோ அரசக் குடும்பத்தினரைப் பற்றியோ ஒரு கார்டூன் வரைந்துப் பாருங்கள். தெரியும் அவர்களது கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று. அமெரிக்காவில் இஸ்ரேலினை விமர்சித்து ஒரு கருத்தரங்கு நடத்த ஒரு கூடத்தினை உங்களால் முன்பதிவு செய்ய முடியுமா ? அல்லது அப்படியே முடிந்தாலும் நீங்கள் அதனை நடத்துவதற்கு முன்பாக, அக் கூட அமைப்பாளர்களால் அம் முற்பதிவு நீக்கம் பெறாமல் இருக்குமா ? பெரும்பாலும் இத்தகைய சமயங்களில் எவ்வாறு நிகழ்ந்துள்ளது எனப் பார்க்க வேண்டும்.

4. ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை. பெண்களுக்கான சம உரிமையைப் போல இதை ஏதோ மனிதனின் அடிப்படை உரிமையைப் போலக் கருதுவது. ஒரு நாட்டின் பொதுவான உரிமைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம், இந்த உரிமையைப் பற்றியும் கேள்வி எழுப்புவது. ஓரினச் சேர்க்கை என்பது தொன்று தொட்ட மேற்கத்திய கலாச்சாரம் சார்ந்தது என்பதை மேல்நோக்கிவிட்டு, இதன் மீதான காப்பு அவர்களது கலாச்சாரத்தின் மீதான அவர்களது காப்பு என்பதினை மறந்துவிட்டு இது ஏதோ அடிப்படையான உரிமை எனக் கருதுவது.


5. மதுவினை விருந்துகளில் வழங்குவதை ஒரு ஃபார்மலாகக் கருதுவது. மது அருந்துவது வேண்டுமானால் உலகின் பல பகுதிகளிலும் இருந்திருக்கலாம். ஆனால் பலரும் கூடும் விருந்துபச்சார நிகழ்ச்சியில் இதனை சாதரணமாக வழங்குவதை ஏற்றுக் கொள்ளும் போக்கு. ( நமது இந்தியாவில், இதை வழங்குவார்கள் ஆனால் அசைவ உணவுகள் வழங்க மாட்டார்கள். அப்போது கலாச்சாரம் பேசுவார்கள் ! )

Monday, June 15, 2009

ஈரான் தேர்தல்-பிபிசியின் வயிற்றெரிச்சல்

ஈரானில் நடந்து முடிந்த தேர்தல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

மேற்குலக நாடுகள் இஸ்ரேல் சார்பாக அணிதிரண்டிருக்க, மத்தியகிழக்கு நாடுகளிலும் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் சார்பான அரசியல்கொள்கைகளைக் கொண்டிருக்க, ஈரான் மற்றும் சிரியா மட்டுமே சற்று மாற்றுக் கொள்கை கொண்டுள்ளன. எனவே, பலம் ரீதியாக ஈரான் அவர்களுக்கு இணையாக முடியாதெனினும், அதன் மாற்றுக்கொள்கையினால் உலக அரங்கில் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாகிறது.

அதில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்று அஹமதினேஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு மரபுவழியாளர். இருப்பினும் பெரும்பாலான அரபு நாடுகளில் உள்ள மரபு வழியாளர்களைப் போலல்லாமல் வக்கிரசிந்தனைகளை விலக்கியவர். இது ஈரான் வாழ் மரபுவழியாளர்கள் அனைவர்களிடமும் உள்ள ஒரு பண்பு. அரபு நாடுகளில் மட்டுமே தனது கலாச்சாரம் ஒட்டிய வக்கிர சிந்தனைகளை தூய இஸ்லாத்துடன் கலந்து மக்களை அடிபணியச்செய்து முடியாட்சிகளை இஸ்லாத்தின் பெயரால் நிறுவி இஸ்ரேல் சார்பு அரசினை நடத்தி வருகிறார்கள்.

ஈரானிலோ தேர்தல் முறை அமலில் உள்ளது.

எங்கே ஈரானைப் பார்த்து தனது நாட்டு மக்களும் ஜனநாயக முறைக்கு மாற்றம் வேண்டி புரட்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயத்தில், அரபு நாட்டு ஆட்சியாளர்கள் தங்களது குடி மக்களிடம், வைதீக மற்றும் ஷியா பிரிவுகள் சார்ந்த‌ பேதங்களையும், அரபு மற்றும் பாரசீக பிரிவு சார்ந்த பேதங்களையும் புகட்டி கவனத்தினை திசைத்திருப்பி வருகிறார்கள். இருப்பினும் பலரும் ஈரான் கலை, அறிவியல் இலக்கியத் துறைகளில் அடைந்து வரும் முன்னேற்றத்தினை கவனிக்காமல் போகிறார்களில்லை.

'ஈரானில் சீர்திருத்தவாதிகளே வெற்றிபெறுவார்கள்' என பிபிசி போன்ற மேற்குலக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அதற்கு காரணமே, அவ்வாறில்லாமல் மரபுவழியாளர்கள் வெற்றிபெற்றால், 'தேர்தல் குறையுள்ளது' எனும் சீர்திருத்தவாதிகளின் கூட்டுக் கூச்சலை பரப்பும்போது ஆமோதிக்கப்படும் என்பதே.

அதேபோல் மரபுவழியாளரான அஹமதினேஜாத் வெற்றி பெற்றுவிட்டார். உடனே பிபிசி போடும் கூச்சல் தாங்க முடியவில்லை. நீங்களே சென்று பாருங்கள். அதன் தொடர்ச்சியான செய்திகள் அனைத்தும் இஸ்ரேல் பிரதமரின் மனக் கருத்தினைப் போலுள்ளது.

உதாரணத்திற்கு இந்த செய்தியப் பாருங்கள்: Iranian protesters call off rally அதில் செய்தியைத் தவிர பிபிசி தனது அபிப்ராயத்தினையும் கலந்துள்ளது. "The BBC understands that Mr Mousavi called off the rally after being warned that militias policing it would be equipped with live rounds" :))

அதே செய்தியில் மேலும் ஒரு இடத்தில், "The BBC's Jon Leyne, in Tehran, says he understands plain-clothed militias had been authorised to use live ammunition for the first time. ", என்று தனது கருத்தினை செய்தியுடன் சேர்த்து கூடு கட்டியுள்ளது.

சீர்திருத்தவாதிகள் ஒன்றும் மோசமானவர்களில்லை. ஆனால் எனது பார்வையில் அஹமதினேஜாத் தற்போதைய உலக அரங்கில் தேவையானவர்.

மத்திய கிழக்கு அரசியல் பற்றி எழுதும் முதுபெரும் பத்திரிக்கையாளர், ராபர்ட் ஃபிஸ்க்கின் கட்டுரையை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இந்த இணையதளம் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

Tuesday, May 19, 2009

ஈழ இனவெறிக் காற்றுப் பைகளின் புறப்பாடு

இந்த நேரத்தில் பல பழமொழிகள் நினைவுக்கு வருகிறது.

'அவர்களது காசினைக் கொண்டே அவர்களுக்கு கட்டணம் செலுத்தப் பட்டது',

'அவர்களது மொழியில் பேசப்பட்டது',

'தன் வினைத் தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்',

'வினை விதைத்தவன் வினையறுப்பான்',

'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்', ....


கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்து தலையங்கம்:


End of the war

The Sri Lankan armed forces have won a comprehensive victory over the Liberation Tigers of Tamil Eelam in a military campaign that began in the eastern province in August 2006. With its entire top leadership and thousands of fighting cadres killed in action, its military structure, assets, and capabilities destroyed, its political organisation decimated, the LTTE no longer exists as a military force. Belying conventional wisdom, Sri Lanka has found a military solution to w hat used to be regarded as an intractable armed secessionist and terrorist challenge. There is something poignant about the way in which the low-intensity conflict — which was waged over a quarter of a century and claimed tens of thousands of lives — has ended. The images of terrified children, women, and men fleeing the tiny sliver of coastal land in which they were confined by the Tigers for use as a human shield, and of a tractor load of bodies of senior LTTE leaders who made a final hopeless stand for a lost cause will continue to haunt the memories of journalists and others who witnessed these scenes. It might have been very different had an organisation that started out, in the 1970s, with some kind of emancipatory political vision and even idealism not turned Pol Potist in its extremism, cruelty, and horrific disregard for human life and welfare.

As the years went by and numerous proposals for a negotiated political solution fell by the wayside, the one thing that remained constant was the LTTE’s uncompromising secessionism and militarism, and the rising graph of its terrorist crimes, which included the assassination of a former Indian Prime Minister, a Sri Lankan President, a Foreign Minister, a presidential contender, and numerous democratic Tamil leaders, the massacre of Sinhala and Muslim civilians, ethnic cleansing, child conscription, and economic offences of various kinds. The ceasefire agreement of February 2002 represented a historic opportunity to break with the past. Tragically, the LTTE, seeing it mainly as an opportunity to re-arm itself and strengthen its parallel state structure in the territory it controlled, did everything conceivable to make the peace process falter and fail. “It was worse than a crime, a blunder,” is a Napoleonic era saying attributed to Talleyrand. If the May 1991 assassination of Rajiv Gandhi in Sriperumbudur by an LTTE squad dispatched by V. Prabakaran made a permanent enemy of India, the boycott enforced in the LTTE-controlled areas during the November 2005 presidential election, which facilitated Mahinda Rajapaksa’s victory over ceasefire-architect Ranil Wickremasinghe in a close contest, was an akratic act that defied all rational explanation. President Rajapaksa has achieved what no previous Sri Lankan leader came close to doing: securing the integrity and sovereignty of Sri Lanka by freeing it from the malevolent challenge of the LTTE. Now, in the post-Prabakaran era, he needs to address two big tasks: rehabilitation of hundreds of thousands of Tamils who have been through a prolonged nightmare, and crafting an enduring political solution based on far-going devolution of power to the Tamils in their areas of historical habitation. India, which has excellent relations with its southern neighbour, can make a constructive difference by coming up with a massive rehabilitation package for the North and encouraging Colombo to fast-track the political solution.


Thanks: The Hindu

Monday, March 16, 2009

'மகனே, முகம்மது நபி ஆடு வளர்த்தார்...'

யஹ்யா வாஹித் என்பவர் நான்கு பகுதிகளாக எழுதிய தொடருக்கு வந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில் யாரோ ஒரு 'சோனி' (அது இலங்கை முஸ்லீம்களைக் குறிக்கும் இனப் பெயர் என நினைக்கிறேன்) எழுதிய விமர்சனத்திற்கு, அவரது பதில் என்னைக் கவர்ந்திருந்தது.

உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

பலவாறு துன்புற்றிருக்கும் மக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ பொருளாதாரத்தினைப் பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என அவரது கட்டுரையில் காணப்படும் கருத்து சற்று மாறுபட்டது. ஆனால் "எனது கலாச்சாரம்", "எனது தமிழ்" என துயரையே நாடுபவர்கள் சற்று சிந்திக்கவேண்டும்.

அவரது கிளினொச்சி அனுபவம் சற்று நம்மையும் அனுபவிக்கச் செய்கிறது.

வடக்கு எதிர் கிழக்கு

-யஹியா வாஸித்-

languageபத்தாவது முறை தடுக்கி விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு சொன்னாள். மகனே ஏற்கனவே ஓன்பது முறை தடுக்கி விழுந்தவனல்லவா நீ. டோன்ட் வொறி புறப்படு. அது போல்தான் எங்கள் தலைவர் தடுக்கி விழுந்துள்ளார். வீறுகொண்டெழுவார் என புலி ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டு தவமிருக்கின்றனர். நிச்சயமாக தலைவர் எழும்ப வேண்டும் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது பிரார்த்தனையும். அப்போதுதான் நடக்க இருப்பவை நல்லதாகவே நடக்கும். நான் கிழக்கு மாகாண மக்களுக்கு என எழுதிவரும் கட்டுரைகளைப் பார்த்து விட்டு பலர் பல விதமான அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தனர். சிலது. சரி மொத்த யாழ்ப்பாணிக்கும் ஒரு காக்கா வைக்கிறான்டா ஆப்பு என சந்தோஷப்பட்டும், இன்னும் பலர் நாங்க என்ன கிழக்கு மாகாணத்தவர்கள் எண்டா சும்மாவா எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு என்றும், இன்னும் சிலர் இதைப் பார்க்கும் போது யாழ்ப்பாண அந்த செந்நிற இருவாட்டி மண்ணும் ஒரு காலத்தில் சளைத்ததல்ல என்றும் தூது விட்டிருந்தனர்.

தரப்படுத்தல் என்ற ஒன்று வந்ததனால் தான் கிழக்கு மாகாண மொத்த மக்களும் நன்மை அடைந்தார்கள் என்பதை முதலில் கிழக்கு மாகாணத்தவர்கள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாணி 3ஏ.1பீ எடுத்து பீஎஸ்ஸி போக தடுமாறிய போது கிழக்கு மாகாணத்தவர்கள் 3சீ மட்டுமே எடுத்து மெடிக்கல் கொளேஜ் போக வைத்த புண்ணியம் இந்த தரப்படுத்தல் என்ற வைரசுக்கு உண்டு. இப்போது வீட்டுக்கு ஒரு டாக்குத்தர் தெருவுக்கு நாலு இன்ஜீனியர், கூப்பிட்ட குரலுக்கு எக்கவுண்டன். தடுக்கி விழுந்தால் டபுள் மெட்ஸ் ரீச்சர், என்ட புள்ள சவுதில கெமிக்கல் இன்ஜினியர், அவன் மச்சான் இப்ப நாசாவில வேலை செய்கின்றான் மச்சான் என்று கிழக்கு மாகாண மக்கள் பீத்திக் கொள்வதற்கு முழு முதற் காரணம் இந்த யாழ்ப்பாணிகளே.

யாழ்ப்பாணி யாழ்ப்பாணிக்கு ஏசுவான், பேசுவான் அதில் தலையிட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்குள் சைவ, வெள்ளாள என்று தொடங்கி பல ஆயிரம் “வடு”க்கள் இருக்கின்றது. அதில் தலையிட எமக்கு எந்த உரிமையும் கிடையாது. அதற்குரிய தகுதியும் எமக்கு இல்லை.அது அவர்களின் உள் வீட்டுப் பிரச்சனை. சக்களத்திச் சண்டை சமாதானம் ஆகி விடுவார்கள். சமரசம் செய்து கொள்வார்கள். பரம்பரைச் சண்டையல்ல இது .நாளைக்கே சமாதானம் ஆகி விடுவார்கள். இப்போது சைவ வெள்ளாளருக்கு திட்டும் அனைவரும் அவன்ட ஆங்கில கிறித்துவ மிஷனறியில ரியுஷன் எடுத்தவர்கள்தான்.

ஆரோக்கியமாக எல்லோரும் அரசியல் செய்தவர்கள்தான.; இந்திய “ரோ” வந்து அவர்களை கண்டந் துண்டமாக சாமியாட வைத்து விட்டது. எனது இஸ்லாம் சமயத்தில் சிலை வணக்கம், சாமி கும்பிடுவது என்பன தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி இருக்கு மானால், என்னைப் படைத்த அவ்வாஹ், என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு அடுத்ததாக ஒவ்வொரு யாழ்ப்பாணியின் காலடி மண்ணெடுத்து சாம்பலாக்கி என் உடம்பெல்லாம் பூசி தில்லையம்பலத்தானுடன் தத்தோம். தத்தோம். தித்தோம், தரிகிடதோம் என சாமி ஆடியிருப்பேன்.

