tag:blogger.com,1999:blog-164633172024-02-21T10:03:49.793+05:30இங்கே சொல்லப்படும்சில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-16463317.post-90484571849545706302015-05-30T09:55:00.001+05:302015-05-30T10:00:46.982+05:30பர்மிய முஸ்லீம்களும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கீழ் உள்ள முஸ்லீமல்லாதவர்களும்<br />
பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphenEJOpxGo9aCV4JrZPiw-Hp-Xx3BCkkLgXFjImfBWPlOAIlo37b68oanQB4qmK7eN8QFoKKI9sZRI2jpXEz2AWGoMJyoijPOjf9IWI3q44BasD8XndbIZt2Iatk8QzjPyHWIJ/s1600/tntj_rohingya_photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphenEJOpxGo9aCV4JrZPiw-Hp-Xx3BCkkLgXFjImfBWPlOAIlo37b68oanQB4qmK7eN8QFoKKI9sZRI2jpXEz2AWGoMJyoijPOjf9IWI3q44BasD8XndbIZt2Iatk8QzjPyHWIJ/s320/tntj_rohingya_photo.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஆனால், அவர்களால் ஓரளவிற்கேனும் அநீதிக்கு எதிராகப் பங்காற்ற இயலும் பிரச்சனையில் மெளணம் காக்கிறார்கள். இஸ்லாமிக்-ஸ்டேட்டின் கொலை, கொள்ளைக் கற்பழிப்புகளுக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்தால், அவைகள் பல முஸ்லீம்களைச் சென்றடைந்து பலன் விளைவிக்கும். இந்த இயக்கத்தினர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இருப்பதால், இவர்களால் மிக எளிதாக பணியாற்ற இயலும். ஆனால் மெளணமாக உள்ளனர். (இஸ்லாமிக் ஸ்டேட்டின் இழிசெயல்களுக்கு ஆதார செய்தி: http://www.bbc.com/news/world-middle-east-30573385 ).<br />
<br />
இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர்கள் மாற்று மத ஆண்களை, அவர்கள் <br />
கைதிகளாக இருந்தாலும், அவர்களைக் கொலைச் செய்வதும், பெண்களைக் கற்பழிப்பதும் விற்பதுமாக உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் இந்த இழிசெயல்களை மதம்-சார்ந்த மார்க்க செயலாகச் செய்துவருகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், இவர்களின் இந்தச் செயல்கள் அவர்களது தனிப்பட்ட இயக்கச் செயல்கள் அல்ல. அவைகள் அவர்கள் நம்பும் மதக் கொள்கையினைச் சார்ந்தது. இவ்வாறு தான் நபி அவர்களின் தோழர்கள் செய்ததாகவும் நபி அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களது புகாரி போன்ற புனிதமான புத்தகங்கள் கூறுவதால், இவ்வாறு கற்பழித்து அவர்கள் நம்பும் இஸ்லாத்தின் பணியினை ஆற்றுகின்றார் <br />
<br />
அந்த புகாரிப் போன்ற புத்தகத்திலுள்ள இதுபோன்ற ஹதீஸ்கள் (அதாவது வரலாற்றுக் குறிப்புக்கள்), அவர்கள் வரையறுத்த "ஆதாரப் பூர்வமானவை" எனும் வகையைச் சேர்ந்ததினால் இவர்களும் அத்தகையக் கற்பழிப்புகளை மார்க்கப் பணியெனக் கருதுகிறார்கள் போலும்.<br />
<br />
இவர்கள் இந்தச் செயலைக் கண்டிக்கவேண்டும். தனது வளைகுடா-வாழ் தொண்டர்கள் மூலம் இந்தக் கண்டனத்தினை சவுதி அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்தோடல்லாமல், அந்தக் கற்பழிப்பாளர்களுக்கு, இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய முன்வருவார்களா? மாட்டார்கள். செய்யவேண்டும் மென்றால் எப்போதோ செய்திருக்கவேண்டும். வேண்டுமானால், இவைகளை அவதூறு என்று கூறுவாரி மழுப்புவார்களேத் தவிர கண்டிக்க மாட்டார்கள்.<br />
<a href="https://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16463317.post-61547356601919620842014-06-19T15:05:00.001+05:302014-06-19T15:05:49.731+05:30"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல<a href="http://www.tntj.net/256876.html"> புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது</a>. அப்புகைப்படத்தின் படி கணிசமான மக்கள் குவிந்திருந்திருக்கின்றனரென்று தெரிகிறது.<br /><br />இந்த மக்களைக் குவிக்க, அவர்களை அழைத்து அந்த தவ்ஹீத் ஜமாத் <a href="http://www.tntj.net/256568.html">வெளியிட்டிருந்த அறிவிப்பு செய்தியும் அவர்களது இணையதளத்தில் காணப்படுகிறது</a>. அந்த அறிவிப்பினைக் கீழே மேற்கோள்-குறிகளுக்கிடயே காட்டியுள்ளேன்:<br /><br />" <br />இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.<br />இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.<br /><br />நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.<br /><br />இப்படிக்கு<br />தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்<br />மாநிலத் தலைமையகம்.<br />"<br /><br />இவர்களது இந்த அழைப்பு விடுக்கும் அறிவிப்பின் வாசகங்களைப் பார்ப்போம். அதில் உள்ள ஒரு வாசகம்: "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்". இதுவரை நான்கு முஸ்லீம்கள் இறந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் செய்திவெளியிட்ட தேதியன்று மூன்று முஸ்லீம்கள்தான் இறந்துள்ளனர். இப்படியிருக்க, "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்"- என்று எழுதுவது சரியா? இவ்வாறு எழுதுவது அபாண்டமல்லவா? இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா? இவர்களது இந்த துல்லியமற்ற மற்றும் ஏகத்திற்கும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை சோடிப்புகளால், எத்தனைப் பேர்களது மனதில் பதற்றத்தினை அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளனர்? இது முறையா?<br /><br />மேலும் "சிங்கள ராஜபக்ச அரசைக் கண்டித்து" என்று எழுதியுள்ளனர். அவர் சிங்களராக இருப்பது எப்படி இந்தப் பிரச்சனைக்குப் பொருந்தும். தவ்ஹீத் ஜமாத் முட்டாள்களின் கூடாரம் என்பதற்கு இது சான்றல்லவா? "குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்ற பழமொழிக்கேற்றவாறு குரங்குக் கூட்டமாக இருக்கிறதல்லவா இந்த தவ்ஹீத் ஜமாத்?<br /><br />இது தவிர,<br /><br />கீழ் கண்டவாறல்லவா முஸ்லீம்களை வழி நடத்திருக்கவேண்டும்:<br /><br />1. பெருவாரி மக்களிடம் சிறுமான்மையான முஸ்லீம்களே நீங்கள் உங்கள் அடையாளத்தினைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். அவரகளது கலாச்சாரங்களை அழிக்க முயற்சியெடுக்காதீர்கள். "ஹலால் சர்டிஃபிக்கேட்" போன்ற அடையாள மேலோங்களுக்கான அட்டகாசங்களை விட்டுவிடுங்கள். பெருவாரி மக்களிடம் ஒற்றுமையுடன் நீங்கள் இல்லையென்றால் அழிந்துபோவீர்கள் --- என்று அறிவுறுத்திருக்கவேண்டாமா?<br /><br />2. இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களே, உங்களிடம் ஏற்கனவே மதத்திற்குட்பட்ட நல்ல செயலான, "தலைக்குத் துண்டு அணிதல்" எனும் பாரம்பரியம் இருந்து வருகிறது. அது போதுமானது. "புர்கா" அணிவதுதான் மார்க்கமென்று ஒன்றுமில்லை. "புர்க்கா" அணிவதால், பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பிரச்சனை வருகிறதென்றால், "புர்கா" அணிவதற்கு பதிலாக உங்கள் பாரம்பரியப் படியே நடந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தினை நீங்கள் பின்பற்றுவதற்கு ஒற்றுமையான சூழல் கட்டாயம் தேவை. -- என்று அறிவுறுத்த வேண்டாமா?<br /><br /><a href="https://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-16463317.post-10906810605109240642014-02-19T12:02:00.003+05:302014-02-19T12:02:31.986+05:30சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல் சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பற்பல அரபி கலைச் சொற்கள் உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிமல்லாதோர்களும் விளங்கிக் கொள்வதற்காக அந்த கலைச்சொற்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன். <br />
