Saturday, November 17, 2007

வஹாபிசம் ஏன் ஒழிய வேண்டும்

சில வருடங்களுக்கு முன்பு எனது நெறுங்கிய நண்பர் வகாபிசத்தையும் சூபியிசத்தையும் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் சூஃபியிசத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர். அவர் 'திண்ணை' இணைய தளத்தில் வந்த சில விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.

நான் ரெண்டு பக்கமும் சாயாம ரொம்ப டிப்ளமேட்டிக்கா பதில் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வெளிப்படையாத் தான் எழுதினேன். அது ஒரு நீண்ட‌ பதில். அதில் நான் சொன்ன கருத்துக்களை இங்கே தமிழில் கொடுக்க எனக்கு நேரமில்லை.

ஆனால் 'இதை பற்றி ஒரு பத்தியேனும் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஒரு தருணம் வந்துள்ளது. பிபிசி யில் வந்துள்ள ஒரு செய்திக்கான அறிமுகத்திற்காக இந்த பதிவு.

(வகாபிகள் தாக்குதல் தொடுக்க வாய்ப்புள்ளது என்பதால்) முதலில் சூபியிசத்தைப் பற்றி என்ன சொன்னேன் என்று பாதுகாப்புக்காக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சூபிகளின் சில இலக்கியங்களை நான் படித்துள்ளவரை அது இஸ்லாமிய மதத்துடன் நாம் குழப்பிக் கொள்ளவேண்டிய விஷயம் அல்ல. அது ஒரு வகையான சிந்தனையைத் தூண்டக் கூடிய இலக்கியங்கள். சூபி தனது இறைவனையும் தனக்கு பிடித்த மனிதரையும் புகழ்ந்து பாடியிருப்பார். மனித மனத்தினைப் பற்றியும், தமது பிறப்பிற்கான காரணத்தினைப் பற்றியும் தனது கவனிப்புகளையும் எண்ணங்களையும் கூறியிருப்பார். அதில் அவரது சிந்தனையை நாம ரசிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். சூபியிசத்துல எனது ஈடுபாடு இந்த அளவில் மட்டும்தான். நான் சூபிக்கு தெய்வீக சக்தி இருக்குன்னு ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு விரோதமானது.

இவ்வாறு எழுதிவிட்டு, சூபிகளை வணங்கும் சூபியிசத்தைப் புகழ்ந்து 'திண்ணை'யில் எழுதும் சிலருடைய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை எனக் கூறினேன்.

இப்போது வகாபிசம் பற்றி .........

வகாபியிடம் போயி 'சூபி பற்றி என்ன நினைக்கிறீங்க ?' என்று கேட்டால் 'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க' என்று சொல்வார். ஆனால் அதோடு அவர் நிக்க மாட்டார். ரொம்ப நேரம் உங்களிடம் பேச ஆரம்பிச்சிடுவார். நீங்க கொஞ்சம் நிதானமா அவர் பேசுவ‌தைக் கேட்டீர்களானால் கீழ் கண்ட முடிவுகளுக்கு வருவீர்கள்

1) "ஆண் என்பவன் ஆண்குறியையும், பெண் என்பவள் பெண்குறியையும் உடையவர்கள்" என்பது போன்ற உன்னதமான சிந்தனையைத் தவிர, ஒரு வகாபி, அதற்கு அப்பால சிந்திக்க மாட்டார் என்று நீங்கள் உணரலாம். ஒருவருடைய வாழ்வியல் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என அவர் வாதிடுவதைப் பார்க்கலாம்.

2) "உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.