அங்கே நிறைய படிக்க இருக்கிறது சகோதரர்களே. நாம் கடுகளவை வைத்துக் கொண்டு குதிக்க வேண்டியதில்லை. அங்கே உலகளவு உலகளவு சரக்கிருக்கிரது. நானும் விபரம் புரியாமல் “பனங்கொட்டை சூப்பி”கள் எனத் திட்டியவன்தான். நான் அங்கே திட்டின போது அவன் பனங்கொட்டையை பிளந்து சைக்கிளுக்கு “டைனமோ” மோட்டார் பைக்கிற்கு எரிபொருள் என அதை மாற்றிக் கொண்டிருந்தான் நண்பர்களே. யாழ் வெலிங்டன் தியேட்டர் அச்சகத்தடியில் செட்டிக்கு தண்ணி தெளித்தெதிலிருந்து மட்டக்களப்பில் நாக படைக்கு (வாசு தேவன், வாம தேவன்) அவர்கள் பாலுற்றிய போதெல்லாம் கிட்ட இருந்து பார்த்தவன், சாண்டோ சங்கர தாஸ் என்கின்ற மட்டக்களப்பபு இரும்பு மனிதனின் தாய்வழி மாமாவிடம் நம்ம அரசியல் ஆய்வாளர் சிவராம் இங்கிலீசு படித்த (இந்த அரசியல் சரிப்பட்டு வராதுப்பா) காலத்திலிருந்து போன வாரம் வேம்படி மகளிர் மகா வித்தியாலய இரண்டாவது பில்டிங், இரண்டாவது மாடியில் இரண்டு மேசைகளை அடுக்கி ஏறி நின்று சினைப்பரால் குறிபார்த்து ஈ.பி.ஆர்.எல்.எப். சுபத்திரனை எய்ம் வைத்தது வரை புரோட்டன். நியூத்திரன், இலத்திரன் அளவு இல்லா விட்டாலும் அணுவிலும் அணுவளவு கிட்ட இருந்து பார்த்தவன் அன்பர்களே.

சோனிகளின் தடங்களைப் புரட்டிப் பார்.அங்கே யுத்த சாயல்கள்தான் வீசும் என ஒரு சோனிக்காக்கா எழுதி இருந்தார். வாப்பா.தம்பி,மகனே முகம்மது நபி ஆடு வளர்த்தார், வியாபாரம் செய்தார், சக்காத் (தர்மம் )கொடுத்தார், நோன்பு (விரதம்) பிடித்தார், தியானம் செய்தார், மக்களை நன்மையின் பால் அழைத்தார் என முப்பது அத்தியாயங்கள் இருக்கிறதே வாப்பா. அதை படியுங்கோ வாப்பா.

பிளீஸ் நீங்கள் இப்போது தண்ணீரைத்தான் ஊற்றினாலும் அது அந்த மக்களுக்கு பெற்றோலாகத்தான் தெரியும். ஆறுதல்,ஆறுதல ;ஆறுதல் ஒன்றைத்தவிர வேறு எந்த ஒத்தடமும அந்த யாழ் புண்ணியவான்களுக்கு தேவையில்லை. இது முள்ளில் விழுந்த சேலை அவர்கள் ரொம்பசாதுரியமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் பொறுமையின் கடல் நண்பர்களே.அவர்களின் தவங்களுக்கு முன்னால் நாம் நேற்று முளைத்த காளான்கள்.

யாழ் பொ.அம்பலவாணர் தொடங்கி கோண்டாவில் கிழக்கு வரையும், மெட்ராஸ் ஏ.வி.எம். ஸ்ருடியோ முதல் அண்ணா சாலை சாந்தி தியேட்டர் வரை என்னை இந்த மகா முட்டாளை சைக்கிள் கெரியரில் வைத்துக் கொண்டு வேர்க்க விறு விறுக்க சைக்கிள் உழக்கிய ஒரு யாழ்ப்பாணச்சியின் பிள்ளையிடம் கொஞ்ச நாள் வளர்ந்தவன் நான். யா அல்லாஹ். நாற்பது தளபதிகள், ஆயிரத்தெட்டு எடுபிடிகள், பத்தாயிரம் பத்தாயிரமாக நோட்டுக் கட்டுகளுடன் சிறுசுகள் குதிக்கும் போது அந்த தலைவன் இவர்களுக்கு இரவு சாப்பாட்டுக்கு சாப்பாட்டு மூட்டை தூக்கிக் கொண்டிருந்தான். அவனைப் போல் பிள்ளைகளைப் பெற்ற பல லட்சம் யாழ்ப்பாணச்சிகளை பாதை திறக்காத போது இரண்டு வெள்ளையனுடன் வன்னிக்குள்ளால புஸ் பைக்கிளில் போய் தரிசித்திருக்கின்றேன்.

ஆம் இல்மனைட்டுக்கு விலை பேசப் போன காலமது. (அங்கேயும் காக்கா பிஸ்னசுக்குத்தான் போயிருக்கானா ?) அப்புறம் பாதை திறந்து இரண்டு மாதத்தில் ஒரு அந்தி சாயும் வேளை ரோட் குளோஸ.; தம்பிகளின் செக்பொயின்ட்டுல நைட்டு நிற்கும் போது புல் தண்ணியில ஆய்வாளரும் (சாண்டோ சங்கரதாஸ் வீட்டு கொல்லையில ஒழித்த அதே சிவராம்) நின்றிருந்தார். வன்னிக்குள்ள போய் “சைற்” எடுத்துப் போட்டு வாற நேரம் அது.அதற்கு நான்கு மாதத்துக்கப்புறம் தான் நம்ம சரிநிகரில்லாத அண்ணா (அப்பனே சிவ சிவா) “சைற்” எடுத்திருந்தார். கிளிநொச்சியில இப்போதைய பொலீஸ் பொறுப்பாளர்pன் புத்தகக்கடைக்கு முன்னால் உள்ள சாப்பாட்டுக் கடையே சரணம் அய்யப்பா.

கிழக்கு மாகாணத்தை பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறாரே எங்களிடமும் கடல் வளம் இருக்கு என “இராஜ்குமார்” குத்திக் காட்டியிருந்தார். இராஜ்குமார் அண்ணா மயிலிட்டியில் இருந்து 14 ஹோஸ் பவர் இன்ஜின் பொருத்திய 18 அடி பைபர் கிளாஸ் போர்ட்டில் 70 நிமிடத்தில் வேளாங்கண்ணி போன அனுபவமும் உண்டண்ணா. வேலணை நாங்கள் பெண்ணெடுத்த ஊர் அண்ணா. கணவாய்கறி எங்கட ராத்தாக்கள் சமைப்பதைவிட வேலணைக்காறியின்ட கைபட்டால்தான் அதற்கு மவுசண்ணா. மன்னார் நானாட்டான் நாங்கள் எக்கவுண்ட்ஸ் ரியுஷன் கொடுத்த ஊர் அண்ணா. மன்னார் நறுவிலுக்குளம் நண்டை கொண்டுவந்து நீர்கொழும்பு “சன் றைஸ் ஹோட்டலில்” ஜப்பான் காறனுக்கு விலை பேசிய அனுபவமும் உண்டண்ணா. சும்மா ஊருல மாடுமேய்த்துக் கொண்டிருந்த என்னை கூட்டிக் கொண்டு போய் கொல்லும் தூரம், செல்லும் தூரம் எல்லாம் சொல்லித்தந்து (ஷோபாசக்தி மன்னிப்பாராக) இப்போது சொல்லணா பொதிகளைச் சுமக்க வைத்துப் போட்டாங்கண்ணா. அதனால இப்ப உங்களோட நாங்க ரொம்ப கோபமாக இருக்கிறோம் அண்ணா. நீங்க இந்த ஆயுத கலாச்சாரத்தை விட்டுட்டு வாங்கோண்ணா. அப்புறம் கோண்டாவில் புகையிலைக்கும், கொக்குவில் சுருட்டுக்கும் உலக சந்தையில் விலை பேசுவோம் அண்ணா (எனக்கு எழுத்தறிவித்த புன்னாலைக்கடடுவன் சோதிலிங்கம் வாத்தியாருக்கே எல்லாப் புகழும் போய் சேரும் ) அந்த மனுஷன் சொன்னான் டேய் நாசமறுவா மாட்டு சாணியை எருவாக்கலாம்,அதனால் ஊது பத்தி செய்யலாம்,காயவைத்து அடுப்பெரிக்கலாம், தோலை செருப்பு யாவாரிக்கு விக்கலாம், இறைச்சியை காக்காமாருக்கு விற்கலாம், முள்ளை சீனி வியாபாரிக்கு விற்கலாம். மொத்தமாக மாடு மேய்ப்பது நல்ல தொழில்டா என்று படிச்சி படிச்சி சொன்னான். ஹ்ம்ம்ம்…

பாதை திறந்தவுடன் காசை காசென்று பார்காமல் 11 லட்சம் ரூபா கொடுத்து வாங்கிய டொயாட்டா ஹைஏஸ் வேனில் இரண்டாவதாகப் போன அனுபவமும் உண்டண்ணா.நண்பருக்கு வாங்கிச் சென்ற மூன்று கேஷ் குக்கர்களில் ஒன்றைத் தண்டமாக கொடுத்து விட்டு இரண்டுக்கு ஐயாயிரம் ரூபா பைன் கட்டிய அனுபவமும் உண்டண்ணா. இடை வெளியில் குட்டிக் குட்டிப் பையன்களிடம் “இரண்டு ரூபாவுக்கு ஒரு கவளம்”பாலைப் பழம் வாங்கித் தின்ற அனுபவமும் இனிக்குதண்ணா. வேனுக்குள்ள கிடந்த “கார்பட்”டை கிளி நொச்சியில் தாரைவார்த்த கதையைச் சொல்லி அழ நேரமில்லை போங்கண்ணா.

செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத நான் ஐ.நா.உயர் அதிகாரிகளின் தாய்.பிள்ளைகளுடன் சில,பல சமயம் ஈவினிங் பார்ட்டிகளில் கலக்க முடிகின்றது என்றால் அதற்கு முழு முதற்காரணம் எனக்கு வர்த்தகத்தை வரிக்கு வரி சொல்லித் தந்த அந்த தேவச்சந்திரன், அந்த வரதராசன் போன்ற பனங்கொட்டைகளையே சாரும்.( யாழ்ப்பாண மக்களே பிளீஸ் மன்னித்து விடுங்கள். உங்களை சந்தோஷமாகப் பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை ஐயன்மீர்)

Sunday, March 15, 2009

புலம்பெயர் தமிழர்களிடம் கேட்கப்படும் கேள்விகள்

இங்கு நான் காப்பி பேஸ்ட் செய்திருக்கும் கேள்விகள் பலவைகளும் பலராலும் பல சமயங்களில் சுட்டிக் காட்டப்பட்டவைகள் தான். ஆனால் அவைகளைப் பற்றிய கவனத்தினை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டியது அவசியம். ஏனெனில் இவைகளைக் கண்டும் காணாமல் இரைச்சலை மட்டுமே எங்கும் ஏற்படுத்தப்படும் நிலையைக் காண முடிகிறது.

என்னதான் நியாயம்?

ஏயெம்.ஹஸன் அலி சவூதியிலிருந்து

இதோ! இலங்கை இராணுவம் கன கச்சிதமாக தமது காரியத்தை முடித்து கரைசேர வெகு நாளில்லை வெகு தொலைவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தாயகம் என்றும் தமிழ் மண் என்றும் தொப்பிள் கொடி உறவுகள் என்றும் பிதற்றிக் கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களிடமும் புலம் பெயராது தம் வார்த்தைகளை மட்டும் நா பிறழ விட்டுக் கொண்டிருக்கும் ஏனையவர்களிடமும் என் மனக் கிடக்கையிலிருந்தெழும் சில கேள்விகளுக்கான விடைகளைக் காணத் துடிக்கின்றேன்.

இலங்கையரசு இனப் படுகொலை புரிவதோடு இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்கிறது என்றால்….அன்று வடக்கிலும் கிழக்கிலும் ஆதி தொட்டு வாழ்ந்து வந்த முஸ்லிம் சோதரங்களை பதறப் பதற கதறக் கதற வெளியேற்றிய நிகழ்வை என்னவென்று கூறுவது?

பாதுகாப்பு வலயங்கள் மீதும் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படும் வெடித்தாக்குதல்களை நிறுத்துமாறும் இது சர்வதேச யுத்த விதிகளுக்கு முரணானது எனவும் கூறுவது எந்தளவிற்கு சரியானது என்பதை உணர்கிறீர்களோ அந்தளவிற்கு மத ஸ்தலங்களிலும் அதனுடன் ஒன்றிப் பிணைந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளும் நிராயுதபாணிகளிடம் தமது வீரத்தைக் காண்பிப்பது எந்தளவிற்கு நியாயம்?

யுத்த நிறுத்த காலத்தின் இறுதிக்கட்டத்திலும் நான்காவது ஈழப் போரென தங்களால் வர்ணிக்கப்படும் இவ் இறுதி யுத்தத்தின் ஆரம்பத்திலும் குறிப்பாக வடக்கு வாழ் தமிழ் மக்களில் குடுகுடு வயதையுடைய பாட்டிகளின் கைகளிலும் பால் மணம் மாறாச் சிறார்களின் கைகளிலும் ஏ.கே.47 மனித கொல்லிகளை கொடுத்து யாவருக்கும் பயிற்சியும் கொடுத்துள்ளோம் என்று புகைப்படங்களுடன் செய்தி வெளியி;டீர்களே…அப்படியானால் அங்கு வாழ்கின்ற அனைவரும் ஆயுதம் ஏந்தியவர்கள் என்று தானே அர்த்தம்…? ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களைத்தானே அரசு ஒடுக்க நினைக்கிறது. இதிலென்ன தவறு?

பேரலை அனர்த்தத்திற்காக பிறநாட்டு நிறுவனங்கள் ஏனைய கரையோர மாவட்டங்களில் ஆற்றியுள்ள பணிகளானது எமது அரசினாலும் எமது வாக்குகளை விழுங்கி இன்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் ஏன் வாக்குக் கேட்டு தோற்றுப் போய் காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்து எம். பீ. பதவிகளை நாறடித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு கனவானாலும் கூட இத்தனை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடித்து விட முடியாதளவிற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற போது….வட மாகாணத்தில் அதிலும் பெரிய ஐயாவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சேவையாற்றவென சென்ற பிறநாட்டு நிறுவனங்களால் ஆற்றப்பட்ட பணிகள்தான் என்ன? மக்களுக்காக சேவை செய்யவென சென்ற இவ் அமைப்புக்களெல்லாம் யாருக்கு என்ன செய்தன?

சமாதான காலத்தில் போருக்குத் தேவையான தளபாடங்களை வாங்கிக் குவித்து விட வேண்டுமென்ற அவாவிலா தமது போராளிகளுக்கான சீருடையையும் காலணியையும் மறந்து விட்டார்கள்?? அல்லது தமிழினத்தின் காவலன் என்ற பசுத்தோலை போர்த்திக் கொண்டு தம்மினத்தையே வேரறுக்க புறப்பட்ட புலியா இந்த தலைவர்?

பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட பல தாக்குதல்களை அரசின் மீது போடும் இவர்கள் பெண் தற்கொலை தாரியை அனுப்பி தங்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்து இராணுவத்திடம் சரணடையும் இடத்தில் குண்டு வெடிப்பை நடாத்தியதையும் அரசின் மீது சுமத்தி விடாததற்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றார்கள்? அது அரசின் மகளிர் அணி தற்கொலைப் படைப்பிரிவின் வேலையென்றா?

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நாயகனின் இறுதி வான் பறப்பு…தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு அத்தாட்சியாக தன்னுடன் உம்மவர் ஒருவரையும் அழைத்துச் சென்றார். அரநாயக்காவில் அந்த அகோரம் நடந்தேறிய ஏக்கத்திலும் துக்கத்திலுமிருந்து நாம் விடுபட்டிருக்காத மிகக் குறுகிய கால இடைவெளியில் மாமனிதர் பட்டம் யாரால்? யாருக்கு வழங்கப்பட்டது என்று ஞாபகமிருக்கிறதா? இதன் அர்த்தத்தை எமக்கு சொல்ல முடியுமா?

20 வருடங்களுக்கு மேலாக ஒரு குழு அல்லது சமூகம் குறித்தவொரு விடயம் தொடர்பாக அல்லது இதுபோன்ற சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருமாயின் அதனை உலக நாடுகள் கவனத்திற்கொண்டு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளை எட்ட வேண்டுமென்று ஒரு சர்வதேச சட்டம் உண்டு. ஆனால் இதுவரை எந்தவொரு வல்லரசும் புலிகளின் பிரச்சினையில் முழு மூச்சாக செயற்படவில்லை ஏன் தெரியுமா?

இன்றைய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரும் முன்னாள் போராளியுமானவர் தானைத் தளபதியிடமிருந்து பிரிந்து வந்ததற்கு முக்கிய காரணமே பிரதேச வாதத்தை தன்னோடு வளர்த்து வந்ததுதான் என்பது வெளியாகியுள்ள வேளையில் கிட்டத்தட்ட 70% உள்ள பேரினவாதிகள் பிரதேச வாதம் பார்ப்பதில் என்னதான் தப்பிருக்கிறது?

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க புறப்பட்ட அதே இனத்தைச் சேர்ந்த எத்தனையோ இயக்கங்களையும் கல்விமான்களையும் ஏன் முதுபெரும் அரசியல் அறிஞர்களையும் மட்டுமன்றி ஏனைய இனத்திலிருந்தும் இவ்வாறான உயிர்களை பலி கொண்டதனை எந்த விதத்தில் நியாயப்படுத்தப் போகின்றீர்கள்.

இன்னும் இன்னோரன்ன கேள்விகள் என்னை கன நாள் தொட்டு துளைத்துக் கொண்டிருக்கின்றன உங்களால் முடியுமா? இவைகளுக்குப் பதிலளிக்க? உங்களால் முடியாதுதான் இருப்பினும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேனும் என் கேள்விகளை தொடருவேன்.

ஏயெம்.ஹஸன் அலி
சவூதியிலிருந்து


Friday, March 13, 2009

தேனீ இணையதளத்திலிருந்து இலங்கை முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட இரு கட்டுரைகள்

மீலாது விழா மீதான தாக்குதல்களை மையப்படுத்தி நேற்றும் இன்றுமாக மூன்று கட்டுரைகள் தேனி இணையதளத்தில் வந்துள்ளன. அவைகளில் இன்று வந்த இரு கட்டுரைகளைக் கீழே கொடுத்துள்ளேன். அவைகள் முறவோடை அச்சிமுகம்மது மற்றும் ஹசன் அலி ஆகியோரால் எழுதப்பட்டது.

சில தகவல்களை முறவோடை அச்சிமுகம்மது எதார்த்தமாக சொல்ல முற்படுகிறார். அதில் பல தகவல்கள் அடங்கியுள்ளன. ஆனால் அவரது ஞாபகத்தில் பிழை உள்ளதும் சற்று தென்படுகிறது. மகாத்மா காந்தி அவர்கள் சம்பந்தப்பட்ட கதையை அவர் நபி அவர்களோடு சம்பந்தப்பட்டது என கூறிவிட்டார். அது அந்த இனிப்பு சாப்பிடும் பையன் சம்பத்தப் பட்ட கதை. அது தவிர, அவரது கட்டுரையில் பல வரலாற்று தகவல்கள் உள்ளன.

அதற்கு அடுத்து ஹசன் அலி என்பவரின் கடிதம். அது சற்று காரசாரமாக எழுதப்பட்டாலும் சொல்லும் விதம் கவர்கிறது. அதுவும் பல சம்பவங்களை ஆங்காங்கே சுட்டிக் காட்டி எழுதப்பட்டுள்ளதால், அதிலும் பல தகவல்கள் காணப்படுகின்றன. வெறும் உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் அமைந்த கடிதம் அல்ல.

இவைகளிலிருந்து நான் அறிவது என்னவென்றால், இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள், தமிழக முஸ்லீம்களை விட மிக அமைதியானவர்கள். தமிழக முஸ்லீம்களில் பிஜே அபிமானிகளிடம் வன்முறை சிந்தனை இருக்கும். தனது மதமே சிறந்தது என மாற்று மத அன்பர்களிடம் சென்று விதன்டா வாதம் செய்யும் போக்கு அவர்களில் இருக்கும். (இருப்பினும் பிஜே அவர்களின் கருத்து ஒன்றும் தேனி இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவர் அரசினை எதிர்த்த வன்முறை கூடாது என்ற நோக்கில் புலிகளை எதிர்த்து கருத்து ஒன்று வெளியிட்டிருந்தார். அது காமெடி அல்லது நயவஞ்சகப் பேச்சு. அவரது வகாபிசத் தந்தையான இப்னுத் தைமியாவின் போதனைக்கு மாறானது அவர் கூறியது. )

ஆனால் இலங்கை முஸ்லீம்கள் பலரிடமும் நல்லிணக்கத்துடன் வாழும் பண்பு தென்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதனையே குறிக்கோளாகக் கொண்டு இயக்க ரீதியில் செயல்படும் குழுவினை நாம் காண முடிவதில்லை.

இக்கட்டுரைகளைத் தவிர, தேனீ இணையதளத்தில் அவ்வப்போது எழுதும் யஹ்யா வாஸித் மற்றும் கிழக்கான் ஆதம் ஆகியோரது கட்டுரைகளும் பல தகவல்களைக் கூறுகின்றன‌.




பிரபாகரனுக்கு ஒரு திறந்த மடல்

ஹஸன் அலி சவூதி அரேபியா

ஐயா பிரபாகரன் அவர்களே !

நீங்கள் உயிரோடு உள்ளீர்களா இல்லையா என்பது கூட எனக்கு ஊர்ஜீதம் இல்லாத போதும் கூட இம்மடலை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.உங்களால் வாசித்து கிரகித்துச் செயற்பட முடியாது போனாலும் கூட உங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு வன் வளைப்புச் செய்யப்பட்டு வக்கிர புத்தியுடையோர்களாக உடலளவில் வாழ்ந்தும் உயிரளவில் மனிதத்தைச் சாகடித்து விட்டும் நடமாடிக் கொண்டிருக்கின்ற இளைஞர் யுவதிகளாவது படித்துப் புரிந்து கொள்ளட்டும்.

சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வித வெட்கமுமின்றி தங்களின் இயக்கக் கொள்ளைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் வல்லவரான உங்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி சுமார் இரு தசாப்த காலங்களுக்கு முன்னர் தமிழினப் போராட்டத்தை தமிழ் பேசும் மக்களின் போராட்டமாக அறிவித்த போது எம்மதத்தினர்களில் எத்தனை இளம் வாலிபங்கள் உமக்காக உயிர் நீத்தனர் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்ததுண்டா??

மட்டுமல்லாது அன்று நடாத்தப்பட்ட தாக்குதல்களில் போதிய பயிற்சியளிக்காமல் இஸ்லாமிய சோதரங்களை முன்னிலையில் நிறுத்தி உமது இன அழிப்பை ஆரம்பித்து வைத்தீரே ஞாபகமிருக்கிறதா?? எம்மிளைஞர்கள் விழித்துக் கொள்ளவே நேரடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டீரே.

வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாட்டின் சகல பாகங்களிலும் எம்மவர்களுடன் உம்மவர்களும் தொன்று தொட்டு இன்றுவரை பெற்றமும் கன்றுமாக உள்ளனரே..இது பொறுக்காமலா நச்சு விதைகளை அவர்கள் மனதில் விதைத்தாய்??

எத்தனை கிராமங்களில் படுகொலைகள் எத்தனை முதலாளிகளிடம் கப்பம் அறவீடுகள் எத்தனை ஊர்களில் வரி அறவீடுகள் ஏன் எத்தனை ஊர்களை இருந்த இடம் தெரியாமல் விரட்டியடித்தீர்கள். இலங்கைத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்ததுண்டா அங்கு இஸ்லாமியர்களின் படங்களும் விலாசங்களும் பிரகாசிக்கும்.

விடுதலைப் போராட்டமொன்று திசைமாறிப் போயிருக்காவிடின் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் பேசுகின்ற சிங்களச் சோதரங்களின் ஆதரவைக் கூட பெற்றிருக்க முடியும் ஏன் ஒட்டு மொத்த பேரின மக்களே தமிழ் பேசும் மக்களுக்காக ஓரணியில் நின்றிருக்கும். சாத்வீக போராட்ட வழியினை மாற்றியமைத்து - சொத்து சுகம் பதவி தேடத் துணிந்ததன் விளைவுதான் உமது இன்றைய “ஐயோ! எல்லாம் போச்சே” நிலைக்குக் காரணமென்றால் அது மிகையாகுமா?

வரலாற்றுத் தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றிய பெருமைக்குரியவரே! நீர் பகைத்துக் கொள்ளாத சமூகம் உண்டா? இனம் உண்டா?? ஏன் நாடுதான் உண்டா??? யாவற்றையும் பகைத்துக் கொண்டு எப்படி போராட்டத்தை வென்று கொடி பறக்க வாழ்ந்து விட முடியுமென்று உமது சித்தாந்தம் கூறியதோ??

நீங்கள் எமக்குச் செய்துவிட்ட கொடுமைகள் இன்னும் தொட்டால் நோகும் தழும்புகளாக உள்ளக் கிடக்கைகளில் இருக்கையில்.. ஒரு சில அண்டை நாட்டுத் தமிழ் சோதரங்கள் வெட்கமின்றி வாய்விட்டு எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள் “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உலகமே குரல் கொடுக்கின்ற போது ஏன் முஸ்லிம்கள் மட்டும் அமைதி காக்கின்றீர்கள்” என்று. ஐயா பெரியவரே! நீங்கள் தானே ஐயா உங்க இனப் பெரியவரு அந்த இளசுகளுக்கு உண்மையை பட்டியலிட்டுச் சொல்லலாமே.

தூய இஸ்லாத்தில் நுழைந்து விட்ட யாவரும் அறிந்த உண்மை ஒன்றை உமக்குச் சொல்லட்டுமா?? 1400 வருடங்களுக்கு முன்னர் சுடுபடிகலன்கள் எதுவுமின்றி நேருக்கு நேர் நின்று வாள் ஈட்டி சண்டையிட்டு இறுதிக் கட்டத்திலேயே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய காலகட்டத்திலேயே பார் போற்றும் மாநபியின் கட்டளை “பெண்கள் முதியோர்கள்; சிறுவர்களை கொல்லாதீர்கள் பொதுச் சொத்துக்களுக்கு பங்கம் விளைவிக்காதீர்;கள்” என்பதுதான்.

எத்தனை கண்ணியமான் மனிதாபிமான போர்ப் பிரகடனங்கள். இதில் ஒரு துளி கூட உம்மால் பின்பற்ற முடிந்ததா? மிலேச்சத்தனமான படுகொலைகளை வணக்கஸ்தலங்களில் அரங்கேற்றுவது தான் உமது போரியல் தந்திரமா??

போர்க்களங்களிலேயே இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்து கட்டுக் கோப்புடன் வளர்ந்த எம்மவர்கள் எங்கே? நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்களை பலியெடுக்கும் உமது சித்தார்ந்தம் எங்கே?

வாகனத்திலுள்ள ஐம்பது பயணிகளை காப்பாற்ற முன்னால் வருகின்ற ஒரு பொதுமகனைக் கொன்றால்தான் முடியுமென்றால் அது சர்வதேச மனிதாபிமானக் கொலை ஆனால் ஒரு எதிரியைக் கொல்ல நூற்றுக் கணக்கான பொது மகன்களை கொல்வது என்னதான் நியாயமோ?? இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சர்வதேசம் இன்னும் பொறுமையுடனிருக்க என்ன இதயங்களற்ற வெற்றுடலுடனா உலகத் தலைவர்கள் ஆட்சியேறினார்கள்??

எம்மவர்களின் பொறுமையை மென்மேலும் சோதித்து பல்லின மக்களிடையே பிளவுகளையும் கொலைகளையும் வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தி அதில் குளிர்காயும் புதியதொரு விஞ்ஞாபனத்தை அறிமுகம் செய்ய முனைகிறீரா??? 55 வயதைத் தாண்டிய உம்மை விடவும் எமது 5 வயது சிறுவனுக்கு உலகறிவும் பண்பாடும் மனித நேயமும் பன்மடங்கு அதிகமென்பதை புரிந்து கொள்.

இன்னும் உயிரோடிருந்தால் ஒரு நிமிடம் மட்டும் சிந்தித்துப் பாhக்கலாம் அல்லது உம்முடன் இருந்தவர்கள் சிந்தித்துப் பாhக்கலாம். கால் நுற்றாண்டிற்கும் மேலாக தமிழினம் பெற்றதை விட இழந்தது தான் ஆயிரம் மடங்கு என்பது புலனாகும். நீ தோன்றியிருக்காவிடில் பேரின அரசை அமைக்கின்ற மாபெரும் சக்தியாக தமிழினம்தான் இருந்திருக்கும்.

ஐயா! நீங்களும் பாவம் தான் ஐயா. கிழப் பருவமும் ஆயிப் போச்சி எங்கயாவது கண் காணாத் தேசத்துக்கு ஓடிப் போயிடுங்க. முக்கியமா போகக்க ஒங்குட மூத்த மகனையும் கூட்டிக்கி பெயித்திடுங்க. உங்க சனங்க கண்டுச்சிண்டா காறித் துப்பியே சாக வெச்சிடும்.
நல்லா யோசிங்க ஐயா நீங்க திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் இரிக்கி..உங்களுக்கு யோசினக்கி வராட்டி கேளுங்கையா சொல்றன்.

ஏயெம்.ஹஸன் அலி சவூதி அரேபியா

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அய்யாமுல் ஜாஹிலியாக்கள் காலமும், முஸ்லீம்களும்.