<br />
அந்த வீடியோவினைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் அந்த வீடியோவில் கூறப்படும் சில கருத்துக்களைப் பற்றி சிறு விமர்சனங்களை முன்வைக்கிறேன்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/eUg0J3cLlFw" width="420"></iframe><br />
<br />
<br />
அந்த வீடியோவில், அத்வைதக் கோட்பாடுகளுக்கும் சூஃபி தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பேசப்படுகிறது. தீன்-முகம்மதவர்கள், அத்வைதம் பற்றி தான் நன்கு அறிந்தவரல்ல என்றும், சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதினைப் பற்றி சிறிதுப் படித்துள்ளதாகவும் கூறிவிட்டு, சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாகத் தான் படித்த சிலவற்றவைகளையும் கூறுகிறார். பின்பு சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாக தான் கூறியது, எவ்வாறு சூஃபி தத்துவத்தினின்று வேறுபடுகின்றதென்றும் கூறுகிறார். <br />
<br />
ஏறத்தாள இந்தப் பிரபஞ்சமே (Universe, அண்டம், உலகம்) இறைவன் என்று சங்கராச்சாரியார் கூறியதாக தீன்-முகம்மது அவர்கள் அபிப்ராயம் கொண்டுள்ளார். இந்த அபிப்ராயம் சூஃபிக் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது என்றுக் கூறி எவ்வாறு மாறுபடுகிறதென்பதினை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.<br />
<br />
பிரபஞ்சத்தில் காணப்படுபவைகளுக்கு இருக்கக் கூடியத் தன்மை போலியானதென்றும், அந்த இருக்கக் கூடியத் தன்மை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றும், ஆனால் பொருட்களுக்கு அந்தத் தன்மை கடவுளிடமிருந்து வழங்கப்படுகிறதென்றும், இது சூஃபி நம்பிக்கையின் அம்சமென்றும் கூறுகிறார் தீன்-முகம்மதவர்கள். எனவே பொருட்களின் தொகுப்பினைக் கடவுளென்று கூறமுடியாதென்று தீன்-முகம்மதவர்கள் விளக்குகிறார். எனவே இது சங்கராச்சாரியார் கூறியதாகத் தான் கூறியதிலிருந்து வேறுபடுகிறதென்றும் விளக்குகிறார்.<br />
<br />
ஆனால் சங்கராச்சாரியாரவர்கள் கூறியதாக தீன் முகம்மதவர்கள் கூறியதை சங்கராச்சாரியாரவர்கள் கூறவில்லையென்று கருதுகிறேன். பொருட்களைக் கடவுளென்று சங்கராச்சாரியார் கூறியவரல்ல. மாறாக, பொருட்களின் மீதான விளைவுகள், தன்மைகள் அவனுடையவையென்று அவர் கூறியவரென்று நம்புகிறேன். ஏறத்தாழ சூஃபிக்களின் நம்பிக்கையாக தீன்-முகம்மதவர்கள் விவரிப்பதைத்தான் சங்கராச்சாரியாரும் கூறியுள்ளாரென்று நம்புகிறேன். அத்வைதம் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கமும் இதைத்தான் கூறுகிறது. இப்னு-அரபி எனும் சூஃபி கூறியதும் சங்கராச்சாரியார் கூறியதும், ஒரே வாக்கியங்களில் உள்ளன: "இந்த உலகம் போலி ஆனால் முற்றிலும் போலியல்ல".<br />
<br />
புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவில் கையாளப்படும் உதாரணமாகிய அலை ஒரு நல்ல உதாரணம். பொருட்களைக் கடவுளென்பது, தண்ணீரினை அலையென்று கூறுவதற்கு சமமானது. எனவே தவறானது. மேலும் அலைக்கு இருக்கக்கூடியத் தன்மை நிரந்தரமானதல்ல, எனவே அலையும் கடவுளின் பகுதியல்ல, ஏனெனில் கடவுள் நிரந்தரமானவன். இருக்கக் கூடியத்தன்மை, அலைக்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. அலையின் இருக்கக் கூடியத்தன்மையினை அலையினுடையதென்பது, இறைவனுக்கு இணைவத்தலெனும் இஸ்லாமியக்குற்றமாகும். அது நம்மைப் போலியுலகில் ஆட்டிப்படைக்கும்.<br />
<br />
வீடியோவில் கையாளப்படும் பச்சை நிறம் பற்றிய உதாரணமும் அருமை.<br />
<br />
மேலும் பற்பல அம்சங்களில் அத்வைதமும் சூஃபி தத்துவங்களும் உடன்படுகின்றன. சூஃபி தத்துவங்கள், "இறைவன் ஒருவன்", "இறைவனுக்கு இணையில்லை" என்ற கருத்துக்களின் அடிப்படையில் ஏற்பட்ட சிந்தனையாதலால், சூஃபி தத்துவங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய தத்துவங்களுமாகும்.<br />
<br />
<br />
இப்போது அந்த வீடியோவில் கையாளப்படும் அரபு கலைச் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே உள்ளன. மூன்றாம் நிமிடத்திலிருந்து வரும் காட்சிகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.<br />
<br />
"ஷாஃபி மத்ஹபு" ----- இலங்கை முஸ்லீம்கள் பின்பற்றும் ஒரு விதமான மதச்சட்ட அமைப்பு முறை;<br />
"காதிரியா, ஷாதுலியா, நக்க்ஷபந்தியா தரீக்காக்கள்" ----- இவைகள் ஒருவிதமான குரு-குல பயிற்சி முறைகள் அல்லது தொடர்கள்;<br />
"திக்ரு"-- இறைவனின் பெயர்களைக் கூறி அவனை ஞாபகம் கொள்ளும் ஒரு முறை<br />
"தசவ்வுஃப்" - சூஃபிஸம்<br />
"சுன்னா"- நபி அவர்களது முறைகள்<br />
"அக்கீதா"- இஸ்லாமிய இறைக் கொள்கை<br />
"வஹ்ஹாபிச இயக்கம்" - குர்-ஆன் மற்றும் நபி அவர்கள் பற்றி நூற்றாண்டு காலங்கள் கழித்து எழுதப்பட்ட செய்திகளை, "ஆதாரபூர்வமானது", "பலஹீனமானது" பிரிக்கும் முறைகளில் எந்த தவறுமில்லையென்று மனப்பூர்வமாக நம்பும் இயக்கங்கள். <br />
"குஃப்ர்" - இஸ்லாமியக் கொள்கைகளை நிராகரித்தல்<br />
"ஷிர்க்" - இறைவனுக்கு இணையாக எதையாவது கருதுதல்<br />
"மஹப்பத்" - அன்பு<br />
"தீன்"-- இறைவன் பற்றிய நம்பிக்கைகளுடன் வாழும் முறை <br />
"காஃபிர்கள்" -- இறைவனை அல்லது இஸ்லாமிய தத்துவங்களை நிராகரிப்பவர்கள்<br />
"இஸ்லாமிய கிலாஃபத்" -- இந்த வீடியோவில் தீன் முகம்மதவர்கள் இந்த வார்த்தைகள் மூலம் சுட்டுவது அரேபியா மீதான துருக்கிய ஒட்டோமானியர்களின் இஸ்லாமிய ஆட்சி<br />
"உலமாக்கள்" -- இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பற்றிக் கற்றறிந்தவர்கள்<br />
"கஸ்ஸாலி" -- இவர் சூஃபிஸம் இஸ்லாத்திற்குட்பட்ட நம்பிக்கையே என நிரூபித்தவர்<br />
"ஷாஃபி" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்<br />
"அபூ ஹனீஃபா" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்<br />
"இப்னு தைமிய்யா" - இவர் கஸ்ஸாலிக்கு எதிர்பதமானவர். <br />
"ஷேகுல் இஸ்லாம்" - "இஸ்லாமிய குரு". இது வஹ்ஹாபிகள் இப்னு தைமிய்யாவிற்கு கொடுத்தப் பட்டம்<br />
"அமானத்" - ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை<br />
"வஸீலா தேடுதல்" - உதவி தேடுதல்<br />
"ஹதீஸ்" - நபி அவர்கள் பற்றிய செய்திகள்<br />
"உஜூத்" --- உள்ளமை, இருக்கக்கூடியத் தன்மை, existence<br />
"உஜூதுல் வாஜிப்" --- "கட்டாயமாக இருக்கக் கூடியத் தன்மை"<br />
"மும்கினுல் உஜூத்" --- "இருக்க சாத்தியமானவைகளின் இருக்கக் கூடியத் தன்மை"<br />