3) நீங்கள் அறிவினைப் பயன்படுத்த விருப்பப் பட்டால், அவர்கள் ஆதாரபூர்வமான மத நூல்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பார். நீங்களும் என்னைப் போல மத நம்பிக்கை உடையவர் என வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொள்வீர்கள். ஆதாரபூர்வமான நூலில் காணப்படும் வாழ்வியல் முறையை பின்பற்ற ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் 'ஆதாரபூர்வமானது' என்பது எது என்பதையும் அதற்கான வரைமுறைகளையும் அவர்களே வகுப்பார்கள் என்பது தான் பிரச்சனையே. "ஆதாரபூர்வமானவைகளையே நாம் பின்பற்ற வேண்டும்; ஆனால் 'ஆதாரபூர்வமானது' எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நான் தான் கற்பிப்பேன்" என அவர் முரண்டு பிடிப்பதை நீங்கள் காணலாம்.

இது பற்றி நாம எழுதிகிட்டே போகலாம்... எனக்குத் தான் நேரமில்லை.

எனது ஊர்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வது போல சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது.

அராபிய தேசங்கள் வகாபிசத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே, அது அரபு மேலாண்மையைத் தூக்கிப் பிடிப்பது தான். மற்ற பண்பாடுகளின் அழிவினை நாடக்கூடியவைகள் தான். அந்த பண்பாடுகளில் இஸ்லாமிய இறைக் கொள்கைக்கு எதிரான கூறுகள் இல்லாவிட்டாலும் அதன் அழிவினை வகாபிசம் நாடுகிறது.

இந்த சிந்தனையில் எழுப்பப் பட்ட வாகாபிசத்தைப் பின்பற்றும் மத்திய் கிழக்கு நாட்டினரிடம் அராபியர்‍/அரபியல்லாதார் பாரபட்சம் வருவது இயற்கையே. இந்த பாரபட்சத்தை வகாபிசம் நேரடியாக போதிக்காவிட்டாலும், அது எழுந்து நிற்கும் அடித்தளம் இந்த பாரபட்சத்தினை நியாபடுத்துகிறது. வகாபி/வகாபியல்லாதார் என்று வரும்போது கூட இப்பாரபட்சம் இயற்கையாகவே தலைதூக்க்குகிறது.

வகாபிசம் என்பதாவது, ஒரு மனிதனின் சிந்தனையைவிட சிலர் எழுதிய புத்தகங்களே மேலானவை என கருத்தாக்கம் கொண்டு, "ஆதாரப்பூர்வமானவை" என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும் புனிதப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் என்பதால் அடிப்படைவாதமும் உரிமை மீறல்களும் மலிந்து கிடக்கின்றன.

நிச்சயமாக வகாபிசம் ஒழிய வேண்டும். இது சூபியிசம் போல ஒருவருடைய தனிமனித வாழ்க்கையைச் சார்ந்த கருத்தியலில்லை. சட்டம், நீதி, அரசியல் போன்ற பொது வாழ்க்கை அம்சங்களில் நுழைவதால், தனி மனித உரிமைகளைக் காக்கும் பொருட்டு வகாபிசத்தை எதிர்க்க வேண்டியது கடமையாகிறது:

இனி பிபிசி செய்தி: http://news.bbc.co.uk/2/hi/middle_east/7098480.stm

இச்செய்தி வகாபிச சிந்தனையின் கோரமுகத்தினை திரைவிலக்கம் செய்து காட்டுகிறது.

(குறிப்பு: இந்த செய்தியினை சங்-கூட்டத்தினர் தங்கள் வலைபதிவுகளில் ஏற்றி விமர்சிப்பதற்கு என்னுடைய இந்தப் பதிவுக்கு சுட்ட (cite) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் சங்-சித்தாந்தத்திற்கு விரோதி.)

(2012 செப்டம்பர் மாதத்தில் இந்த பின் குறிப்பினை எழுதுகிறேன்: இந்த கால கட்டத்தில், சூஃபியிசம் பற்றிய நிலைப்பாடு மாறியுள்ளது. 2007-ல் இந்த பதிவில் சூஃபியிசம் பற்றி நான் கூறியுள்ளவைகளை இப்போது நான் ஏற்கவில்லை)