முறாவோடை அச்சிமுகம்மது-

அப்போதைய அரேபியா அதாவது முகம்மது நபி (ஸல்)அவர்களுக்கு முன் அறிவிலிகளால் நிரம்பி வழிந்தது. அதை அய்யாமுல் ஜாஹிலியாக்கள் (அறிவிலிகள்) காலம் என்பர். பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் சுடு மணலில் உயிருடன் புதைத்த காலமது. அவர்களைத் திருத்தி,நல்வழிப்படுத்தி மனிதர்களாக்கிய முழுப் பெருமைக்கும் உரியவர் இந்த முகம்மது நபி அவர்கள்ஆகும். ஒரு முறை இவரிடம் ஒரு தாய் தன் பிள்ளையை அழைத்து வந்து நபியே என் பிள்ளை நிறைய இனிப்பு சாப்பிடுகின்றான். அதை நிறுத்தும் படி அவனுக்கு சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால் அவன் கேட்பான் எனக் கூறியுள்ளார். இவர் சிறிது நேரம் சிந்தித்து விட்டு. இரண்டு நாட்களுக்கப்புறம் வாருங்கள் எனக் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கப்புறம் சென்றவுடன் இவர் அச்சிறுவனைப் பார்த்து இனிப்பு சாப்பிடுவதைக் குறைத்துவிடு அது உடம்புக்கு நல்லதல்ல எனக்கூற சிறுவனும் அதை நிறுத்துவதாக வாக்கு கொடுத்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நபியின் தோழர்கள் ஏன் இந்த வார்த்தையை முந்தாநாளே சொல்லியிருக்கலாமே எனக் கேட்க. நானும் தினமும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுவேன். இந்த நிலையில் நான் எப்படி அச்சிறுவனுக்கு ஆலோசனை செய்ய முடியும். அதனால்தான் நேற்றுடன் இனிப்பு சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டு இன்று ஆலோசனை செய்தேன் என்றாராம்.

அந்த வள்ளலுக்கு விழா எடுக்கப்போனவர்களிடம் தான் நமது வன்னி வித்தகர்கள் வில்லுப்பாட்டுபாடி உள்ளனர். எல்லாவற்றையும் கூட்டிக் களித்துப் பார்க்கும் போது எங்கேயோ ஒரு பொறி; தட்டுது. ஆரம்பத்துல நாம் எல்லோரும் ஒருவரே. தமிழரே. தமிழ் பேசுபவர்களே. என்று சொல்லித்தானே உடல், பொருள், ஆவி எல்லாம் உங்களிடம் தந்தோம். ஆனால் மன்னார் முருங்கனில் (இங்குதான் புலி முதலாவதாக இரண்டு காக்காமாரை போட்டுத்தள்ளியது. போட்டவர்களில் ஒருவர் பிரான்ஸ் லாச்சப்பிளில் குடியும் குடித்தனமுமாக இருக்கின்றார் என்பதையும் ரொம்ப ரொம்ப தாழ்மையுடனும்; பரம ரகசியமாகவும் சொல்லிக் கொள்கின்றோம் ) ஆரம்பித்து மாத்தறையில் முந்தாநாள் நடந்ததையும் வகுத்துப் பார்க்கும் போது வெள்ளரசங்கிளை எடுத்துக் கொண்டு சங்கமித்திரை வந்த கதையையும் இன்னும் படித்து முடிக்கவில்லை போல் தெரிகிறதே.

மெட்ராஸ் மூர் (எம்டபுள்ஓஆர்) மார்கட்டை எம்.ஜீ.ஆர்.ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு எரித்தார்கள். இந்த குப்பைகளைப் படித்து விட்டு பிற்காலத்தில் யாராவது நாடுபிடிக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அந்த நல்ல மனிதர் இதை செய்வித்தார். நீங்கள் அப்போது சென்றல் ஜெயிலில் அல்லவா இருந்தீர்கள். (ராகவன் சகோதரயோ நுங்கம்பாக்கம் நம்பர் சிக்ஸ் வஹாப்ஸ்ரீட்டுக்கு வருவதற்கு கொஞ்ச நாள் முன்னர்) அந்தக் குப்பைகளுக்குள் தான் நிறைய பழைய பஞ்சாங்கங்கள் கிடந்தது. அந்தப் புத்தகங்களை லங்காராணி அருளரும ;(பொப்பாடகி மியாவின் தகப்பனார்) காந்தீயம் டேவிட் ஐயாவும் தானே வாங்கிப் படித்துக் கொண்டு திரிந்தார்கள் மன்னிக்கவும். தீப்பொறி அந்தனிஸில் ஐயாவை மறந்து விட்டேன். இந்த குப்பைகளில்தானே வாஸ்கொடகாமா கொச்சின் துறைமுகத்துக்கு கொள்ளையடிக்க வரும் போது அங்கே பாரசீகத்திலிருந்து வியாபாரத்துக்கு வந்ததொப்பி, தாடி வாலாக்கள் கிராம்புத்தைலம் தயாரித்துக் கொண்டிருந்ததாகவும் விடக்கூடாது இவர்களை விடவே கூடாது என்று கங்கணம்கட்டி கொச்சின் தொடங்கி கன்னனுர் வரை வியாபித்திருந்த சோனிகளை போட்டுத் தள்ளிய கதைகளும் இருந்தது.

அந்த புத்தகங்களில்தானே பாரசீகத்திலிருந்து காலி தங்காலையில் வந்திறங்கிய முஸ்லிம்கள் மாத்தறைக்கு வந்து கொஞ்சம் களைப்பாறி அப்படியே ஹம்மாந்தோட்டையை குறோஸ் பண்ணி கதிர்காமம் வந்து (பால்குடி பாபா) பிபிலை கொட்டபோவவில் தொழில் தொடங்கிய கதை இருக்கின்றது. பிபிளையிலிருந்து இரு குழுவாகப்பிரிந்து ஒரு குரூப் கண்டியை நோக்கி நகர மற்றவர்கள் அம்பாறை கொண்டைகட்டுவான் ஊடாக கருங்கொடித்தீவு (அக்கறைப்பற்று),ஒலுவில், கல்முனைக்குடி.காத்தான்குடி என வந்நதாகவும்,கண்டி சென்றவர்கள் இரு குழுவாகப் பிரிந்து ஒருபிரிவினர் அனுராதபுரம் ஊடாக சாவகச்சேரி (ஜாவகர் சேரி).யாழ் நல்லுர் வந்ததாகவும்,மற்றவர்கள் மன்னார் திருக்கேதிஸ்வரம் மடுமாதா வரை வந்ததாகவும் உண்மையோ பொய்யோ எழுதித் தொலைத்திருக்கின்றார்கள்.

தம்பி பிரபாகரன், இந்த காக்காமார் மன்னாரில இருந்ததற்கு சரியான ஆதாரங்ளிருக்கு, மடுமாதா அவ்வா உம்மா என்கின்ற ஒரு சோனிச்சியின்ட அடக்கஸ்தலம், இந்த காக்கா மார் சாவகச்சேரியில குடும்பத்தோட கோலோச்சியதற்கே ஆதாரம் இருக்கிது .நல்லுர் அடியிலயும் ஒரு மர்மம் கிடக்கு. அதை விபரமாக எவனும் எழுதல. திருக்கேதீஸ்வரருக்கும் கொழும்பு காக்காமாருக்கும் ஏதோ பெரிய கொடுக்கல் வாங்கல் இருக்கு.இல்லாவிட்டால் கொழும்பில் உள்ள மேமன் முஸ்லீம்கள் ஏன் இங்க அடிக்கடி வாறாங்கள். கண்டியில எண்கோண மண்டபம் ஏன் கட்டினார்கள் என்பதற்கு எந்த ராஜசிங்கனும் விளக்கம் சொல்லவில்லை.

ஆனால் பெரஹரவில போகின்ற முதல் யானை சோனிகள் அன்பளிப்புச் செய்த யானை. ராஜ சிங்கன் வெள்ளையனுக்கும் பௌத்தத்துக்கும் ஒழித்துத் திரிந்த போது ஒரு சோனகத்திதான் அடைக்கலம் கொடுத்திருக்கின்றாள்.ஒரு நாள் இரு நாட்கள் அல்ல பல மாதங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றாள் .பதினெட்டே வயதான அந்த சின்னஞ் சிறுக்கி ஒரு நாள் கூட இந்த மன்னனின் முகத்தை பார்க்கவில்லையாம். ஸைத்துன் நாச்சியார் என்ற இந்த குருத்தை பின்னாளில் (21 வயதில்)மீசை முளைக்காத ஆங்கில கேப்டன் ஒருவன் வெட்டிக் கொன்றிருக்கின்றான்.

கண்டி மன்னன் இறக்கும் போது“நமது பரம்பரையின் இறுதி மூச்சு இருக்கும்வரை ஸைத்துன் நாச்சியாருக்குத்தான் முதல் படையல்”என சத்தியம் வாங்கி விட்டுச் செத்திருக்கின்றான்.மதுரை திருவண்ணாமலை பகுதியில் கடா மீசை வைத்துக் கொண்டு பம்மித் திரியும் பல பண்ணையார்கள் வருடா வருடம் கண்டிக்கு வந்து கண்டி ஆஸ்பத்திரிக்கு பின்னால் உள்ள முட்டுச்சந்திகளுக் குள்ளால் ஆறு மைல் மலை ஏறி அந்தக் குட்டி மலையில் அழுது புரண்டு தாயே நீயின்றி நாங்களில்ல அம்மா என அலறுகின்றார்கள். ஸைத்துன் நாச்சியாரை வெட்டிக் கொன்ற வெள்ளையன் பல வருடம் நோய்வாய்ப்பாட்டு சீரழிந்து இறந்ததாக பின்னாளில் நானுஓயா எடின்பரோ எஸ்டேட்டில் இருந்து கொண்டு வரலாறு எழுதிய இன்னொரு வெள்ளையன் கதை அளந்துள்ளான்.

இப்படி பல நம்பக் கூடியதும் ஆதார பூர்வமானதுமான கதைகளிருக்கு.இப்போதே சோனியை முடித்துவிடு. இல்லை என்றால் சாவகச்சேரி பலாப்பழத்துக்கு பலாக்கொட்டை கொண்டு வந்து நாட்டியது நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டு ( சாவகச்சேரி பலாப்பழமும் சூடான் நாட்டில் உற்பத்தியாகும் பலாப்பழமும் கிட்டத் தட்ட ஒரே சுவை.பருமன்) காக்காமார் புதை பொருள் ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவார்கள். சரித்திரம் தெரிந்த ஒரு காக்காமாரும் இருக்கக் கூடாது என ஆய்வு கூறினார்களோ என்னவோ.ஐயனே நீங்கள்தான் செத்த பிணத்தை வைத்துக் கொண்டு யாவாரம் செய்வியள்.எங்களுக்கு அதுக்கு நேரமும் இல்லை.தேவையும் இல்லை.

தோண்டினால் உங்கள்ஆய்வாளர்களின்ர தலைக்குள்ள உள்ள களிமண்போல் இல்லாமல் பூதம்தான் வரும். மொத்த வெள்ளையனும் எகிப்தில போய் தோன்டிக்குத்தானே இருக்கின்றான். பிரமிட்டுகளுக்குள்ள கைக்கடிகாரங்களே ஜகா வாங்குதாமே ! ஏன் மக்கமா நகரத்தில அமைந்திருக்கிற கஃபத்துல்லா என்கின்ற அந்த குட்டி பள்ளிவாசல் உலகின் நடுமத்தியில ஆணி அறைந்தால் போல் கட்டப்பட்டிருக்கிறதே.என்ன 1400 வருடங்களுக்கு முன் முகம்மது நபி அவர்கள் இரண்டு அறளை பெயர்ந்தவர்களைக் கூப்பிட்டு, உலகின் இந்த தொங்கலில் இருந்து அந்த தொங்கல் வரை மீற்றர் தடியும் ,வெள்ளைப்பேப்பரும் வைத்தா கட்டினார். நீங்கள்தான் அறளை பெயர்ந்தவர்களை வைத்துக் கொண்டு படித்த முட்டாள்கள் நாங்கள் என பம்மாத்துக் காட்டுறயள்.அந்த மனிதன் படிக்காத மேதை.

ரத யாத்திரை என்ற பெயரில சும்மாகிடந்த சங்கை பாபர் மசூதி அடியில போய் அத்வானி ஐயா ஊதின கதை உங்கள் நட்டுவாங்கக் காறர்களுக்கு தெரியுமா. 700 வருடம் இந்தியாவை ஆண்ட பாபர் கோயில் கொளம்,கொத்தளம்,பள்ளிவாசல் என நிறைய கட்டினான். அதன் பின் அசோகன் வந்தான்.அதன் பின் நிறைய கள்ளன் பொலீஸ் எல்லாம் வந்து போனார்கள். யாரும் எதையும் கண்டுக்கல. முழி எது முண்டம் எது எனத் தெரியாத அத்வானி ஐயா வந்து.அவர்ர மூக்குக் கண்ணாடிய மேலயும் கீழயும் ஆட்டிப்போட்டு ரதயாத்திரைக்கு வடம் பிடித்து பாபர் மசூதில சூல் கொண்டதின் பயனைத்தான் முந்தா நாளுக்கு முதல் டெல்லி தாஜ்ஹோட்டலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.

நாங்க பழைய பஞ்சாங்கங்கள் எல்லாவற்றையும் துக்கி வீசிவிட்டோம் இப்ப விஞ்ஞான உலகத்துக்கு வந்து விட்டோம் பிரித்வீ ஏவப்போகின்றோம் என ஊருக்கே சொல்லிவிட்டு இந்திராகாந்தி எயார்போர்ட் ஊடாக நான்கு விஞ்ஞானிகளை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி திருச்சி பஸ் நிலைத்துக்கு முன்னால் உள்ள “கல்பனா லொட்ஜ்”இல் அவர்களுக்கு இரவோடிரவாக ரூமும் போட்டு ,நள்ளிரவு இரண்டரை மணிக்கு நாமக்கல் நாட்டரசன் கோட்டைக்கு டெக்சியில் போய் குடும்பிச் சாமியாரிடம் ஏவுகணைவிட சகுனம் பாhத்த லெமூரியாக்கண்ட வாசிகளின் பரம்பரைதான் நாங்கள் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களுக்கு வேப்பிலை சரி வராது.

வேலுப்பிள்ளையர்ர குறிப்பெடுத்துத்தான் குறி சொல்ல வேண்டும். வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளையர்ர மூன்றாவது தலை முறைக்கும்,பருத்திதுறை நெல்லியடியில் உள்ள மூத்த குடிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ? நெல்லியடிக் காறருக்கும் வட்டுக்கோட்டை அராலி கிழக்குச் சனத்திற்கும் என்ன தொடர்பு ? எல்லோரும் பொது நிறமாக இருக்க வட்டுக்கோட்டை அமிர்தலிங்கம் ஐயாவும்,யோகேஸ்வரன் அண்ணாவும் எப்படி வெள்ளை வெளேர் என இருக்கின்றார்கள் ? ( செல்வம் அடைக்கலநாதனை இந்த ஆட்டத்துக்கு நான் அழைக்க விரும்பவில்லை). கொழும்பில் ஆயிரம் சைவக்கடைகள் இருக்க இவர்கள் இருவரும் ஏன் கொழும்பு நுகேகொட ஹைலெவல் றோட் கேரளாக்காறன்ட கடைக்குத்தான் சாப்பிட போவோம் என அடம்பிடித்தார்கள்அந்த சாப்பாட்டுக்கட கச்சிக்காக்காவோடவும்,ஐந்த லாம்புச் சந்தியடி முஸ்லீம் ஹோட்டல் காறருடனும் திருவனதந்புரம் போய் “பீமா” மசூதியில் காணிக்கை போட்டுள்ளார்களே ஏன் ? இந்த பீமா மசூதியை அண்டிய பகுதியில் இருக்கும் கேரள பண்டாரிகளுக்கும்,மாத்தறையில் அதிகமாகவசிக்கும் சிங்கள பண்டாரக்களுக்கும் என்ன தொடர்பு? கடைசியல் சுப்பர்ர கொல்லையில் போய் முடியும்

ஐயா ஆய்வாளர்களே.பிளீஸ் எங்கள விட்டு விடுங்கோ.நாங்க தெரியாம சிறிலங்காவில வந்து பொறந்துட்டோம். எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.நாங்க எதையும் பார்க்கல.எதையும் கேக்கல.^எங்கள விட்டுடுங்கோ. அதோட ஒரு சின்ன வேண்டுகோள். எங்களுக்குத் தெரிந்த கொஞ்சம் சனம் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் என்று சொல்றாங்க எங்கேயோ மாட்டிக்கிட்டதாகவும் சொல்றாங்க முடியுமானா அவங்களத் தேடிப்பிடித்து எங்களிடம் அனுப்பி வையுங்கோ.பளீஸ்.