"மவ்ஜூத்" --- இருப்பவை<br />
"சிஃபத்" - பண்பு, தன்மை<br />
"ஹதம்" -- இல்லாமை<br />
"குன்" - "ஆகுக" என்று கட்டளையிடுதல்<br />
"வஹ்தத்துல் உஜூத்" -- இருக்கக் கூடியத் தன்மையினை ஒன்று என நம்பும் மெஞ்ஞானத் தத்துவம் (Oneness of Existence)<br />
"ஒதுவெடுப்பது" --- தொழுகைக்கு முன்பு தனது உறுப்புக்களை தண்ணீர் கொண்டு தூய்மை செய்தல்<br />
"அனல் ஹக்" - நானே உண்மை (இங்கு "உண்மை" என்பது கடவுளின் பெயர்களில் ஒன்று எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது)<br />
"ஷரியத்" - வெளிரங்கமான சட்டதிட்டங்கள்<br />
"மாரிஃபா" - இறைவன் பற்றிய ஞானம்<br />
"காலிக்" - படைப்பவன்<br />
"ஃபத்வா" - மதத் தீர்ப்புமு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16463317.post-81208802829357918362014-02-14T11:37:00.001+05:302014-02-14T13:54:35.340+05:30பிஜேயின் கடவுளின் விலங்கியல் பெயர் : ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ் (Homo Sedentarius-Sedes)<br />
தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான "பிஜே" எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டெதென விவரித்தார். இந்த விவரிப்பு 2010-ல் நிகழ்ந்தது. அவரது விவரிப்பின் படி அவரது கடவுள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றுள்ளது.<br />
<br />
1. கடவுள் வானத்தில் ஒரு திசையில் தொலைதூரத்தில் உள்ளது<br />
2. அது ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளது.<br />
3. அந்த நாற்காலியை 8 ஜின்கள்/வானவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்<br />
4. அதற்கு கைகள் மற்றும் கால்கள் உண்டு<br />
5. அது மனிதனை தனது சாயலில் படைத்துள்ளது. அதாவது கடவுள் மனிதனின் சாயலில் இருக்கிறது.<br />
6. ஆனால், அந்த மனிதக் கடவுளுக்கு சாவு கிடையாது.<br />
<br />
விலங்கியல் படி அவரது அந்த கடவுள் எனும் விலங்கிற்கு பெயரிடவேண்டும். அதுதான் முறை. ("விலங்கு" எனும் வார்த்தையை நான் "மிருகம்" எனும் தரம் தாழ்ந்த பொருளில் பயன்படுத்தவில்லை. விலங்கியல் அம்சங்களைப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் விலங்குகள் தான். மனிதர்கள் உட்பட விலங்குகள்தான்.)<br />
<br />
அவரது கடவுள், மனிதனைப் போல இருப்பதால், "ஹோமோ" ஜீனஸ் (Genus) வகையைச் சேர்ந்தது. ஆசனத்தில் அமர்ந்துள்ளதென்பதினை இலத்தீனில் மொழிபெயர்த்து அதன் இனப் பெயரினைக் கூறலாம். (அதாவது Species பெயர்). இலத்தீனில் மொழிபெயர்ப்பதென்பது, அறிவியல் மரபிற்க்காக.<br />
<br />
"ஆசனத்தில் அமர்ந்துள்ளது" என்பதினை, இலத்தீனில் "செடென்டேரியஸ்-செடெஸ்" (Sedentarius-Sedes) எனக் கூறலாம். இதனை "Google Translator" உதவிகொண்டு மொழிபெயர்த்தேன். <br />
<br />
எனவே பிஜேயின் கடவுளின் அறிவியல் பெயர்: "ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ்" Homo Sedentarius-Sedes.<br />
<br />
எனது இந்த அறிவியல்-பணிக்காக சன்மானங்களை வழங்க விரும்புவோர்கள் 123456 என்ற ஸ்டேட் பேங்க் அக்கெளண்டிற்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.<a href="https://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16463317.post-4709136895378047252014-02-13T20:18:00.003+05:302014-02-13T20:34:09.234+05:30"கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனை கடவுள் ஒருவனே என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது திருமந்திரத்தின் முதல் வரி. "உங்கள் எஜமானன் ஒருவனே" என்பது ஷிர்டி சாய்பாபாவின் முதன்மையான போதனை. இதனையே கபீரும் கூறியுள்ளார். ரிக்-வேத வரிகளும் கூறுகின்றன. "இறைவன் ஒருவன், அவன் எத்தேவையும் அற்றவன்" என்பது முஸ்லிம் குழந்தைகள் மனனம் செய்விப்பதற்கு அவர்களது தாய்மார்கள் தேர்ந்தெடுக்கும் முதல் குர்-ஆன் வரிகள். கடவுளுக்கு ஒப்பில்லையென்று வள்ளுவர் சொல்வதிலிருந்தும், வள்ளுவரும் "கடவுள் ஒருவனே" என்று கூறுபவரென அறியலாம்.<br />
<br />
(இந்தப் பதிவில் "உலகம்" என்ற வார்த்தையை Universe என்ற பொருளிள் பயன்படுத்துகிறேன்). உலகம் ஒரு காலப் புள்ளியில் தோன்றி இருக்கலாம் என்பது அறிவியலும் பல மத-நம்பிக்கைகளும் முன்வைக்கும் கொள்கை. இதன் அடிப்படையில் கடவுளின் "ஒருமை"ப் பற்றி, அதாவது, கடவுளின் ஒருமைத் தன்மைப் பற்றி சில சிந்தனைகள் கீழே:<br />
<br />
"உலகம் தோன்றியதன் மூலம் மற்றும் காரண கர்த்தா கடவுளே" என்ற கருத்தினையும், "கடவுள் ஒருவன்" என்ற கருத்தினையும் சேர்த்து ஒரு நேர்கோட்டு சிந்தனை (straight forward thought), சில விஷயங்களைக் கூறுகிறது.<br />
<br />
இந்த "ஒருமை" அல்லது "ஒன்று" என்பது, நாம் மனதில் புரிந்து வைத்துள்ள "ஒன்று" என்பதாகாது. ஆனால் பாமர நிலையுள்ள பெரும்பான்மையான மக்கள் கடவுளின் "ஒருமைத் தன்மை" என்பதினை நாம் வழக்கில் பயன்படுத்தும் "ஒன்று" என்பதைப் போன்றதென்று கருதுவது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலைக்கு ஏற்றதே. <br />
<br />
ஏன் கடவுளின் ஒருமையும் நாம் புரிந்து வைத்துள்ள "ஒருமை" அல்லது "ஒன்று"-ம் சமமானதல்ல? சற்று சிந்திப்போம்<br />
<br />
நாம் புரிந்து வைத்துள்ள "ஒன்று" எனும் வார்த்தை, அல்லது "ஒருமை" எனும் வார்த்தை, "பன்மை" எனும் வார்த்தையின் புரிதலினால் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, "இரண்டு" எனும் வார்தையின் அர்த்தத்தை மையப்படுத்தி, "ஒன்று" எனும் வார்தையைப் புரிந்து வைத்திருக்கின்றோம். அல்லது, "மூன்று", "நான்கு" எனும் வார்த்தைகளின் அர்த்தங்களை மையப் படுத்தி, "ஒன்று" எனும் வார்த்தையினைப் புரிந்து வைத்திருக்கின்றோம்.<br />
<br />
ஆனால், கடவுளின் "ஒருமை"யென்பது ஆழமானது. உலகம் "தோன்றியது" எனும் கருத்தில் நம்பிக்கை வைத்தால், கடவுளுக்கு அருகில் எதுவுமில்லை என்பது விளங்கும். எனவே "கடவுள் ஒருவன்" என்பதினைப் "பன்மை" என்பதிலிருந்து விளங்க முடியாது. <br />
<br />
உங்களுக்கு அருகில் எந்தப் பொருட்களுமே இல்லாத நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலையில், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, நீங்கள் "ஒருவன்" என்றக் கருத்துக்குப் பொருள் உள்ளதா? <br />
<br />
கடவுளின் ஒருமையை அவ்வளவு எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. விளங்கிக் கொள்ளும் நிலையைத்தான், சூஃபிக்கள், "மாரிஃபத்" (இறை ஞானம்) என்கிறார்கள். பெளத்தர்கள் இந்த புரிதலை, "பேருண்மையை விளங்குதல்" என்கின்றனர். ஏன் எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை நம்மால்? காரணம், நாம் பன்மையில் ஊறித் திளைக்கின்றோம். பன்மையெனும் அர்த்தத்திலிருந்துதான் ஒருமையெனும் அர்த்தத்தினை விளங்குகிறோம்.<br />
<br />