13-03-2009







Labels: ,

Tuesday, March 10, 2009

பள்ளிவாசலில் புலிகள் தற்கொலைத் தாக்குதல்

இலங்கையில் பள்ளிவாசலில் இன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20பேர் காயமடைந்துள்ளனர். ஆனாலும் "புலிகளிடம் மதவெறியில்லை" என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது பற்றிய பிபிசியின் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு தலாய்லாமாவின் அரசியல் செய்தியே பிபிசிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. அதன் ஸ்கிரீன்ஷாட் கொடுக்கப்பட்டுள்ளது

Several killed in Sri Lanka blast

Map

At least 10 people have been killed in a suicide bomb attack in southern Sri Lanka, police say.

At least one minister was among more than 20 people injured in the blast at the town of Akuressa, 160km (100 miles) south of the capital, Colombo.

Government officials were attending a function at a mosque to celebrate an Islamic holiday at the time.

The defence ministry said the blast was carried out by Tamil Tiger rebels but no-one has yet admitted responsibility.

'Ministers targeted'

"An LTTE [Liberation Tigers of Tamil Eelam] suicide bomber has attacked a mosque at Godapitiya, in Akuressa, in the Matara district," the defence ministry said on its website.

I heard a huge sound and then I saw people had fallen everywhere. They were covered with blood and flesh
Ahamed Nafri, witness

Sri Lanka's oil minister HM Fowzie, who was at the site, told Reuters news agency the bomber appeared to have targeted six ministers as they walked in a procession toward the mosque.

The ministers were attending a ceremony to mark the birthday of the Prophet Muhammad when a bomber on a bicycle set off the explosion behind them, officials told the BBC.

Post and Telecommunications Minister Mahinda Wijesekara was injured in the attack and is said to be in intensive care.

A helicopter is airlifting the critically wounded back to Colombo.

Soldiers in the north-east
The army says it has restricted the rebels to 50sq km in the north-east
One witness, Ahamed Nafri, told Associated Press he was walking toward the mosque at the time of the blast.

"I heard a huge sound and then I saw people had fallen everywhere. They were covered with blood and flesh and the wounded people were screaming."

The blast comes as Sri Lanka's military continues its operation to defeat the Tamil Tigers in the north-east.

On Tuesday the military said it had restricted the rebels to an area of less than 50 sq km (19 square miles) but that heavy fighting was continuing.

Also on Tuesday, the government announced it had appointed the former deputy leader of the Tamil Tigers - known by his nom de guerre, Col Karuna - as a minister.

Vinyagamoorthi Muralitharan is the new non-cabinet minister for national integration and reconciliation.

The Tamil Tigers have been fighting for a separate homeland for the ethnic Tamil minority in the north and east of the country for a quarter of a century.

Government officials say they are confident the entire north-east can be brought under control soon.

But the rebels have vowed to carry on their fight, and correspondents say the latest blast shows they have maintained their ability to launch attacks far from their traditional strongholds.

On 20 February, two planes belonging to the Tamil Tigers attacked Colombo, killing two people and injuring about 45.

About 70,000 people have died in the conflict in the past 25 years.


பிபிசியின் சீன எதிர்ப்புப் பிரச்சார போக்கு எவ்வாறு தலைப்புச் செய்தியினை நிர்ணயிக்கிறது என்பதற்கு கீழ் உள்ள ஸ்க்ரீன்ஷாட் கொடுக்கப்பட்டுள்ளது.


Monday, March 09, 2009

அமெரிக்கா ஹா ஹா ஹா

ரஷ்யா அமெரிக்காவிடம் பேசவேண்டிய விதத்தில் பேசியதும், அமெரிக்கா பணிந்துவருவதை பல செய்திகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.

அமெரிக்காவிற்கு தாலிபன்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மத்தியிலான‌ போர் ஒத்திகைகளுக்கு மிகக் கடுமையான விமர்சனத்தினை வடகொரியா வைத்துள்ளது.

அது அவ்வாறு இருக்கையில் ..

ஒரு அமெரிக்கக் கடற்படைக் கப்பலை ஐந்து சீன கப்பல்கள் சீண்டிய செய்தியைப் படித்து ரசித்தேன். அமெரிக்கக் கொட்டத்திற்கு போதாக் காலம் நெறுங்குவதை உணர முடிகிறது. பிபிசி செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஒரு வருடத்திற்கு முன்பு மற்றொரு அமெரிக்கப் போர்கப்பலுக்கு மிக அருகாமையில் சீன நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று நீர்மட்டத்திற்கு மேலே தோன்றி ஒரு மிரட்டு மிரட்டியது ஞாபகமிருக்கலாம்.

Chinese ships 'harass' US vessel

Breaking News

Five Chinese ships have manoeuvred dangerously close to a US navy vessel in the South China Sea, the US government has said.

US officials said the incident came after days of "increasingly aggressive" acts by Chinese ships.

These violated international law on respecting other users of the seas, a Pentagon spokesman said.

A protest was expected to be delivered to the Chinese military attache at the Pentagon on Monday.

The ships had "aggressively manoeuvred" around the USNS Impeccable "in an apparent co-ordinated effort to harass the US ocean surveillance ship while it was conducting routine operations in international waters", a Pentagon statement said.

The US ship sprayed the Chinese vessel with water from fire hoses to try to force it away, according to US officials.

But they said the Chinese crew stripped to their underwear and carried on approaching to within 25ft (8m).

No immediate response from the Chinese government was reported.

Friday, March 06, 2009

கொதோர்கோவ்ஸ்கி: அல்ஜசீராக் கதை; பிபிசிக் கதையல்ல‌

கொதோர்கோவ்ஸ்கி என்பவர் ஒரு ரஷ்ய தொழிலதிபர். அவர் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம், பிபிசி அதனை மிக வசமாகத் தனது ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும். ரஷ்யாவில் உரிமைமீறல்கள் இருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் விரோதிகள் அனைவரையும் ஏதோ சாதுக்கள் போல காட்டுவது அதன் வாடிக்கை. செச்சன்யா பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஜார்ஜியா பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது யுக்ரைன் நாட்டுடனான பிரச்சனையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் பிபிசியைப் பொருத்தவரை, ரஷ்யாவின் விரோதிகள் எல்லோரும் நியாயவான்கள்.

பிபிசியின் இந்த போக்கு ரஷ்யா விஷயத்தில் மட்டுமல்ல. யார் யாரெல்லாம் மேற்குலகின் அரசியல் கொள்கைகளுக்கு எதிரானவர்களோ அவர்கள் அனைவர்கள் விஷயத்திலும் பிபிசி இந்தப் போக்கினையே கடைபிடிக்கும்.

உதாரணத்திற்கு, சீனாவில் திபெத்தியர்களால் ஒரு கலவரம் ஏற்படுத்தப்பட்டு ஒரு நூறு பேர்களைக் கலவரக்காரர்கள் கொன்றால், பிபிசி அச்சமயத்தில் தலாய்லாமாவின் பிரச்சார ஊடகமாகிவிடும். அதுவும் ஒரு வாரக் கணக்கில்.

இஸ்ரேல் நாடோ பாலஸ்தீனக் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கில் மக்களைக் கொல்லும்போதும், லெபனானில் கொல்லும்போதும் அவைகளைப் பற்றிய செய்திகளைத் தரும்போது இஸ்ரேலிய அதிகாரிகளின் அபிப்பிராயத்தினையும் பேட்டி என்ற பெயரில் கலந்து, அச்செய்திகளை ஒரு விமர்சனமாகத் தரும்.

வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவேஸ், ஈரானின் அகமதினேஜாத், வடகொரியாவின் கிம் ஆகியோரெல்லாம் அதன் விரோதிகள். நிகராகுவாவின் ஒர்தேகா, சூடானின் பஷீர், பொலீவியாவின் மோராலஸ், ஈக்குவடாரின் கோரியா, ஜிம்பாப்வேயின் முகாபே, சிரியாவின் பஷார் ஆசாத், பெலாருஸ் அதிபர் ஆகியோரெல்லாம் பிபிசியின் கடைந்தெடுத்தவிரோதிகள். துருக்கி மீது அதன் விரோதம் அடுத்த நிலையில் உள்ளது.

கொலம்பியா பிபிசியின் மிகுந்த நட்புகளில் உள்ள ஒன்று. ஜார்ஜியா மற்றும் யுக்ரைன் போல.

இது விஷயத்தில் நேரடியாக மேற்குலகின் அரசியல் கொள்ககளுக்கு எதிரான நாடுகள் மட்டும்தான் பிபிசியின் விரோதிகள் என்றில்லை. அத்தகைய எதிரான நாடுகளுடன் நல்லுறவில் இருக்கும் நாடுகளுக்கும் அதேகதிதான். சீனாவுடனும் ஈரானுடனும் நல்லுறவில் இருக்கும் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளும் அதன் விரோதிகள்.

மேலும் தனது நட்பு நாடுகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு பிபிசியின் கோபப்பார்வை கிட்டாமல் இருக்காது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, துருக்கிய சைப்ரஸ் குழுவினர், கொலம்பியாவின் ஃபார்க் போராளிகள், வடக்கு அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ ஆகியோரெல்லாம் உதாரணம்.

தனது விரோத நாடுகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களெல்லாம் பிபிசியின் வீரதீரமான சுதந்திரப் போராளிகள். உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகள், செச்சன்ய போராளிகள், குர்து இனப் போராளிகள் (இவர்கள் விசயத்தில் ஓரளவு நியாமுள்ளது ஒரு புறம் இருக்கட்டும்), கொசோவோ பிரிவினையாளர்கள் (இவர்கள் விஷயத்தில் நியாயம் உள்ளதா இல்லையா என்பதைவிட நான் பிபிசியின் அரசியல் நிலைப் பாட்டினை மட்டுமே கூறுகிறேன்) ஆகியோரைக் கூறலாம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கூறவேண்டுமானால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஐநா கூட்டமைப்பில் பாதுகாப்பு சபையில் விடுதலைப் புலிகள் பற்றி பேசப்பட்டது. விடுதலைப் புலிகளின் மனிதக் கேடயம் பற்றி பேசப்பட்டது. போர் நிறுத்தம் அவசியமல்ல எனக் கருதப் பட்டது. ஆனால் அது பற்றிய செய்தியை பிபிசி வெளியிடவில்லை.

இப்போது பிபிசிக்குப் பிடித்த கொதோர்கோவ்ஸ்கி பற்றியும், அவர் சொத்து சேர்த்த முறையைப் பற்றியும் பேசும் ஒருகட்டுரை. அது ரஷ்யாவின் கடும்போக்கினை மட்டும் விமர்சனம் செய்யாமல் சற்று அடிப்படையையும் கூறுகிறது.

The life and trials of Khodorkovsky

If convicted, Khodorkovsky could face more than 22 years in jail on top of his current term [AFP]

The life and times of Mikhail Khodorkovsky have grabbed the world's attention once again, as Russia's former richest man faces new charges that could see him behind bars into old age.

Khodorkovsky was born in 1963 and grew up in a normal Soviet family, the son of chemical engineers.

At university he was deputy head of the Communist Youth League. The contacts he made there brought him into the ranks of the Soviet apparatchiks and later modern-Russia's political elite.

During Gorbachov's policy of glasnost [openness] and perestroika [restructuring] Khodorkovsky used his contacts to gain a footing in the developing free market.

He set up a computer and software business with fellow students and even a cafe, but it was the foundation of the bank Menatep in 1987 that allowed him and his associates to generate enough money to buy up fertiliser company Apatit and then in 1995 the oil company Yukos for a mere $300m.

With the collapse of the Soviet Union the state had been forced to sell off its assets at bargain prices.

Many became immensely rich but seven individuals, known as the oligarchs, bought up most of Russia's natural resources, often in return for favours from key politicians.

By the late 1990s Mikhail Khodorkovsky was among the richest men in Russia with a personal fortune of between 2 and $2.5bn.

Some of the oligarchs lost their status as a result of the August 1998 financial crisis, others like Khodorkovsky, would see their fortunes change with the arrival of the Vladimir Putin, the new Russian president, who during his first term in office moved to control the Yelstin-era oligarch's ambitions.

On October 25, 2003, Khodorkovsky was arrested at Novosibirsk airport, in Siberia, while his private jet was being refuelled.

Shortly afterwards, government action led to a collapse in Yukos' share price and a major sell off of the company's assets.

The firm was finally dismantled after being hit with massive tax back-claims.

'Political posturing'

Khodorkovsky is currently serving an eight-year sentence for fraud and tax evasion and was denied parole last August.

His critics argue that he is criminally responsible for shady methods used to take advantage of the bargain sell-off of Russia's natural resources by the government.

The Russian general prosecutor's office claims Khodorkovsky and his associates cost the state more than $1bn in lost revenues.

As president, Putin moved to control the ambitions of the Yelstin-era oligarchs [AFP]
But his supporters and activists insist his long detention and the new legal proceedings are a way of silencing potential opponents of Putin.

Khodorkovsky had openly financed opposition parties such as the liberal Yabloko party in the run up to the 2003 parliamentary elections.

He had also become a philanthropist, setting up a number of organisations to promote political reform.

Many of his opponents saw this as political posturing.

At the same time Khodorkovsky's wealth had been steadily growing.

Shortly before his arrest, he announced a merger between Yukos and fellow Russian oil company Sibneft that would have controlled the second largest oil and gas reserves in the world after Exxon Mobil.

Following the arrest of Khodorkovsky, the deal was stopped.

Kremlin critic

Khodorkovsky remains a firm Kremlin critic, recently accusing Putin, now prime minister, of using his power to target political opposition and businessmen like himself

Khodorkovsky, left, and Lebedev are both serving eight-year sentences
The arrival of Dmitry Medvedev as Russia's new president, a lawyer by trade, has brought with it hopes of a more transparent legal system in Russia.

Many think Medvedev will take a softer line than his predecessor, but, as Russia struggles with the financial crisis, the example of Kodorkovsky remains a potent warning to Russia's rich and powerful to keep away from politics.

Khordorkovsky and Platon Lebedev, his former business associate, who is also serving an eight-year sentence, now face new charges.

The trial taking place in Moscow is examining charges that between 1998 and 2003 Khodorkovsky carried out embezzlement and illegal transactions worth $25bn.

Khodorkovsky's defence team have dismissed the charges as absurd, but if convicted he could face another 22 and a half years in prison on top of his former sentence.

Remarkably, despite nearly four years behind bars, Forbes magazine still estimate Khodorkovsky's personal fortune at about $500m.


Source: Al Jazeera

Wednesday, March 04, 2009

கேமரா ரெடி ஆக்ஸ‌ன்: வைகோ & கோ


என்னய்ய பண்ணிகிட்டு இருக்காங்க ? இன்னுமா கேமரா ரெடியாகல்லே ! ரெடியாவுமா இல்ல அப்படியே போகச் சொல்லிடுவாங்களா ?





ஹைய்யா......... ரெடியாயிடுச்சு... ஆக்ஸ‌ன் ஸ்டா....ர்ட்




நன்றி: புலிகளின் புதினம்

இவைத் தவிர கொஞ்சம் பழைய ஆக்ஸன்கள் கீழே. (அவைகளுக்கு நன்றி புலிகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு)



நெடுமாறன் கிட்டுவுடன்








Saturday, February 28, 2009

ஆன்டன் பாலசிங்கம் பிடிபட்டார்

ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் முன்னொரு காலத்தில் வழங்கிய பேட்டி ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்காகவாவது அவர் பிடி பட வேண்டும். ஆனால் அவரது கட்டவுட் மட்டுமே இப்போது பிடிபடுகிறது.

('CP' refers to Centre Point interviewer; 'B' refers to Balasingham)


CP: It is ironic that you are restricting people, who want to leave, but it is the opposite for the Muslim community-how can you explain you’re asking them to go?

B
: The Muslim situation has to be viewed differently. In the East there was a lot of violence by armed Muslim groups and to prevent reactive violence in the North we had to ask them to leave, but we have told them that once the situation becomes normal they will be allowed to come back

CP: You are right! What About people like Professor Nuhman who taught Tamil at Jaffna University for 14 years... isn’t this exactly what the chauvinist Sinhalese in the South did? Also, isn’t this similar to the logic under lying the arrest and harassment of Tamils in Colombo now?

B:
The problem is that you are not viewing our plight in the Eastern province where Tamils were subjected to atrocities and thousands were forced to leave their villages and go to India. 8000 Tamils were wiped out in the Eastern province, many of these by armed Muslim groups with state backing.

CP: That is precisely the point. Whatever be the truth of these claims that their “Muslimness” has anything to do with their killings. See, the argument in the South is similar about terrorist attacks and bombs. Does “Tamilness” have anything to do with these attacks? Take the claim from the statistical probability which says that if there is a bomb in Colombo it is more likely that a Tamil is responsible. Does this justify the harassment and arrest on so on of hundreds of Tamils who are going about their ordinary business?

B:
Then why was there no response from the wider sections of the Sinhala public when their chauvinist government had embarked on genocidal policy?

CP: Again, surely the same question can be raised about the silence of the Tamils when 50 000 Muslims were asked to go?

B:
None of the Muslims were violently treated, nor were they subjected to any harassment or killing by the LTTE.

CP:I think what the concept of a traditional homeland shows powerfully is that to be forced to leave your home is violence, is great violence. Does the LTTE position have anything to do with “ethnic cleansing of the North East?

B:
No...

Tuesday, February 24, 2009

இராமதாஸின் அத்வானிசம்




இராமதாஸ் அவர்கள் ஒரு புகழ் பெற்ற மருத்துவர்.

அதாவது எப்படியென்றால், தனது "மருத்துவர்" எனும் படிப்பு அவர் செய்யும் அரசியலுக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், "மருத்துவர்" படிப்பு என்றால் பலருக்கும் எட்டாக் கனி எனும் நிலை தமிழ்நாட்டில் நிலவுவதால், "மருத்துவர்" என்று தனது பெயருக்கு முன் போட்டுக்கொண்டு, அதனைக் கொண்டு பீற்றிக் கொண்டு, மேடைகளில் கூட ஸ்டெதாஸ்கோப்பை அணிந்து வைத்தியம் பார்த்து புகழைத் தானேத் தேடிக்கொண்டவர்.

அவரது சமீபத்திய பேச்சு என்று ஹிந்துவில் வெளியாகி இருந்தது. " இரண்டாயிரம் இலங்கை இஸ்லாமிய இளைஞர்களை பாக்கிஸ்தானில் பயிற்சி பெறவித்து தமிழ்நாட்டைத் தாக்கப் போகிறார்கள்" என்பது தான் அது.

ஜாதித்துவம் எனும் குண்டு சட்டியில் எத்தனை நாள் தான் குதிரை ஓட்டுவது ? கொஞ்சம் விசாலமா, "தமிழர்கள்" என்றோ அல்லது அதையும் தாண்டி அத்வானித்துவத்தையோ பின்பற்றினால் தானே மேலே போகமுடியும்.

ஜாதிக்காக அரசியல் ஆரம்பித்த‌ ராமதாஸ், இப்போ தேசிய அளவில் அரசியல் செய்ய எத்தனிக்கிறார் என்பது தெரிகிறது. முன்னேற வேண்டும் என நினைப்பது என்ன தவறா ? செய்யலாமே.

Monday, February 23, 2009

மீசையை முறுக்கியவர்கள் கெஞ்சும் நிலைக்கு போய்விட்டனரே

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா நடேசன், முன்னொரு காலத்தில் "கிளினொச்சியை அவர்களால் தாங்கள் சொன்ன காலத்திற்குள் கைப்பற்ற முடியவில்லையே" என ஆர்ப்பரித்தவர். "முன்னேறும் இராணுவத்தினரைத் மீளத் திரும்பவிடுவதில்லை என்பதே எங்கள் வைராக்கியம்" என்றும் சூளுரைத்தவர். ஆனால் அதே சமயத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டுப்பார்த்தவர்.

புலிகளின் தலைவரோ, "அவர்கள் பகல் கனவிலிருந்து விழித்துக் கொள்வர்" என்றார். "இன்னும் 3 மாதங்களில் பாரிய தாக்குதலைத் தொடுப்போம்" என தமிழ்த்தேசியக் கூட்டணி உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து மொழிந்தார்.

ஆனால் எல்லாஇடங்களிலிருந்தும் தந்திரோபயமாகப் பின்வாங்கிவிட்டார். இப்போ வெறும் 100 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது உயிரைக் காக்க புடை சூழ சுருங்கிவிட்டார்.

இப்போ, பா நடேசன், " ஒரு அரசியல் தீர்வு ஏற்பட்டால் எங்களுக்கு ஆயுதம் தேவையில்லை என்ற நிலை வரும். சர்வதேச சமுதாயமே எங்களிடம் ஆயுதத்தினைக் கலைய சொல்லாதீர்கள். உடனடித் தேவை போர் நிறுத்தம் மட்டுமே" என்கிறார்.

அதாவது தனி நாடு தேவை இல்லை என்ற நிலைக்கு இறங்கிவிட்டனரே. அப்போ தாகமே எடுக்காமல், தாகம் ஏற்பட்டதாக இத்தனை நாள் கூறினரா ? அல்லது தாகம் தீராவிட்டாலும் பரவாயில்லை என்கிறார்களா ?

ஆயுதத்தினைக் கலைய என்னதான் அவர்கள் யோசித்தாலும், விமானங்களைப் பாதுகாக்க முடியாது என்று அவைகளை இரு நாட்களுக்கு முன் கலைந்துவிட்டனர். நல்ல துவக்கம். அதுவும் விமானங்களுடன் இரு புலிகளையும் சேர்த்துக் கலைந்தனர்.

"We also wish to inform the international community that we are ready to discuss, co-operate, and work together in all their efforts to bring an immediate ceasefire and work towards a political settlement.

Yours Sincerely

B Nadesan
Head of the Political Wing of the LTTE "

Saturday, February 21, 2009

டுபாக்கூர் சீமானின் கவனத்திற்கு

நீங்கள் கூறிய சில கருத்துக்களுக்கு, ஆதம் என்பவர் பதிலளித்துள்ளார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்!

- கிழக்கான்- ஆதம்

kaththankudiபுல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?"
தாய்க்குருவி சிரித்தது......
'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை'
என்றது தாய்.
தாய்க்குருவி சொன்னது:-
*'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'*
-ஈழத்து கவிஞர் காசியானந்தனின் கதை இது-
(புலிகளின் ஆத்மார்த்த கவிஞரும் இவரே ! இவரை கிழக்கின் பிறந்த ஒரு கவிஞராக மட்டுமே பார்க்கிறேன்)

அண்மைய புலம்பெயர் ஈழத்தவர் போராடங்களிலும் இந்திய தமிழர் போராடங்களிலும் கையாளப்படும் ஒரு வாசகம் இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு என்பதாகும் புலிகளின் ஆதரவாளர்கள் பெரிதும் இந்த வாசகத்தை கையாள்வதை பார்க்கும் போது காசி அண்ணாவின் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”
எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட.....!

அண்மையில் தமிழ் உணர்வாளர் சீமான் தமிழ் நாட்டில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் நாடாத்தும் போராட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தரவில்லை என சாடியதோடு “முஸ்லீம்களை கொலை செய்தவன் கருணா. அவனை தலைவர் விசாரைனைக்கு அழைத்தபோது சிங்களவனோடுபோய் ஒட்டிக்கொண்டான் எங்கள் அண்ணனிடம்(பிரபாகரனிடம்) இம்ரான் பாண்டியன் என படையனியே உண்டுடா” என்றும் தனது கண்டுபிடிப்பை உணர்ச்சிவசப்படச் சொன்னார்.

ஆகவே பாதிக்கப்பட்ட கிழக்கில் பிறந்த இஸ்லாமியர்கள் உலகெங்கும் துங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்..! புலிகளின் தங்களுக்குள் வாழ்ந்த சொந்த இனத்தின் மீதான இனச் சுத்திகரிப்பையும் அது முழுமையாக வெற்றியளித்ததா என்பதை ஆய்வதே எனது நோக்கம்.

. அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர் போராட்டம் மிகப் புனிதமான தமிழ் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஏகபோக உரிமத்தை தனதாக அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

அப்படி வடக்கு-கிழக்குவாழ் சகோதர மக்கள் மீது புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் அதன் பாதிப்புகள் என்ன என்பதையும் சுருக்கமாகத் தருகின்றேன்.

1990ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்ப்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர் ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டதுடன் அவர்களுடன் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்பட்டனர். இது குறித்து அண்மையில் யாழ்பாணத்தில் வாழ்ந்த யஹ்யா வாஸித் என்ற சகோதரர் இவ்வாறு எழுதியிருந்தார்.

“இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .வாப்பா சொல்கின்றார் “மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்”. யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!! “எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்”. “திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி”...............................................”

அத்துடன் சாவகச்சேரி, கிளிநோச்சி, மன்னார் முஸ்லீம்கள் என அனைவரும் வட மாகாணத்தை விட்டு முற்றாக 1990ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர். இவ்வாறு மொத்தம் 75,000 முஸ்லீம்கள் எந்த நாதியுமற்றவர்களாக எதையும் செய்ய துப்பற்றவர்களாக அமைதியாக வெளியேறினார்கள்

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றிவளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை

·1985 ம் ஆண்டு மட்டகளப்பில் அமைந்திருந்த உன்னிச்சை என்ற கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளுடன் சேர்ந்த செயற்பட்ட ஆயுத குழுக்களினால் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.

1983 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் சிங்கள காடையர்களால் தமிழ்பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அது எப்படி உலகெங்குமுள்ள தமிழர்களால் கருப்பு ஜுலையென நினைவு கூறப்படுகிறதோ அதேபோல் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் கிழக்குவாழ் முஸ்லீம்களின் கருப்பு ஆகஸ்டாக நினைவுகூறப்படுகிறது.

·1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் கிழக்கின் அக்கரைப்பற்று கிராமத்தில் 40 முஸ்லீம் தொழிலாளிகள் பின்னால் கைகளைக் கட்டி பின் தலையில் புலிகளால் சுடப்பட்டார்கள்.

·இரண்டாம்,மூன்றாம் திகதிகளில் மதவாச்சி மஜீட்புரத்தில் 15 மூஸ்லீம்கள் புலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார்கள்.

·மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பள்ளிவாயலுக்குள் புகுந்த புலிகள் துப்பாக்கிச்சுடு நடத்தி 103 பேரைக் சுட்டுக் கொன்றனர் இதில் 25 பேர் சிறுவர்கள் அத்துடன் அதே நேரம் மற்றோரு பள்ளிவாயலான ஹுசைனியா தைக்காவில் இரவுத்தொழுகையில் இருந்த மக்களை கைக் குண்டு வீசிக் கொன்றனர் இதில் 37 முஸ்லீம்கள் தொழுது கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர்.

காத்தான்குடி ஏறாவூர் இனச் சுத்திகரிப்பானது புலிகளின் தலைவரின் ஆலோசனையின் பெயரில் புலிகளின் உளவுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் நெறிப்படுத்தலில் அப்போதைய புலிகளின் கிழக்குப் தளபதிகளான ரஞ்சித், நியூட்டன், கரிகாலன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கரிகாலன் என்பவர் கிழக்கின் களஞவாஞ்சிக்குடியை சேர்தவர் என்பதுட் இவர் முஸ்லீம்களால் நன்றாக முஸ்லீம்களுக்கு எதிரி என அப்போது அறியப்பட்டவராவார். இது தோடர்பான விபரங்கள் Philp Reesயின் Dining with the terrorists என்ற நூலின் ஒரு பந்தியின் கானப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக புலிகளின் உறுப்பினர் சீதா என்பவர் கூறுகையில் “தான் பள்ளிவாயலுக்குள் புகுந்து முப்பத்தி மூன்று தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார். இந்த சீதா மட்டகளப்பு கோட்டமுனையைச் சேர்ந்தவர் இவர் அதன் பின் இந்திய அமைதிப் படையினார் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஐரோப்பா தப்பிச் சென்றுவிட்டார்.

·ஒன்’பதாம் திகதி புலிகளால் சியம்பலாகஸ்கந்தயில் வசித்த முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் புகுந்த போது இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கவே மக்களை விட்டுவிட்டு புலிகள் தப்பிச் சென்றனர்.

·பதினெட்டாம் திகதி கிழக்கில் ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர் இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர். இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா? எந்த சர்வதேச யுத்த விதியில் ஆயுதம் எந்தாத அப்பாவி மக்களை கொல்வது அனுமதிக்கப் பட்டுள்ளது என நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்!

·பதினாலாம் திகதி ஜூலை மாதம் கிழக்கில் உள்ள ஒன்தாச்சிமடம் என்ற இடத்தில் வைத்து புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்.

·பத்தொன்பதாம் திகதி ஜுலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் இருந்து காத்தான்குடிநோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை அம்பலாந்துரை என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டு அதில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் ஆண் பெண்கள் அனைவரையும் தேனீரில் சைனட்டைக் கலந்து குடிக்குமாறு கொடுத்துக் புலிகளால் கொல்லப்பட்டார்கள் இதில் அவ்வருடம் ஹஜ் கடமையை நிறவேற்றித் திரும்பிய ஹாஜிகள், பெண்கள், குழந்தைகள் அடக்கம்.