இந்தப் பன்மையின் அர்த்தத்தினை அழிப்பதற்காகத்தான், சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், "திக்ரு" எனும் பயிற்சியினை செய்கின்றனர். உண்ணும் போதும், உறங்கும் போதும், அமர்ந்த நிலையிலும், நடக்கும் போதும், தனது மூச்சுக்காற்றினை விடும்போதும் இழுக்கும்போதும் கடவுளின் பெயர் கூறிவிடுகின்றனர். தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கவனம் செலுத்தி, அவ்வாறு நடக்கும் செயல்களில் கடவுளின் தன்மைகளைத் தேடுகின்றனர். கடவுளின் தன்மைகளாக இஸ்லாமிய நம்பிக்கை, 99 தன்மைகளைப் பட்டியல் இடுகிறது. "அளவற்ற அன்புடையவன்", "அளவற்ற அருளுடையவன்", "மன்னிப்பவன்", "தோழன்", "வழிகாட்டி" முதலியவைகள் அவனது தன்மைகளின் உதாரணங்கள். இவைகளைத் தனது சுற்று சூழலில் கவனிப்பதும் "திக்ர்"-எனும் பயிற்சியின் அங்கம். பின்பு அந்த கடவுள் தன்மைகளை அந்த மாணாக்கன் வெளிப்படுத்த முயற்சிக்கிக்கவும் அந்த "திக்ரு" அவனை வழிப்படுத்துகிறது. இந்தப் பயிற்சி அந்த மாணக்கனை பண் படுத்துகிறது. இந்தப் பயிற்சி அவனது அகந்தையினை முதலில் அழிக்கிறது. அகந்தையே அந்தப் பன்மை-மையப் புரிதலுக்கு ஊற்று. <br />
<br />
எப்போது அந்த மாணாக்கன், பன்மை-மையப் புரிதலிலிருந்து விடுபடுகின்றானோ, அப்போது அவன் எங்கும் இறைத் தன்மைகளைக் காணுவான். குர்-ஆன் வரிப்படி, "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்".<br />
<br />
இப்போது வஹ்ஹாபிகளின் கொள்கைப் பற்றி வருவோம். (வஹ்ஹாபிகள் பற்றி நான் பேசாமல் இருக்கவே முடியாதென்றே நினைக்கிறேன்). "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்" என்று குர் ஆன் கூறினாலும், வஹ்ஹாபிகள் இதனைப் "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் கொள்கை என்றும், அது இஸ்லாத்திற்கு விரோதமானதென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே சூஃபிக்கள் வழிக்கேடர்கள் என்றும் கூறுகின்றனர். <br />
<br />
வஹ்ஹாபிகளின் இந்தக் கருத்து அறிவிலித்தனமானது. சூஃபிக்கள், தனது பயிற்சியின் மூலம், தான் எனும் அகந்தையினை அழித்தப் பிறகுதான் இது அவர்கள் மனதில் நிகழ்கிரதென்பதினால், அவ்வாறு அகந்தையினை அழிக்காத பாமரனினால் சூஃபிக்களைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்க பாமரன் அவர்களை மதிப்பிட முயற்சிக்கவே கூடாது. (இங்கு அகந்தை என நான் சொல்வதினை, அரபியில் நஃப்ஸ் என்று சொல்லுவார்கள்.)<br />
<br />
இது பற்றி மேலும் சிந்திப்போம்.....<br />
<br />
"திரும்பிய திசைகளிலெல்லாம் கடவுளின் முகத்தினைக் காண்பார்கள்" என்பதும், "பார்ப்பதெல்லாம் கடவுள்" என்பதும் ஒன்றல்ல. "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் வாக்கியம், பார்க்கும் பொருட்களை "பன்மை" என்பதினைக் கொண்டு வரையறுத்து கடவுளைப் பன்மையின் அடிப்படையிலேயே விளக்க முயச்சிக்கும் வாக்கியம். எனவே இந்த இருவாக்கியங்களும் ஒன்றுபோல தோன்றினாலும் வேறுபட்டவை. இதில் மிக கவனமாக இருக்கவேண்டும். சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், இந்த சருக்கல்களை அறிந்தவர்களே. எனவே இதனை, "கத்திமேல் நடக்கும் பாதை" என்றும் சொல்வார்கள். இந்தப் பாதையில் நடக்கும் போது மதி நுட்பத்துடன் நடக்கவேண்டும். <br />
<br />
இது போன்ற சருக்கல்களின் வாய்ப்பினாலேயே, முகம்மது நபி அவர்கள் இந்தப்பாதையினை தனது நெருங்கிய ஈடுபாடுகொண்ட நண்பர்களுக்கு மட்டும் போதித்தார். அலி மற்றும் அபூபக்கர் போன்றோர்கள் அந்த நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம். இருப்பினும் இந்த பாதையின் கருத்துக்கள் குர்-ஆனில் உள்ள பல வரிகளில் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன. இந்தப் பாதையில், ஒரு மாணவன் செய்யவேண்டிய பணிகள் எல்லாம், உள்ளம் சார்ந்தவை. முகம்மது நபி அவர்கள் போதித்த "ஷரியா" என்பது வெளிரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவைகள் உடை அமைப்பு, கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது. அதே சமயத்தில், உள்ளம் சம்பந்தமாக அவர்கள் கற்றுக் கொடுத்தப் பாதையில், "இறை நம்பிக்கை", "இறை யச்சம்" (அரபியில் "தக்வா") மற்றும் "இஹ்சான்" ஆகியவைகள் அம்சங்கள். இதில் "இஹ்சான்" எனும் அரபி வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இந்த "இஹ்சான்" என்பது தான் நான் இது வரை விவரித்த சூஃபி பாதை. "ஷரியா" எனும் வெளிரங்க வாழ்க்கைமுறையினை பாமரனுக்கும், அந்த ஷரியாவுடன் சேர்த்த "இஹ்சான்" அல்லது சூஃபி பாதையைச் சற்று மதி நுட்பமுடையவர்களுக்கும் என நபி அவர்கள் போதித்தார்கள்.<br />
<br />
மேலும் சிந்திப்போம்....<br />
<br />
இறைவனது தன்மைகள் அனைத்தும் அளவற்றது. உதாரனத்திற்கு, "அளவற்ற அருளாளன்", "அளவற்ற அன்புடையவன்", "அனைத்தையும் பார்ப்பவன்", "அனைத்தையும் கேட்பவன்". சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இறைவன் எல்லையற்றவன்.<br />
<br />
இந்த "எல்லையற்றவன்" என்பதினைக் கருத்தில் கொண்டால், நாம் இன்னொரு சருக்கலிலிருந்தும் விடுபட முடியும். கடவுள் என்பவனை இருப்பவைகளின் தொகுப்பு என்றும் வரையறுக்கக் கூடாது. இந்த எல்லையற்றத் தன்மை என்பதினை நாம் எளிதாக உணரவே முடியாது. கணிதத்தில் "எல்லையற்றது" என ஒரு "எண்" உள்ளது. எல்லையற்றது என்பதினை பாமரன் எப்படிப் புரிந்து கொள்வான்? எல்லையற்றதிலிருந்து "இரண்டு" எண்ணைக் கழித்தால் அது மீண்டும் எல்லையற்றது என்பதினை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது, ஏனென்றால், "எல்லையற்றது" என்பதினை நாம் உணர்ந்தது கிடையாது.<br />
<br />
கடவுளின் இந்த "ஒருமைத் தன்மை" மற்றும் "எல்லையற்றத் தன்மை" என்பதினைப் புரிவதன் முதல் படிதான் அகந்தையினை ஒழிப்பதென்பது.<a href="https://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-16463317.post-41394234479412761152014-02-02T12:19:00.003+05:302014-02-02T12:29:42.639+05:30"மதம்"- " நம்பிக்கை": வேறுபாடு பற்றி ஒரு சிந்தனைஅனைத்து மதத்தினர் மத்தியிலும் "நம்பிக்கை" என்று ஒன்று உண்டு. அந்த நம்பிக்கையை, "மதம்" என்பதன் ஒரு அங்கமென்று பலரும் கருதுவர். இத்தகைய கருதல், பலவிதமான பூசல்களுக்கு வித்திடுகிறது என்று எனது கணிப்பு.<br />
<br />
மதம் என்பது வாழ்க்கை முறை. மார்க்கம். இதை ஏற்றால், "எனது மதம், மதமல்ல; மார்க்கம்" என்று ஒவ்வொரு மதத்தினரும் சிக்கலான தத்துவங்களைப் பேசிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. முஸ்லீம்கள், "இஸ்லாம் என்பது மதமல்ல; அது மார்க்கம்." என்று கூறுகின்றனர். இதையே, பெளத்தர்களும் கூறுகின்றனர், சனாதனியர்களும் கூறுகின்றனர். இந்த "மதமல்ல; மார்க்கம்", என்ற விவரிப்புக்கான தேவை, "மதம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறு "மார்க்கம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறென்று கருதுவதால் தான்.<br />
<br />
"நம்பிக்கை" என்பது "நம்பிக்கைகள்". எவைகளை நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க முடியாமல் நம்புகிறோமோ அவைகளை நம்பிக்கைகள் எனலாம். நம்பிக்கையில்லாதா மனிதர்கள் இருக்கவே முடியாது. பெரியார் கூட ஒரு நம்பிக்கையுடைய மனிதர்தான். "கடவுள்" என்று ஒன்று இல்லை என்று நம்பியவர். சமூகத்தில் நீதிவேண்டுமென என நம்பியவர். இவைகளை அவரால் கூட நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க முடியாது, அல்லது நிரூபணம் செய்யமுடியாது. <br />