·மற்றும் இதே காலப்பகுதியில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறுவேண்டிக் கொண்டதும் அதற்கு மறுத்த மக்கள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் அந்த மக்களுக்கான போக்குவரத்தை தடைசெய்ததன் மூலம் பல நாட்கள் பட்டினியில் வாட விட்டது ஊர்களை விட்டு வெளியேசெல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்வதானால் ! 1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கிழக்கிலுள் முஸ்லீம்கள் முழுவீச்சில் புலிகளால் தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேற வேண்டும் என்பதற்காக தாக்கப்பட்டார்கள் எனலாம்.

·கிழக்கிலுள்ள சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் உற்கார்ந்திருந்த மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது இதில் 05பேர் கொல்லப்பட்டு 03பேர் காயமந்தனர் இது 23ம் திகதி ஜுன் மாதம்

அதே மாதம் 29ம் திகதி ஓட்டமாவயில் ஆறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் இதில் ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜிதின் தலைமை நம்பிக்கை பொறுப்பாளரும் அடக்கம்

இரண்டாம் திகதி ஜுலை மாதம் அக்கரைப்பற்றில் பதினான்கு இஸ்லாமிய விபசாயிகள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்

12ம் திகதி ஆகஸட் மாதம் நெற்காணிகளில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லீம் விபசாயிகள் நால்வர் சம்மாந்துரையில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஆகஸ்ட் மாதம் இன்னும் எட்டு முஸ்லீம்கள் அக்கரைப்பற்று டவுனில் வைத்து புலிகளால் சுடப்பட்டனர்.

இவ்வாறு புலிகளின் இன சுத்திகரிப்பு பற்றி எழுதிக் கொண்டே போகலாம்....

·ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் வசித்துவந்த 69 மூஸ்லீம் மக்களை கொலை செய்யப்பட்டனர்.

·15ம் திகதி ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையின் எல்லைக் கிராமங்களான பள்ளியகோடல, அக்பர் புரம், அகமட் புரம், பங்குரான ஆகிய கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளான மூஸ்லீம் மக்கள் 187 பேரைக் கொலைசெய்தனர் இதில் கற்பினித் தாய்மார்கள் உள்ளடக்கம்.

இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அவுஸ்ரேலியாவில் வெளிவரும் முஸ்லீம் டைம்ஸ் பத்திரிகை இதை தனது முதல் பக்கத்தில் 30திகதி ஒக்டோபர் மாதம் 1992 ஆண்டு பிரசுரித்தது.

·மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லீம்களின் பூர்விகச் சொத்தான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டதும் வழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை மற்றும் பல ஊர்களில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டதும்.

இவ்வாறு பல வழிகளில் தன்னுடன் சகோதரர்களாக வாழும் சக மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முனைந்து வடக்கைபோல கிழக்கையும் கைப்பற்ற புலிகள் பிராயத்தனம் எடுத்தனர். அது தோல்வயை தழுவிக் கொள்ளவே முஸ்லீம்களின் அரசியல் எழுச்சியை தடுக்க தங்களால் ஆன முழுப்பலத்தையும் பிரயோகித்தனர் ஆயுதப்போராட்டத்தில் நம்பிகையில்லாத இலங்கை முஸ்லீம்கள் மீதும் அவர்களின் அரசியல் தலைவர்கள் மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டனர் இதில் பல தலைவர்களை, சமூக சேவையாளர்களை, சிந்தனை வாதிகளை முஸ்லீம்கள் இழந்தனர் இதில் முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்த்து சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவரும் இலங்கை முஸ்லீம்களின் தேசிய தலைவருமான மர்ஹும் ஏம்.எச்.எம். அஸ்ரப் அவர்ளின் இழப்பே.

அரசியல்துரை, கல்வித்துரை ரீதியாக முஸ்லீம்களின் வளர்சியையும் அகிம்சை வழியில் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை கௌரவமாக பெற்று முஸ்லீம்கள் முன்னேறுவதை புலிகளின் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை தங்களின் ஏக பிரதிநிதி வாதம் சக தமிழ் பேசும் மக்களாள் ஏற்றுக் கொள்ளப் படாததையும் புலிகளின் தந்தோராபய நகர்வுகள் பயமுறுத்தல்கள் தொடர் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அடி பணிய மறுத்த்து புலித் தலைமை பிடத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது.

எனவே முஸ்லீம் சமூகத்தின் தலைமையை ஒழிக்க முடிவெடுத்து காய்கள் புலிகளின் தலைமையால் நகர்ததப்பட்டு இலங்கை முஸ்லீம்களின் தன்னிகரில்லா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்பாறை மாவட்டத்திற்கு ஹெலிக்கப்டர் மூலம் செல்லும் போது அவருடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் சென்ற தற்கொலையாளி மூலம் நடுவானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது இதன் மூலம் கிழக்கில் மிகப் பலமான முஸ்லீம் சமூகத்தை அடக்கி அடிபணிய வைக்க வேண்டும் என்பதுடன் உடற் பிறப்புக்களாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவையும் சீர் குலைத்து ஏக பிரதிநிதியாக மாற பிரபாகரன் பகல் கனவு கண்டார்.

பாரத பிரதமரின் கெலையை புலிகள் நேரடியாக ஏற்காதது போலவே இதையும் அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் அந்த தற்கொலையாளியை மாவீர்ர் அந்தஸ்து வழங்கி கௌரவித்தது மூலம் அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர்.

இது போல புலிகள் சக இன மக்கள் மீதும் தங்கள் இனத்தில் புலிகளை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் எழுதில் வடிக்க முடியாதவை விரிவு கருதி அவற்றை நான் தொட வில்லை.

இன்னும் தாயகத்தில் வட கிழக்கு மண்னில் பூர்விகமாக வாழ்ந்த சிங்கள மக்கள் இப்போது எங்கே? அவர்களை புலிகள் ஏற்றுக் கொண்டு சமமாக வாழ சந்தர்பம் அளித்தார்களா? அல்லது இன சுத்திகரிப்பு செய்தார்களா?

·1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்த கிராமங்களான தாந்தாமலை,வெளிஓயா, பதவியா ஆகிய இடங்களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்பட்டனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் கோனகல என்ற இடத்தில் வாழ்ந்த 52 சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் இதில் அதிகமாக மிகச் சிறிய வயதான குழந்தைகளும் அடங்குவர்.

கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் மிகவும் மோசமானது இரண்டாம் திகதி ஜுன் மாதம் 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுந்தலாவ எனும் இடத்தில் புத்த பிக்குகளாக பயின்று கொண்டிருந்த 7முதல் 13வயதையொத்த புத்த துறவி சிறார்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலாகும் இதில் 33 புத்த துறவி சிறார்கள் மற்றும் அவர்களின் குருவும் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.

1982 ஆண்டு ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த புலிகள் 1990 ஆண்டு காலப்பகுதியை சிறுபான்மையில் மற்தொரு தனிப்பட்ட கலாச்சார விழுமியங்களை கொண்ட இனமான முஸ்லீம் மக்களை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் ஈழ மண்ணிலிருந்து இன அழிப்புச்செய்து ஒழித்துவிடவே பெரும் தாக்குதல்களைத் தொடுத்தனர் அத்துடன் ஈழத்தில் பரம்பரையாக வாழ்ந்துவந்த சிங்கள பாமர மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர் இதில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரளவு வெற்றியளித்தாலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் படுதோல்வியை அளித்தது மட்டுமல்லாது புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்ற புனிதமான இடத்துக்கு கொண்டு சென்றது என்பதே உண்மை. இதற்குக் காரணம் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான போராட்ங்களை தங்களுக்குள் முன்னெடுத்து தங்கள் நிலையை உலக அரங்கிக்கு அமைதியாய் கொண்டு சென்றதாகும்.

இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா? அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைமை உங்களின் அண்ணால் செய்யப்படவில்லை என்றால் ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகா நாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன்? முஸ்லீம்களிடம் மண்ணிப்புக் கேட்டார் என கூற முடியுமா உங்களால்? .

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே...!

இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா? நீஙகள் இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா? ஆகவே! புலிகளுக்கு ஆதரவாக் கோசம் போடாமல் யுத்ததிற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்களுக்காக் கோசம் போடுங்கள் நாங்களும் உங்களுடன் இருப்போம்! புலி ஆதரவுக் கோசங்களை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை!

சீக்கியர்களின் பொற்கேயில் மீதான இந்திய இரானுவத்தின் தாக்குதலை சீக்கியர்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ ... !

ஈழத்தில் இந்தியப் படையினரின் தாக்குதலை நீங்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ...!
இந்தியா ராஜிவ் காந்தி மீதான புலிகளின் தாக்குதலை எவ்வாறு மன்னிக்க வில்லையோ..!
அதே போன்றே........! முஸ்லீம்களும் அவர்கள் மீது புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை உலக வாழ் முஸ்லீம்களும் மன்னிக்க மாட்டார்கள்.... என்பதுடன் புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன. காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?" என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் அது முடியாது" என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?"
கயிறு சொன்னது:-
*'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"*
நாளைய நாள் தமிழ்பேசும் மக்களுக்கு சர்வதிகார சக்திகளிடமிருந்து சுதந்திரநாளாக மலரட்டும்!
ஈழத்திலிருந்து ......................................

கிணற்றுத் தவளை கிழக்கான்- ஆதம்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
நந்தவனத்தில் ஒரு ஆண்டி

Friday, February 20, 2009

இலங்கை: இடம்பெயர்ந்தவர்களை நல்ல முறையில் நடத்துவது சிறப்பு




நங்கூரம் எனும் பதிவில், இடம்பெயர்ந்தவர்களின் முகாம் பற்றிய புகைப்படம் ஒன்றைக் கான நேரிட்டது. இலங்கை அரசோ அல்லது மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்களோ அவர்களின் இருப்பிடத்தினை மேம்படுத்துவது அவசியம். இல்லையென்றால், "புலிகளே மேல்" எனும் விரக்தி பொதுவாக அவர்களை இட்டுச்செல்லக் கூடும்.

பிபிசியில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. புலிகளிடம் பிடிபட்டுள்ள மக்களினை விடுவிக்க வேண்டிய இராணுவம், அவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் தாக்குகிறது என்பதாகும். புலிகள் மோசமானவர்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் இராணுவத்தினரிடம் இனவெறி இல்லாமல் இருக்குமென்று எண்ண முடியாது. இதில் யார் உதவி செய்ய முடியும் எனில், புலிகளால் இலங்கை அரசுக்கு சார்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிய தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே. அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தலாம். கருணாவோ, பிள்ளையானோ அல்லது ஆனந்தசங்கரியோ தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி இராணுவத்தின் முன்னேற்றத்தில் சற்று நிதானம் காட்ட வேண்டி கோத்தபாயவிற்கு வலியுறுத்தலாம்.

இலங்கை பிரச்சனை: நோம் சாம்ஸ்கியின் பேட்டி

அதிகாரங்களை எதிர்த்து நோம் சோம்ஸ்கி பல கட்டுரைகளை எழுதியவர். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி அவர் சிலக் கருத்துக்களைக் கூறியுள்ளார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு தண்டனை இல்லா அடைக்கலம் கொடுக்க இலங்கை அரசு முன்வரவேண்டும் என்றும், ஆனால் அனைத்து தரப்பினரது அழிச்சாட்டியங்களையும் குற்றங்களையும் பதிவு செய்யப்படவேண்டுமென்றும் அது கூறுகிறது. அது தங்கள் தவறுகளை அறிந்து மக்கள் அமைதியாக வாழ வலியுறுத்தும் என கூறுகிறது. அரசியல் தீர்வின் அவசியத்தை அது வலியுறுத்துகிறது. கலாச்சாரம், இனம் ஆகியவைவைகள் புவியியல் ரீதியாகப் பிரிந்துக் காணப்படுவது அந்த வகையில் "ஃபெடரலிஸ்ம்" எனப்படும் பிராந்திய ரீதியான அதிகாரப் பகிர்வு தீர்வாக அமையலாம் எனக் கூறுகிறது.

அவரது பேட்டி கீழே

As the Sri Lankan Civil War's military aspect slowly but surely draws to a close, questions about Sri Lanka's future are becoming more and more pressing. What should happen to former rebels, especially those who may have committed war crimes? What will be the fate of the Tamils in Sri Lanka as a people and will their rights be protected? While no one can answer these questions before events occur, we can hope to expose Sri Lanka to the best minds available in the relevant political and social fields, and the most diverse advice available.

Appearing for the first time in Sri Lankan media, MIT's linguistics Professor Noam Chomsky has given the Sri Lanka Guardian an exclusive interview to discuss the events unfolding in Sri Lanka, as well as in his home country, the United States. Professor Chomsky has gained fame worldwide for his political activism and has been an outspoken critic of United States Foreign policy over the years. He is a self-described anarchist, but is probably most famous for his strong stances in support of suffering peoples, such as those in Palestine and Somalia. Now we hope to apply his years of experience and insight to Sri Lanka to help the nation make the transition from a house divided to a united and peaceful country.

Here is full text of Interview;

Eric: Can you still hear me alright?

Chomsky: Yes I can hear you.

Eric: Ok, great. I'd like to talk with you about several world events, but especially starting with Sri Lanka because that's where this newspaper is from.

Chomsky: Yeah.

Eric: You may have been hearing some news about their civil war that has picked up in the last year.

Chomsky: Yes, yes I've been following.

Eric: Yes, the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, have been fighting for an independent country for over a quarter century now, but have been facing defeat after defeat for the past few years, especially in the last year when they lost their capital city of Kilinochchi and several other key bases. In fact just yesterday their last major naval base fell. Could you please tell me a little about your views of Sri Lanka and how it's handling the separatist problem?

Chomsky: Well, I don't feel that I have a profound enough knowledge of the details to offer a confident opinion, but it is clear that there is a problem of Tamil Rights and now that the military aspect of the conflict seems to be coming to an end what would be necessary, and humane, and best for everyone concerned, is to arrive at some kind of political solution that gives a recognition to the valid claims for some form of autonomy or self determination within the Sri Lankan state. To work that out you'd have to know more than I do.


Eric: Do you feel that an independent state for the Tamils is a viable option or do you feel that it is in the best interests of the island to remain as one independent nation, or one united nation, rather?

Chomsky: I think the idea of a single state is a bad option in much of the world and in fact parts of the world, like parts of Europe, for example, are moving towards more federal arrangements. So take, say, Spain. In Spain, Catalonia by now has a high degree of autonomy within the Spanish state. The Basque Country also has a high degree of autonomy and the same will increasingly be true of other regions. In England, Wales and Scotland in the United Kingdom are moving towards a form of autonomy and self determination and I think there are similar developments throughout Europe and they're mixed with a lot of pros and cons, but by and large I think it is a generally healthy development. I mean, the people have different interests, different cultural backgrounds, different concerns, and there should be special arrangements to allow them to pursue their special interests and concerns in harmony with others. Some form of federalism I suppose is a good outcome in multinational, multicultural, systems, especially where there is a fair amount of geographical separation. You know, it just depends on local circumstances, the kinds of accommodations that are possible. Without a really deep knowledge of these matters would be just too presumptuous for an outsider to offer opinions.