<br />
சமூகத்தில் நீதிவேண்டுமென்பது கூட ஒரு நம்பிக்கைதான். அதற்கு வக்காலத்து செய்ய வேண்டுமானால், "அநீதி" எனும் பின்புலத்தில் மட்டுமே செய்யமுடியும். "நீதி - அநீதி" என்று இருபுறத்தையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பிற்கு, அதாவது, நீதி- அநீதி என்ற பிரிவினையே செய்யப்படாத ஒரு அமைப்பிற்கு, "நீதி வேண்டும்" என்ற கருத்தாக்கத்திற்கே பொருளில்லை. நாம் சமூகத்தின் அங்கம் என்பதால், சமூகம் என்பது "நீதி முறைகளுடன் செயல்படும் ஒரு அமைப்பு" என மனதில் நாம் வரையறுத்துவைத்திருப்பதால், சமூகத்திற்கு நீதி தேவை என நம்புகிறோம்.<br />
<br />
திறமை/அதிகாரம்/சக்தி ஆகியவைகள்தான் சமூகத்தின் செயல்பாடுகளுக்கான காரணம் என்று ஒருவர் அமைக்கும் சமூகத்தில், நீதி-அநீதிகள் அனர்த்தமாகின்றன. "survival for the fittest" என்பது இவர்களது நம்பிக்கையாகிவிடுகிறது.<br />
<br />
மீண்டும் மதம்- நம்பிக்கை பற்றிய விஷயத்திற்கு வருவோம்.<br />
<br />
இதனால், "இந்து நம்பிக்கை" என்ற சொல்லிற்கும், "இஸ்லாமிய மதம்" என்ற சொல்லிற்கும் அர்த்தமில்லை. இந்து மதத்தினர்கள் எனக் கருதப்படுபவர்களில், அத்வைதம், புராண நம்பிக்கைகள் என ஒன்றுக் கொன்று சம்பந்தமே இல்லாத நம்பிக்கைகள் இருக்கின்றன.<br />
<br />
அது போலவே, "இஸ்லாமிய மதம்" என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. "இஸ்லாமிய நம்பிக்கைகள்" என்று உண்டு.<br />
<br />
மிக எளிதாக விளக்குவதற்காக, "பிஜே" எனும் "பி ஜெயினுல் ஆபிதீன்" என்பவரையும் "ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரையும் எடுத்துக் கொள்வோம். இவர்கள் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்களது நம்பிக்கைகள் வேறுபடுகின்றன.<br />
<br />
பிஜே என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன: கடவுள் உருவமுடையவன்; அந்த உருவம் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளது. அந்த நாற்காலியை எட்டு "ஜின்கள்" எனப்படுபவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்; அந்த உருவம் வானத்தில் ஒரு திசையில் அமந்துள்ளது; அந்த உருவத்திற்கு கால், கைகள் உண்டு; மனிதன் என்பவன் அவருடைய உருவத்தில் படைக்கப்பட்டுள்ளான்; அதாவது கடவுள் மனிதனைப் போல இருப்பான். இந்த நம்பிக்கைக்கு பெயர் என்று எதுவும் இல்லை என்றாலும், பிஜே இதனை "இஸ்லாமிய நம்பிக்கை" எனக் கருதுவதால், இதனை இஸ்லாமிய நம்பிக்கை எனக் கொள்வோம்.<br />
<br />
"ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன. அனைத்துப் பொருட்களும் கடவுளின் ஒளியினால் ("நூர்") படைக்கப் பட்டுள்ளது; கடவுளைப் போன்று எதுவும் இல்லை; நாம் மனிதர்களிடம் உதவி கேட்டால் கூட அது கடவுளிடம் கேட்டதற்கே சமம் என்று கருதவேண்டும்; நாம் மனிதர்களுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணியே ஆகும் எனக் கருதவேண்டும்; கடவுள் தனது படைப்பினங்களைக் கொண்டும் உதவுவான். இதனை பிஜே இஸ்லாமிய நம்பிக்கை இல்லையென்றும், "சூஃபித்துவம்" என்றும் கூறுவார். ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் படி இது இஸ்லாமிய நம்பிக்கை.<br />
<br />
ஆனால் மதம் எனும் அடிப்படையில் இருவரும் "இஸ்லாமிய மதம்" அல்ல. நான் மேலே சொன்னவாரு "இஸ்லாமிய மதம்" என்று ஒன்றுமே கிடையாது. "அரேபிய மதம்" என்று வேண்டுமானால் ஒன்று உண்டு. அந்த அரேபிய மதம் என்பது "அரேபிய வாழ்க்கை முறை அல்லது மார்க்கம்" என்பதாகும். பிஜேக்கு நான்கு மனைவி கிடையாது, ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கும் கிடையாது என்றே நினைக்கிறேன். பிஜேயும் ஜமாலியும் கைலி அணிகின்றனர். அரேபியர்களைப் போலல்லாமல் வேறு உடை உடுத்துகின்றனர். ஒட்டக் கறிகளை சுவைத்திருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தினையோ அரேபிய மதத்தினையோ சேர்ந்தவர்களில்லை.<br />
<br />
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள், இஸ்லாமிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்; தமிழ் முஸ்லீம்களின் மதத்தினைக் கொண்டுள்ளார். பிஜே அவர்கள் தான் கூறும் இஸ்லாமிய நம்பிக்கையையும், தமிழ் முஸ்லீம்களின் மதத்தினையும் கொண்டுள்ளார்.<br />
<br />
இதேப் போல பாரதியார், அத்வைத/இஸ்லாமிய/பெளத்த/சூஃபி நம்பிக்கையையும், தமிழ் பிராமணர்களின் மதத்தினையும் கொண்டவர். (பெளத்தர்கள் "கடவுள்" எனும் வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், "உண்மை" என்ற வார்த்தையினைப் பயன்படுத்தியுள்ளனர். "உண்மை" என்பது இஸ்லாமிய மற்றும் வேத நம்பிக்கைகளின் படி கடவுளின் பெயர்களில் ஒன்று.)<br />
<br />
வள்ளலாரும் பாரதியார் போலவே. அவருடைய மதம் தமிழ்-சைவர்களின் மதம். அவரின் நம்பிக்கை இஸ்லாமிய/அத்வைத/பெளத்த நம்பிக்கை.<br />
<br />
பெரியாரின் மதம் ஈரோடு தமிழர்கள் அல்லது தெலுங்கு தமிழர்களின் மதம். அவருடைய நம்பிக்கை, இஸ்லாமிய, பெளத்த/அத்வைத நம்பிக்கையின் சில அம்சங்கள்.<br />
<br />
மோடி, அத்வானி, ஹெச் ராஜா, காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களின் நம்பிக்கைகள் புராண நம்பிக்கைகள்: அதாவது கடவுளுக்கு உருவம் உண்டு; அவைகள் பலவகைப்படும்; அவைகள் குடும்பஸ்தர்கள்<a href="https://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-16463317.post-52545169369266732922013-05-23T11:29:00.001+05:302013-05-23T11:29:21.629+05:30வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியாளரா?<br /> பிஜே எனும் பிஜெயினுல் ஆபிதீன் தனது அறிவாற்றலால் அவரது "கொள்கைச் சகோதரர்"களை திக்குமுக்காடச் செய்து வருகிறார்.<br /><br />"தவ்ஹீத் ஜமாத்தினர் வஹ்ஹாபிகளா? " என்று ஒருவர் பிஜேயிடம் கேள்வி கேட்டபோது, அவர் கொடுத்த பதி இதோ. அப்துல் வஹ்ஹாப் எனும் பயங்கரவாதியை அவர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த பதிலில் ஒரு பகுதியாக இவர் கூறுவதைப் பாருங்கள். "வஹ்ஹாப்" எனும் சொல் அல்லாஹ்வினைக் குறிப்பதால் "வஹ்ஹாபி" என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவராம். <a href="http://www.onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/thauheed_jamaaathinar_vahhabikala/">இது இவரது பதிலில் அடக்கம்</a>.<br /><br /> அப்படியானால், இவர் "காதியானி", "காதியானி" என்று சாடும் கூட்டத்தினர். காதியான் எனும் ஊரில் உள்ளவர்களையா? இந்த மடையனிடம் யாராவது கேளுங்கள். இந்தப் பிஜே போற்றும் "இப்னு தைமிய்யா" என்பவர் "தைமிய்யா" எனும் குலத்தினர்கள் சேர்ந்து பெத்த பிள்ளையா? பிஜேயின் தந்தை "பீர் முகம்மது" என்றால், பீர் முகம்மது என்று பெயர் உடையவர்களெல்லாம் பிஜேயின் தந்தையா?<a href="http://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a>மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16463317.post-66580340677903398352012-11-13T20:26:00.001+05:302012-11-13T20:26:47.976+05:30தன்னை அறிவாளி என்று நினைச்சிகிட்டா இப்படித்தான் உளர்வார்கள்: பிஜே ஒரு உதாரணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பிஜே தனது இணையதளத்தில் <a href="http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/thiruttu_software_payanpaduthalama/">ஒரு அபிப்ராயம்</a> சொல்லி இருக்கிறார். லைசென்ஸ் இல்லாத சாஃட்வேரைப் பயன்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்லி இருக்கும் அபிப்ராயம். <br /><br /> சாஃப்ட்வேரைக் காசுகொடுத்து வாங்கினவரிடமிருந்து காப்பிஎடுத்து, அவரது அனுமதியோடப் பயன்படுத்திக் கொள்ளலாமாம் ! காசு கொடுத்து வாங்கவேண்டியத் தேவையில்லையாம். ஏன்னாக்கா, சாஃட்வேரை வாங்கினவருக்கு அனைத்து உரிமையும் இருக்காம.<br /><br /> நான் கேள்வி கேட்கிறேன்.<br /><br /> (1) சாஃப்ட்வேரை காசு கொடுத்து வாங்கியவர் இன்னொருவர் காப்பியெடுக்க அனுமதிக்கும் போது, தனது கணினியில் அந்த சாஃட்வேரை அழித்தால்தானே எடுக்கப்பட்ட காப்பியின் பயன் பாட்டிற்கு பணம் கட்டப்பட்டிருக்கும். அழிக்கப்படாத நிலையில் எப்படி இது நியாயம் ஆகும். இந்த கூமுட்டை பதில் சொல்லமாட்டார் என்பது வேறுவிஷயம். அவரோட முட்டாள்தனத்தினை வெளிச்சம் போடுவதற்காக மட்டும்தான் இந்தப் பதிவு. புண்ணாக்குப் பாண்டி ஏதாவது பதில் சொல்லுதான்னுப் பார்ப்போம்.<br /><br />(2) சாஃட்வேரை வாங்கியவர், ஒரு ஒப்பந்தத்தினை (லைசென்ஸ் ஒப்பந்தம்) ஏற்றுக்கொண்டுதானே அதைப் பயன்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுப் பயன்படுத்துவேனென்று கூறிவிட்டு அதைப் புறக்கணிப்பதுதான் நீ கற்பிக்கும் மதமா? அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக் கோன்டவருக்கு எப்படி அனைத்து உரிமைகளும் உண்டு என்கிறாய்? புண்ணாக்குப்பாண்டி இதற்கும் பதி சொல்லமாட்டார். ஆனால் மக்கள் கவனிக்கவேண்டும்.<br />
<br />
(இது போன்ற கேள்விகளால், புண்ணாக்குப் பாண்டி பிறகு தனது அபிப்ராயத்தினை மாற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும் அவரது மூடத்தனத்தின் உதாரணம் என்று சொல்வதற்காக, அவரது அந்த அபிப்ராயப்பக்கம் ஸ்கிரீன்ஷாட்டாக எனது சேமிக்கப்பட்டுள்ளது. பிஜே மாற்றினால், அந்த ஸ்கிரீன்ஷாட் இங்கே போடப்படும்.)<br />
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=16463317"></a></div>
மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-16463317.post-19675204718117580182012-09-07T21:02:00.000+05:302012-09-16T21:00:39.159+05:30 "நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"புகாரி" எனும் ஹதீஸ் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட ஒரு ஹதீஸின் படி, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் கீழே சொல்லப்பட்டுள்ளதைப் போல ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது:<br />
<br />
"யா அல்லாஹ் "ஷாம்" (டமாஸ்கஸ்) பிரதேசத்தையும், "ஏமன்" எனும் பிரதேசத்தையும் செழிக்கச் செய்வாயாக" என நபிகள் நாயகம் வாழ்த்தும் போது, அங்கிருந்த ஒருவர் தனது "நஜ்த்" எனும் பகுதியையும் நபிகள் நாயகம் வாழ்த்த வலியுறித்துகிறார். நபிகள் நாயகமோ அவரை சட்டை செய்யாமல் மீண்டும் ஷாமையும் ஏமனையும் மட்டுமே வாழ்த்துகிறார்கள். அதனைக் கேட்ட அவர் மீண்டும் தனது "நஜ்த்" பகுதியை வாழ்த்த வலியுறுத்த, நபிகள் நாயகம் மறுத்துவிடுகிறார்கள். மேலும் நஜ்த் பகுதி பூகம்பம், குழப்பங்கள் மற்றும் சைத்தானின் கொம்பு ஆகியவற்றின் இருப்பிடம் என முன்னறிவிப்பு செய்கிறார்கள்.<br />
<br />
இந்த ஹதீஸில் வரும் "நஜ்த்" எனும் பகுதி என்பது எது என்று விக்கிப்பீடியாவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்: <a href="http://en.wikipedia.org/wiki/Najd">http://en.wikipedia.org/wiki/Najd</a><br />
<br />
இது அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள பீடபூமி. நமது நாட்டு தக்காணப் பீடபூமி போல அரேபியாவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி. சவுதி அரேபியாவின் தலை நகரான "ரியாத்" எனும் நகரம் இந்தப் பீடபூமியில் அமைந்துள்ளது.
மேலும் நபிகள் நாயகம் முன்னறிவிப்பு செய்தது இந்தப் பகுதியைப் பற்றிதான் என்பதற்கு வலுச்சேர்க்க மேலும் ஒரு காரணம் மற்றொரு ஹதீஸ் ஆகும்.<br />
<br />
புகாரி மற்றும் முஸ்லீம் எனும் ஹதீஸ் புத்தகங்களில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள்படி நபிகள் நாயகம் அவர்கள் கிழக்குத் திசையினைச் சுட்டிக்காட்டி அது குழப்பங்களின் பிறப்பிடம் என அறிவித்துள்ளார்கள் (ஆதாரம்: சஹீஹ் புகாரி, பகுதி 9, புத்தகம் 88, எண் 213. மற்றொரு ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம், புத்தகம் 41, எண் 6939)<br />
<br />
நபிகள் நாயகம் வாழ்ந்த மதீனாவிற்கு நேர் கிழக்கே இருப்பது ரியாத் எனும் நகரம் ஆகும். தற்போதயை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் எனும் அதே ரியாத் தான். "கூகிள் மேப்"பின் வரைபடத்தினைக் கீழேக் காட்டியுள்ளேன். கவனிக்க.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMYGfTidE_VFJiSZyE51hyphenhyphen-qOiRMt0k8HtBmgtXaIA6YAF-NcQvSjeGhiB3QAPHZXJD1Aidptj_oghuGA0Sl3ARzOSvhLS2qW8Z17IuoVaT2pNodC9zmu_G5nvNLk5Kx0BFW6a/s1600/map_medina_riyadh.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="165" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMYGfTidE_VFJiSZyE51hyphenhyphen-qOiRMt0k8HtBmgtXaIA6YAF-NcQvSjeGhiB3QAPHZXJD1Aidptj_oghuGA0Sl3ARzOSvhLS2qW8Z17IuoVaT2pNodC9zmu_G5nvNLk5Kx0BFW6a/s320/map_medina_riyadh.png" width="320" /></a></div>
<br />
<br />
எனவே நஜ்த் எனும் பகுதி ரியாத் அமைந்துள்ள பீடபூமீயே ஆகும் எனத்தெரிகிறது. மற்றப் பீடபூமியாக இருக்க வாய்ப்பு இல்லை.<br />
<br />
இந்தப் பகுதியிலிருந்துதான் நபிகள் அவர்கள் காலத்திலேயே, "முஸ்லைமா" எனப் பெயர் உடையவன் தன்னை "நபிகள்" எனப் பிரகடனம் செய்து, பின்னர் அபூபக்கர் அவர்களின் ஆட்சியில் மாபெரும் போரினைப் புரிந்து பலர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்.<br />
<br />
மேலும், இந்தப் பகுதியிலிருந்து தான் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் எனும் ஒரு அமைதியானவரைக் கொன்ற யஜீதினைப் புகழ்ந்து கொள்கைகள் வகுத்த வஹ்ஹாபிகளின் குருவான "முகம்மது இப்னுஅப்துல் வஹ்ஹாப்" தோன்றினார். அந்த வஹ்ஹாபிகள் ஆட்சி செய்யும் நகர்தான் ரியாத். மேலும் சவுதி அரசின் ஆஸ்தான குருமார்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருந்துதான் வருபவர்கள். அவர்கள் "இப்னு பாஸ்" எனப்படும் காலஞ்சென்ற குருவாக இருந்தாலும் சரி, தற்போதைய குருவாக இருந்தாலும் சரி.