Eric: I understand that. I would like to talk a little bit about how Sri Lanka is going to be dealing with reconstruction, basically, after the LTTE is finally defeated, which most military analysts are saying should occur in the next month or two. What do you feel should be the fate of the tens of thousands of rebels who have fought over the decades-

Chomsky: I'm sorry, say it again. What do I think, in terms of what?

Eric: What do you think should be the fate of the tens of thousands of people who have fought with the LTTE over the decades, including lower level soldiers all the way up to leading officers?

Chomsky: I understand. Well the general approach, I think, should be, the general presumption should be that there will be a form of amnesty. It's probably not a bad idea to establish some kind of truce commission without punitive powers, but with investigatory powers, that would bring to light atrocities and crimes committed on all sides, as a step towards reconciliation and living together.

Eric: Yes, the war crimes and atrocities is actually going to be a hot issue in Sri Lanka, given that so many top rebel leaders are accused of (ordering) several massacres and that this is the group that actually invented the suicide bomber, or at least the suicide belt, as far as I understand it.

Chomsky: Yeah, well there are plenty of crimes on all sides, undoubtedly, and there should be- You know, it's not easy. A lot of people have suffered and it's hard for them to face that their side too is guilty of crimes, but it is quite important for that to take place. It has been moderately successful in other places; in South Africa, in El Salvador, in Guatemala. It doesn't overcome the problems, but it leads to a basis for a degree of reconciliation and a basis for living together in some constructive fashion.

Eric: Alright, I understand that. In regards to the very top leadership of the LTTE, do you think it might be more healthy or harmful for Sri Lanka to create its own Nuremburg trials to try these top Tiger leaders?

Chomsky: I frankly doubt it because the Nuremburg trials, if they were serious, would have to avoid the profound immorality of the actual Nuremburg trials. Remember, the actual Nuremburg trials were trials of the defeated, not of the victors. In fact, the principle of the Nuremburg trials was that if the Allies had committed some crime, it wasn't a crime. So, for example, the German war criminals were not accused of bombing urban, civilian targets because the Allies did more of it than the Nazis did, and Nazi war criminals like submarine commander Dönitz was able to bring as defense witnesses, American and British counterparts who testified that they had done the same things so these automatically became non-crimes. In other words, a war crime is defined as something you did and we didn't do and that turns the trial into a sham. It has been a sham since. The Chief Justice at Nuremburg, Chief Robert Jackson, the American Chief Prosecutor, he made very strong statements at Nuremburg, admonishing the judges there that, as he put it, "we are handing the defendants a poison chalice and if we sip from it (meaning if we carry out crimes like theirs) then we must be subject to the same punishment." Of course, nothing like that has happened or is even conceivable. Jackson said, "If we don't do this it means that the trial was a farce." Well we haven't done it so that means the trial was a farce, even though the guilty were maybe the most guilty criminals in modern history. So a Trial modeled on Nuremburg would not be a good thing at all. It would simply be a trial of the defeated and that only engenders further hatred, anger, and promises an ugly conflict. An honest trial, which tries everyone, might be conceivable, but my guess is that it's probably not a good idea, just as it wasn't carried out in the countries that I mentioned.


So in South Africa, Guatemala, and El Salvador there were plenty of people guilty of terrible crimes, mostly the government, but they weren't punished. There was a truth commission that allowed for coming to terms with the crimes or at least recognizing them and was kind of an apology for them, but there was no punishment, and that was probably a wise move. Since you have to have to find a way to live together and maybe there should be punishments, maybe not, you know that depends of the society and how it decides to address these matters, but I think it should be done with caution and in a way that looks forward to the future, looks forward to laying the basis for the future of reconciliation, recognition of mutual rights, and the development of a viable social system for everyone.

Eric: So it might be more beneficial to Sri Lanka to give general amnesty to leaders on both sides instead of bringing trials against some of their own leaders?

Chomsky: Well that's a delicate problem for the society itself to face. How do we proceed to deal with the crimes and at the same time recognize that we're going to have to live together, and there's no simple answer to that.

Eric: There is some thought about how Sri Lanka might have global implications in the lessons for future conflicts. Since World War Two there have been countless conflicts where the UN and the global community have called for cease-fires to occur as quickly as possible, peace talks to begin, and even peacekeepers to be deployed, but in so many cases, even if the war does stop momentarily, it will rise up again, such as in Ethiopia and Eritrea, in Sri Lanka several times, and in other cases. Might it be that more lives will be saved if conflicts are allowed to see themselves out and decisive military victories and defeats are allowed to be determined instead of stopping a war before it can be really resolved?

Chomsky: Well, I think every possible effort should be made for peaceful diplomatic resolution. There's a terrible burden of proof to bear for those who would advise violence as a solution, and I think the resort to violence has almost always been harmful, almost bitterly so, so I think the first assumption should be that international peacekeepers and diplomacy would be a far preferred outcome and only if it is simply impossible to execute should the situation be allowed to deteriorate into violence, which is usually very harmful for everyone. There are some places where peacekeeping has pretty well worked.

Eric: Could you maybe name an example of that, such as maybe Korea?

Chomsky: Well in Korea there hasn't been another war, but take Egypt and Israel. There are Peacekeeping forces in the Sinai and there hasn't been further violence. On the other hand, in Southern Lebanon there are UN peacekeeping forces, but it has not prevented Israel from continuing to invade. It may have limited the scope of the aggression and probably did, in fact, have some sort of deterrent effect, but not much. There is just a mixture of cases around the world. It is certainly preferred and should be pursued as much as possible. One would hope it could lead to a direct resolution, which has sometimes happened. Take Sudan, which is a horrible situation, but one of the more positive steps that the Bush Administration took was helping to bring about a reduction, not total resolution, but at least a reduction of the conflict between the North and South in their civil war, and that's the solution that should be preferred. The same in Indonesia. After the US and Britain supported, strongly supported, Indonesia's invasion and massacres in East Timor, one of the worst in the world and probably wiped out a quarter of the population, but when the US finally agreed, under a lot of pressure, (international and domestic) Clinton agreed to tell the Indonesians to pull out, which of course, they did, then there was a peacekeeping force that was sent in, a UN peacekeeping force, Australian led, which did reduce and largely eliminate the residual violent conflict. It was far from a complete success, but it was a partial success.

Eric: I understand. I'd like to move our conversation here to America, and some of the new developments that have been going on this year. Especially now that we have a new president, I would like to get your opinion of him on some issues, but as an introduction to that, can you tell me any initial thoughts you have for the now concluded Bush Administration?

Chomsky: Well, the Bush Administration certainly ranks as one of the worst in American history, maybe the worst. It has led to catastrophe in almost everything it touched. The domestic economy and social system is entering into its worst collapse since the Great Depression in substantial measure because of measures taken by the Bush Administration, though they go back deeper to the Clinton Administration and the Reagan Administration. Internationally, it has carried out two wars, both of them catastrophic for the victims and harmful to the US too. It's led to a decline in the prestige of the United States to a historic low. The US has never been so disliked and often hated throughout the world. In fact it tore apart the system of civil liberties. Fortunately it's pretty resilient so it will survive, but they certainly tried to undermine The Constitution severely. It's really not necessary to discuss it in detail. The point is that the Bush Administration was so disliked even internally that in the last election both parties ran against it. The Republican Party ran against the incumbent administration, which was considered a liability, so they tried to keep him out of it, which is a good measure of the harm it caused to the United States and even worse to the world. I mentioned one positive element and there are a few others, but by and large it was a disaster.

Eric: There are several Republicans that have stated that because there have been no attacks after September 11th, and because so many presidents that are unpopular in their day are remembered more positively in the future...what do you think his legacy will be 50 or 100 years from now?

Chomsky: You do hear that argument, which is quite amazing. There were no terrorist attacks between 1993 and 2001. In 1993 there was an attempt to blow up the world trade center which came very close to succeeding. With a little better planning it probably would have killed ten thousand people. But there were no terrorist attacks between 1993 and 2001 without the attacks on civil liberties and without the wars and aggression, so what does it tell us? The fact of the matter is that under the Bush administration, terrorism vastly increased. It was expected that the invasion of Iraq would lead to an increase in terrorism around the world and it did, but far more than was expected. Terrorism went up by about a factor of seven after the invasion of Iraq. Other actions of the Bush Administration which were alleged responses to terrorism had terrible effects elsewhere. Take Somalia. The Bush Administration started going after charities, Islamic charities and one of the charities they went in after and destroyed was a charity which they charged with terrorism and later conceded that there wasn't any basis for the charge. Meanwhile they destroyed the charity which was providing some of the main support for the economy of Somalia. The result was that Somalia descended into chaos, and that's even greater chaos than before. Then the Bush Administration supported an Ethiopian invasion, which made it much worse.

Now it's one of the major humanitarian crises in Africa. A substantial part of that was alleged action to protect the United States from terror that had an effect of zero, but the effect of Somalia was horrible and there are other cases like that. So that argument is awful. As for the legacy of the Administration, that depends very largely on the propaganda system. So take, say, Ronald Reagan. Reagan was not a particularly popular president. In fact, his popularity was roughly normal when he was in office or afterwards. His record was shocking. He was the most protectionist president in Post-War American history. He doubled protectionist barriers. He virtually brought The Pentagon in to teach backward American management Japanese modern production techniques. He bailed out banks. He left the country with an enormous deficit. The growth rate under Reagan was lower than in any other Post-War decade. He has a large share of the responsibility for the development of radical Islam in Afghanistan, and more crucially in Pakistan where it is an extremely dangerous phenomenon. Through the support of the Zia dictatorship h carried out massive terrorism. He's one of the leading terrorists in the modern world and has caused hundreds of thousands of people to be slaughtered in Central America. He supported the Apartheid regime, violating congressional sanctions.

On and on with an awful record, but a couple of years after his death the right wing of the Republican Party initiated a propaganda program called the Reagan Legacy which tried to construct an image of him as a great hero and the holy saint of free trade, which he opposed and on and on, and now you can't go into a town in the United States without seeing a Reagan library or Reagan airport or something. The memorial when he died was one of the most embarrassing period of American history with something you might expect in North Korea, but it did create a totally fabricated Reagan legacy which has now instituted itself into the historical consciousness. So it can be done with massive propaganda and maybe this will be done with Bush. I kind of doubt it, but it's conceivable. If the legacy is based on the actions, it will be viewed as a very dark part of America history.

Eric: We've been talking about the War on Terror led by the USA and her allies for several questions now, but I'd like to talk about it directly. I know that you are opposed to the Iraq war, as well as several other incursions, such as what we've done in Somalia, but what are your thoughts regarding Afghanistan? Was the US right in invading Afghanistan following 9/11?

Chomsky: I felt that was a major crime and still do. The United States invaded Afghanistan for a very explicit reason. It was made public, but there has been a lot of lying about it since, but it was very public. The reason was that the Taliban- the Bush Administration demanded that they hand over Osama Bin Laden to the United States and they asked for evidence of his crime. Well the Bush Administration wouldn't provide any evidence so they invaded. The reason they didn't provide any evidence, it later turned out, was because they didn't have any. Eight months later the FBI conceded that after the most major international investigation in history, they simply didn't have any evidence. They believed the plot for 9/11 was hatched in Afghanistan, but was probably implemented in the Arabian Peninsula and in Europe.

So they invaded, and they invaded with the knowledge that they were putting several million people at risk of starvation. They were right at the edge of starvation and an invasion might have driven them over the edge. Their estimate was 2.5 million people. In fact, the aid agencies and others were infuriated by this and they had to pull out their support and so on. Fortunately the worst didn't happen, but to carry out an invasion on that assumption, when your sole goal is to get the government to hand over somebody when you can't provide evidence is just a major crime and the invasion has had a horrible effect on Afghanistan. Some of the current studies of public opinion reveals that one of the most popular figures in Afghanistan right now seems to be Najibullah, the last Communist ruler of the country after the Russians had withdrawn. Since then the US has turned the country over to warlords who tore it to shreds, then invaded, and now the country is heading towards disaster.

As for current policies, I think Obama looks more aggressive and violent than Bush. The first acts to occur under his administration were attacks on Afghanistan and in Pakistan, both of which killed many civilians and are building up support for the Taliban and terror. He wants to extend the military side of the war. There is an Afghan peace movement, which is calling for a reduction or an end of terror. President Karzai has pleaded with the United States not to carry out attacks that will hit civilians and, in fact, has demanded a timetable for the withdrawal of foreign forces, American forces, but that's just totally disregarded and the opportunities for a peaceful settlement are just ignored. There are reasons for that I won't go into, but I think it's a terrible policy. They're ruinous for the Afghans and maybe for the Americans as well. It's also spilling over into Pakistan, naturally, which is really dangerous. Pakistan, by now, is partially under the control of the radical Islamist elements that Reagan helped install there. It's an extreme danger for Pakistan and actually for the world, since Pakistan has nuclear weapons.

Eric: On that note, Obama has previously stated that he would send troops into Pakistan's tribal regions if the Pakistani military forces were unable to crush the Taliban and Al Qaeda forces there. Do you think this is a real possibility, and if so, does Obama risk a similar backlash at home and across the globe that maybe President Nixon got after the Cambodian Incursion and the American air support for the ARVN's efforts in Laos back during the Vietnam War?

Chomsky: It's possible, but the real issue will be what it does to Pakistan and Afghanistan, and there I think it would be ruinous.

*At this point we ran out of time so we said our goodbyes.

Eric Beilay can be reached at eb@srilankaguardian.org

Wednesday, February 18, 2009

புலிகள் பொய்பிரச்சாரம் செய்கிறார்களா ?

இலங்கை அரசின் பாதுகாப்பு தளத்தில் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். புலிகள் பொய்பிரச்சாரம் செய்வதாகவும் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களைத் தற்போது எடுக்கப்பட்டது போலக் காட்டுகிறார்கள் எனவும் அது கூறியிருந்தது.

அதற்கு ஆதாரமாக புலிகள் வெளியிட்டிருந்த புகைப்படங்களை அவர்கள் ஆய்ந்ததில் வந்த விடையை வெளியிட்டுள்ளார்கள். புலிகள் இம்மாதம் 6 ம் தேதி, புத்துணர்வுடன் இருக்கும் பல பெண் புலிகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். அதில் சில சிறுமிகளும் அடங்கும். ஆனால் அவைகள் அனைத்தும் கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டிருந்தவையாகும். இது இலங்கை அரசின் இத் தளத்தில் கூறப்பட்டுள்ளது.

நானும் சற்று ஏற்பட்ட ஆர்வக் கோளாறினால், ஏதோ முயற்சி செய்தேன். புலிகளின் அந்த இணையதளத்திற்கு சென்று அந்த பக்கத்தினை கூகிளின் துணையுடன் சென்றடைந்தேன். அது இது.

அவர்களது புகைப்படத்தினை கிளிக் செய்யவும், அது பெறிதாக தோன்றியது. பின்பு அதை வலதுகிளிக் செய்து டெஸ்க்டாப்பில் சேமித்தேன். டெஸ்க்டாப்பிலுள்ள இப்படத்தின் ஐக்கானை வலது கிளிக் செய்து 'ப்ராப்பர்டீஸ்' (Properties) எனத் தெரியும் தன்மைகளைப் பார்த்தால் அவர்கள் கூறுவது உண்மைத் தான்.

நான் முயற்சி செய்ததன் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு கட்டாயமாக தமிழ்னெட் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும். கேமரா தேதி தப்புன்னு சொல்ல முயற்சிக்கலாம்.


Labels: ,