சுருங்கச் சொன்னால், இந்த நஜ்த் பகுதியே அரசியல் ரீதியிலும் மதக்கொள்கை ரீதியிலும் குல அடிப்படையிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்து வருகிறது.<br />
<br />
இந்தப் பகுதிப் பற்றி <a href="http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/najd_pakuthi_sabikapatatha/">பிஜே ஒரு ஃபத்வா போட்டுள்ளார்</a>. "நஜ்த்" எனும் அந்தப் பகுதி ஈராக் என்றுக் கூறுகிறார்.
பிஜே, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லிக்கொண்டே, ஆங்கில மொழியில் அமைந்த விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ள செய்தியையே தனது ஃபத்வா எனத் தனது இணையதளத்தில் பிஜே போட்டுள்ளார். இந்த ஹதீஸ் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கம்: http://en.wikipedia.org/wiki/Hadith_of_Najd<br />
<br />
இந்த விக்கிப் பீடியா பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தியையும், அவர் போட்டுள்ள ஃபத்வாவையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
(மேலும் படிக்கும் முன் ஒரு குறிப்பு: எனது இந்த இணையதளத்தில் பழைய பதிவுகளில் பிஜே "ஒரு பொய்யன்" என வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பொய்யன் என்றே இந்தப் பதிவிலும் அழைக்கப்படுகிறது. பிஜே இதற்கு தகுந்த முறையில் காரணங்களைக் கூறி ஆட்சேபனைத் தெரிவித்தாலோ அல்லது எனது நிரூபணம் தவறு என அவர் நிரூபித்தாலோ, நான் அவரை பொய்யன் என அழைப்பதை விட்டு விடுவேன் என அறிவிக்கிறேன்.)<br />
<br />
அடப் பொய்யா உன்னிடம் சிலக் கேள்விகள்:<br />
<br />
1. ஈராக் என்பதுதான் நஜ்த் என்றால் ஈராக் நாடானது, நபிகள் நாயகம் வாழ்ந்த மதினாவிற்குக் கிழக்குப் பக்கம் இல்லையே! பதில் சொல்.<br />
<br />
2. ரியாத் அமைந்துள்ள நஜ்த் (பீடபூமி) மதினாவிற்கு கிழக்கே இருக்கிற பீடபூமியாக இருக்கே! அப்போ நபிகள் நாயகம் சுட்டிக்காட்டிய கிழக்குப் பகுதி ரியாத் தானே! பதில் சொல். இந்த கேள்வியைச் சற்று உடைத்துக் கேட்கிறேன்: ரியாத் இருக்கிறப் பகுதி மேட்டு நிலம் என்று சொல்லக் கூடிய உயரமான பகுதியா இல்லையா ? (அந்த பகுதி கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர்கள் வரை உயர்ந்துள்ளது. அப்புறம், அது மதினாவிற்கு கிழக்கே இருக்கா இல்லையா?<br />
<br />
3. இப்ன் ஹாஜர் சொல்லுகிறார் என்பதற்காக ஈராக் தான் நஜ்த் என்கிறாயே, அவர் என்ன ஆதாரம் சொன்னார் என்று சொன்னாயா ? ஈராக்கில் பூகம்பம் வருவதால் அதுதான் நஜ்த் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கவாதமா ? "பூகம்பம்" என்றால் உண்மையான பூகம்பம் தானா ? சரி வைத்துக்கொள்வோம். "சாத்தானின் கொம்பு" என்றால் ஈராக்கில் சாத்தானின் "கொம்பு" அதாவது உண்மையான கொம்பு ஒன்று அல்லவா அங்கு உருவாகி இருக்க வேண்டும். இதிலிருந்து பூகம்பம் என்றால் உண்மையான " நில நடுக்கம்" என சொல்லப்படுகிற பூகம்பம் இல்லை என்றுத் தெரியவில்லையா? அது கொள்கை மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான சொல்லாடல் என்று உனக்குப் புரியத் தெரியவில்லையா?<br />
<br />
4. சரி, இப்னு கத்தாபி மற்றும் இப்னு ஹாஜர் தெளிவு படுத்தியுள்ளனர் என்று சொன்னாயே, அவர்கள் கூறிய "அந்த தெளிவு படுத்தலில்" ஈராக் மதீனாவிற்கு கிழக்கே உள்ளது என்று கூறியுள்ளனரே! அது சரியா தவறா என்று பார்த்தாயா? இப்போதாவது மேப்பினை எடுத்து வைத்து பார்த்து தெரிந்து கொள்வாயா?<br />
<br />
5. மேலும் நீ எழுதுகிறாய்: "குழப்பங்களும் பிரச்சனைகளும் வழி கெட்டக் கொள்கைகளும் ஈராக்கில் தான் முதலில் தோன்றின." அடப் பொய்யா, "முஸ்லைமா" என்பவன் நபிகள் நாயகம் காலத்திலேயே பிரச்சனை செய்தானே, அவன் ஈராக் பகுதியையா சேர்ந்தவன் ? சவுதி அரேபியா தலை நகரான ரியாத் அங்கம் வகிக்கும் நஜ்த் பகுதியைத் தானே சேர்ந்தவன். பதில் சொல்லு.
</div>
மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16463317.post-80465913941824080282008-04-06T11:36:00.002+05:302008-04-06T11:46:50.049+05:30சீனாவும் தலாய்லாமாவும் இந்து பத்திரிக்கையும்தலாய்லாமாவினை பின் லாடனுடன் இந்து ராம் ஒப்பிட்டுவிட்டதாக ஒரு <code><a href="http://blog.tamilsasi.com/2008/04/thehindu-dalailama-osama-comparison.html"></code>பதிவினைப்<code></a></code><code></code> படிக்க நேர்ந்தது. இந்து ராம் அவ்வாறு ஒப்பிடவில்லை என்று அவர் எழுதியதைப் படிக்கும் போது புரிந்தது.<br /><br />தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. <a href="http://www.newyorker.com/arts/critics/books/2008/03/31/080331crbo_books_mishra?printable=true">இந்த தொடுப்பினைப் பார்க்கவும்</a>.<br /><br />தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான கோறுதலான, "திபெத்தியர்களின் சாவு எண்ணிக்கை 99" என்பதினை உண்மை என்று கொண்டாலும், இது சாதாரணமாக இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் 10 அல்லது 20 நாட்களில் கொல்லும் மக்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், பிபிசி போன்ற இணைய தளங்களில் இச்ச்ய்தி அதி முக்கியத்துவம் பெறுவதற்கு, பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் சீனா விரோத போக்குக்கும், தலாய்லாமாவின் போக்குக்கும் ஒத்த நிலை இருப்பதுவே ஆகும். இதனால் தலாய்லாமாவின் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்ட, "பண்பாட்டு அடிப்படையிலான இன்வொழிப்பு திபெத்தில் நிகழ்கிறது" எனும் கோறுதல்கள் இவ்வூடகங்களில் எதிரொலிக்கப்படுகின்றன.<br /><br />இவைகளுக்கு முக்கிய காரணம், சமீபத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியே. அதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவிலும் வளர்ச்சிஅடைந்துள்ளது. அதனுடைய அரசியல் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கடந்த லெபனான் போரின் போது வெளிப்பட்டது. சூடான் மேற்கத்திய மதிப்புகளுக்கு எதிராக இருப்பதினால், சூடானில் நிகழும் கலவரத்தினை "இனவொழிப்பு" எனும் சொல்லாடலைக் கொண்டு வர்ணித்து மகிழ்வுற மேற்கத்திய நாடுகள் எத்தனிக்கும் போது, அதனுடன் சீனா நல்லுறவு கொண்டுள்ளது. மேலும் அதன் உறவு வடகொரியாவுடனும் வெனிசுவேலாவுடனும் க்யூபாவுடனும் சிறப்பாகவே உள்ளது. மிக முக்கியமாக ஈரானுடனான அதன் உறவு மிகச் சிறப்பாகவே உள்ளது.<br /><br />இதனால் இவை அனைத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது, அதிக வியப்பினை அளிக்கவில்லை. திபெத்தில் இறந்ததாக தலாய்லாமா கூறிக்கொள்ளும் 99 பேர்கள் அவர்களின் பார்வையில் ஈராக்கில் இறந்த மில்லியன் மக்களைவிடவும், ஆஃகானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளில் கூட விமானகுண்டு வீசி கொள்ளப்பட்ட மக்களைவிடவும் அதிகமாகத்தோன்றுவதால் அவைகள் தலைப்புச் செய்திகளாக அவ்வூடகங்களின் இணையதளங்களில் பல மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ நீடித்தன. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தில் கொல்லும் செய்திகள் பெரும்பாலும் அந்த பிராந்திய செய்தியாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன.<br /><br />ஊடகங்களின் மூலம் நான் பார்த்த வரையில், திபெத்தில் மனிதஉரிமை மீறல்கள் இல்லை. உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.<br /><br /> மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு தாளம் போடாமலும், இந்திய மதவாதிகளின் நிலைக்குத் தாளம் போடாமலும், "தேசியம்" மற்றும் "பிராந்தியம்" எனும் பேரில் இந்தியாவில் தாண்டவமாடுபவர்களுக்கு சார்பில்லாமலும், "தமிழ்த்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும், பெண்ணுரிமை மற்றும் சாதிவொழிப்பு போன்ற பெரியாரின் முற்போக்கான கொள்கைகளையும் தூக்கிப் பிடித்திருக்கும் இந்து பத்திரிக்கையின் ஆசிரியரான ராம் வியக்கத்தக்கவர். ஆனால் அவர் மீதான விமர்சனங்கள் இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-16463317.post-40678402895825583912007-11-17T01:24:00.000+05:302012-09-27T20:25:39.165+05:30வஹாபிசம் ஏன் ஒழிய வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில வருடங்களுக்கு முன்பு எனது நெறுங்கிய நண்பர் வகாபிசத்தையும் சூபியிசத்தையும் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் சூஃபியிசத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர். அவர் 'திண்ணை' இணைய தளத்தில் வந்த சில விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.<br />
<br />
நான் ரெண்டு பக்கமும் சாயாம ரொம்ப டிப்ளமேட்டிக்கா பதில் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வெளிப்படையாத் தான் எழுதினேன். அது ஒரு நீண்ட பதில். அதில் நான் சொன்ன கருத்துக்களை இங்கே தமிழில் கொடுக்க எனக்கு நேரமில்லை.<br />
<br />
ஆனால் 'இதை பற்றி ஒரு பத்தியேனும் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஒரு தருணம் வந்துள்ளது. பிபிசி யில் வந்துள்ள ஒரு செய்திக்கான அறிமுகத்திற்காக இந்த பதிவு.<br />
<br />
(வகாபிகள் தாக்குதல் தொடுக்க வாய்ப்புள்ளது என்பதால்) முதலில் சூபியிசத்தைப் பற்றி என்ன சொன்னேன் என்று பாதுகாப்புக்காக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.<br />
<br />
சூபிகளின் சில இலக்கியங்களை நான் படித்துள்ளவரை அது இஸ்லாமிய மதத்துடன் நாம் குழப்பிக் கொள்ளவேண்டிய விஷயம் அல்ல. அது ஒரு வகையான சிந்தனையைத் தூண்டக் கூடிய இலக்கியங்கள். சூபி தனது இறைவனையும் தனக்கு பிடித்த மனிதரையும் புகழ்ந்து பாடியிருப்பார். மனித மனத்தினைப் பற்றியும், தமது பிறப்பிற்கான காரணத்தினைப் பற்றியும் தனது கவனிப்புகளையும் எண்ணங்களையும் கூறியிருப்பார். அதில் அவரது சிந்தனையை நாம ரசிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். சூபியிசத்துல எனது ஈடுபாடு இந்த அளவில் மட்டும்தான். நான் சூபிக்கு தெய்வீக சக்தி இருக்குன்னு ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு விரோதமானது.<br />
<br />
இவ்வாறு எழுதிவிட்டு, சூபிகளை வணங்கும் சூபியிசத்தைப் புகழ்ந்து 'திண்ணை'யில் எழுதும் சிலருடைய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை எனக் கூறினேன்.<br />
<br />
இப்போது வகாபிசம் பற்றி .........<br />
<br />
வகாபியிடம் போயி 'சூபி பற்றி என்ன நினைக்கிறீங்க ?' என்று கேட்டால் 'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க' என்று சொல்வார். ஆனால் அதோடு அவர் நிக்க மாட்டார். ரொம்ப நேரம் உங்களிடம் பேச ஆரம்பிச்சிடுவார். நீங்க கொஞ்சம் நிதானமா அவர் பேசுவதைக் கேட்டீர்களானால் கீழ் கண்ட முடிவுகளுக்கு வருவீர்கள்<br />
<br />
1) "ஆண் என்பவன் ஆண்குறியையும், பெண் என்பவள் பெண்குறியையும் உடையவர்கள்" என்பது போன்ற உன்னதமான சிந்தனையைத் தவிர, ஒரு வகாபி, அதற்கு அப்பால சிந்திக்க மாட்டார் என்று நீங்கள் உணரலாம். ஒருவருடைய வாழ்வியல் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என அவர் வாதிடுவதைப் பார்க்கலாம்.<br />
<br />
2) "உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.<br />
<br />
3) நீங்கள் அறிவினைப் பயன்படுத்த விருப்பப் பட்டால், அவர்கள் ஆதாரபூர்வமான மத நூல்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பார். நீங்களும் என்னைப் போல மத நம்பிக்கை உடையவர் என வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொள்வீர்கள். ஆதாரபூர்வமான நூலில் காணப்படும் வாழ்வியல் முறையை பின்பற்ற ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் 'ஆதாரபூர்வமானது' என்பது எது என்பதையும் அதற்கான வரைமுறைகளையும் அவர்களே வகுப்பார்கள் என்பது தான் பிரச்சனையே. "ஆதாரபூர்வமானவைகளையே நாம் பின்பற்ற வேண்டும்; ஆனால் 'ஆதாரபூர்வமானது' எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நான் தான் கற்பிப்பேன்" என அவர் முரண்டு பிடிப்பதை நீங்கள் காணலாம்.<br />
<br />
இது பற்றி நாம எழுதிகிட்டே போகலாம்... எனக்குத் தான் நேரமில்லை.<br />
<br />
எனது ஊர்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வது போல சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது.<br />
<br />
அராபிய தேசங்கள் வகாபிசத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே, அது அரபு மேலாண்மையைத் தூக்கிப் பிடிப்பது தான். மற்ற பண்பாடுகளின் அழிவினை நாடக்கூடியவைகள் தான். அந்த பண்பாடுகளில் இஸ்லாமிய இறைக் கொள்கைக்கு எதிரான கூறுகள் இல்லாவிட்டாலும் அதன் அழிவினை வகாபிசம் நாடுகிறது.<br />
<br />
இந்த சிந்தனையில் எழுப்பப் பட்ட வாகாபிசத்தைப் பின்பற்றும் மத்திய் கிழக்கு நாட்டினரிடம் அராபியர்/அரபியல்லாதார் பாரபட்சம் வருவது இயற்கையே. இந்த பாரபட்சத்தை வகாபிசம் நேரடியாக போதிக்காவிட்டாலும், அது எழுந்து நிற்கும் அடித்தளம் இந்த பாரபட்சத்தினை நியாபடுத்துகிறது. வகாபி/வகாபியல்லாதார் என்று வரும்போது கூட இப்பாரபட்சம் இயற்கையாகவே தலைதூக்க்குகிறது.<br />
<br />
வகாபிசம் என்பதாவது, ஒரு மனிதனின் சிந்தனையைவிட சிலர் எழுதிய புத்தகங்களே மேலானவை என கருத்தாக்கம் கொண்டு, "ஆதாரப்பூர்வமானவை" என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும் புனிதப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் என்பதால் அடிப்படைவாதமும் உரிமை மீறல்களும் மலிந்து கிடக்கின்றன.<br />
<br />
நிச்சயமாக வகாபிசம் ஒழிய வேண்டும். இது சூபியிசம் போல ஒருவருடைய தனிமனித வாழ்க்கையைச் சார்ந்த கருத்தியலில்லை. சட்டம், நீதி, அரசியல் போன்ற பொது வாழ்க்கை அம்சங்களில் நுழைவதால், தனி மனித உரிமைகளைக் காக்கும் பொருட்டு வகாபிசத்தை எதிர்க்க வேண்டியது கடமையாகிறது:<br />
<br />
இனி பிபிசி செய்தி: <a href="http://news.bbc.co.uk/2/hi/middle_east/7098480.stm">http://news.bbc.co.uk/2/hi/middle_east/7098480.stm</a><br />
<br />
இச்செய்தி வகாபிச சிந்தனையின் கோரமுகத்தினை திரைவிலக்கம் செய்து காட்டுகிறது.<br />
<br />
(குறிப்பு: இந்த செய்தியினை சங்-கூட்டத்தினர் தங்கள் வலைபதிவுகளில் ஏற்றி விமர்சிப்பதற்கு என்னுடைய இந்தப் பதிவுக்கு சுட்ட (cite) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் சங்-சித்தாந்தத்திற்கு விரோதி.)<br />
<br />
(2012 செப்டம்பர் மாதத்தில் இந்த பின் குறிப்பினை எழுதுகிறேன்: இந்த கால கட்டத்தில், சூஃபியிசம் பற்றிய நிலைப்பாடு மாறியுள்ளது. 2007-ல் இந்த பதிவில் சூஃபியிசம் பற்றி நான் கூறியுள்ளவைகளை இப்போது நான் ஏற்கவில்லை)</div>
மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com13