Friday, September 07, 2012

"நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா

"புகாரி" எனும் ஹதீஸ் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட ஒரு ஹதீஸின் படி, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் கீழே சொல்லப்பட்டுள்ளதைப் போல ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது:

"யா அல்லாஹ் "ஷாம்" (டமாஸ்கஸ்) பிரதேசத்தையும், "ஏமன்" எனும் பிரதேசத்தையும் செழிக்கச் செய்வாயாக" என நபிகள் நாயகம் வாழ்த்தும் போது, அங்கிருந்த ஒருவர் தனது "நஜ்த்" எனும் பகுதியையும் நபிகள் நாயகம் வாழ்த்த வலியுறித்துகிறார். நபிகள் நாயகமோ அவரை சட்டை செய்யாமல் மீண்டும் ஷாமையும் ஏமனையும் மட்டுமே வாழ்த்துகிறார்கள். அதனைக் கேட்ட அவர் மீண்டும் தனது "நஜ்த்" பகுதியை வாழ்த்த வலியுறுத்த, நபிகள் நாயகம் மறுத்துவிடுகிறார்கள். மேலும் நஜ்த் பகுதி பூகம்பம், குழப்பங்கள் மற்றும் சைத்தானின் கொம்பு ஆகியவற்றின் இருப்பிடம் என முன்னறிவிப்பு செய்கிறார்கள்.

இந்த ஹதீஸில் வரும் "நஜ்த்" எனும் பகுதி என்பது எது என்று விக்கிப்பீடியாவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்: http://en.wikipedia.org/wiki/Najd

இது அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள பீடபூமி. நமது நாட்டு தக்காணப் பீடபூமி போல அரேபியாவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி. சவுதி அரேபியாவின் தலை நகரான "ரியாத்" எனும் நகரம் இந்தப் பீடபூமியில் அமைந்துள்ளது. மேலும் நபிகள் நாயகம் முன்னறிவிப்பு செய்தது இந்தப் பகுதியைப் பற்றிதான் என்பதற்கு வலுச்சேர்க்க மேலும் ஒரு காரணம் மற்றொரு ஹதீஸ் ஆகும்.

புகாரி மற்றும் முஸ்லீம் எனும் ஹதீஸ் புத்தகங்களில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள்படி நபிகள் நாயகம் அவர்கள் கிழக்குத் திசையினைச் சுட்டிக்காட்டி அது குழப்பங்களின் பிறப்பிடம் என அறிவித்துள்ளார்கள் (ஆதாரம்: சஹீஹ் புகாரி, பகுதி 9, புத்தகம் 88, எண் 213. மற்றொரு ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம், புத்தகம் 41, எண் 6939)

நபிகள் நாயகம் வாழ்ந்த மதீனாவிற்கு நேர் கிழக்கே இருப்பது ரியாத் எனும் நகரம் ஆகும். தற்போதயை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் எனும் அதே ரியாத் தான். "கூகிள் மேப்"பின் வரைபடத்தினைக் கீழேக் காட்டியுள்ளேன். கவனிக்க.


எனவே நஜ்த் எனும் பகுதி ரியாத் அமைந்துள்ள பீடபூமீயே ஆகும் எனத்தெரிகிறது. மற்றப் பீடபூமியாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்தப் பகுதியிலிருந்துதான் நபிகள் அவர்கள் காலத்திலேயே, "முஸ்லைமா" எனப் பெயர் உடையவன் தன்னை "நபிகள்" எனப் பிரகடனம் செய்து, பின்னர் அபூபக்கர் அவர்களின் ஆட்சியில் மாபெரும் போரினைப் புரிந்து பலர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்.

மேலும், இந்தப் பகுதியிலிருந்து தான் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் எனும் ஒரு அமைதியானவரைக் கொன்ற யஜீதினைப் புகழ்ந்து கொள்கைகள் வகுத்த வஹ்ஹாபிகளின் குருவான "முகம்மது இப்னுஅப்துல் வஹ்ஹாப்" தோன்றினார். அந்த வஹ்ஹாபிகள் ஆட்சி செய்யும் நகர்தான் ரியாத். மேலும் சவுதி அரசின் ஆஸ்தான குருமார்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருந்துதான் வருபவர்கள். அவர்கள் "இப்னு பாஸ்" எனப்படும் காலஞ்சென்ற குருவாக இருந்தாலும் சரி, தற்போதைய குருவாக இருந்தாலும் சரி. சுருங்கச் சொன்னால், இந்த நஜ்த் பகுதியே அரசியல் ரீதியிலும் மதக்கொள்கை ரீதியிலும் குல அடிப்படையிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்து வருகிறது.

இந்தப் பகுதிப் பற்றி பிஜே ஒரு ஃபத்வா போட்டுள்ளார். "நஜ்த்" எனும் அந்தப் பகுதி ஈராக் என்றுக் கூறுகிறார். பிஜே, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லிக்கொண்டே, ஆங்கில மொழியில் அமைந்த விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ள செய்தியையே தனது ஃபத்வா எனத் தனது இணையதளத்தில் பிஜே போட்டுள்ளார். இந்த ஹதீஸ் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கம்: http://en.wikipedia.org/wiki/Hadith_of_Najd

இந்த விக்கிப் பீடியா பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தியையும், அவர் போட்டுள்ள ஃபத்வாவையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

 (மேலும் படிக்கும் முன் ஒரு குறிப்பு: எனது இந்த இணையதளத்தில் பழைய பதிவுகளில் பிஜே "ஒரு பொய்யன்" என வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பொய்யன் என்றே இந்தப் பதிவிலும் அழைக்கப்படுகிறது. பிஜே இதற்கு தகுந்த முறையில் காரணங்களைக் கூறி ஆட்சேபனைத் தெரிவித்தாலோ அல்லது எனது நிரூபணம் தவறு என அவர் நிரூபித்தாலோ, நான் அவரை பொய்யன் என அழைப்பதை விட்டு விடுவேன் என அறிவிக்கிறேன்.)

அடப் பொய்யா உன்னிடம் சிலக் கேள்விகள்:

1. ஈராக் என்பதுதான் நஜ்த் என்றால் ஈராக் நாடானது, நபிகள் நாயகம் வாழ்ந்த மதினாவிற்குக் கிழக்குப் பக்கம் இல்லையே! பதில் சொல்.

2. ரியாத் அமைந்துள்ள நஜ்த் (பீடபூமி) மதினாவிற்கு கிழக்கே இருக்கிற பீடபூமியாக இருக்கே! அப்போ நபிகள் நாயகம் சுட்டிக்காட்டிய கிழக்குப் பகுதி ரியாத் தானே! பதில் சொல். இந்த கேள்வியைச் சற்று உடைத்துக் கேட்கிறேன்: ரியாத் இருக்கிறப் பகுதி மேட்டு நிலம் என்று சொல்லக் கூடிய உயரமான பகுதியா இல்லையா ? (அந்த பகுதி கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர்கள் வரை உயர்ந்துள்ளது. அப்புறம், அது மதினாவிற்கு கிழக்கே இருக்கா இல்லையா?

3. இப்ன் ஹாஜர் சொல்லுகிறார் என்பதற்காக ஈராக் தான் நஜ்த் என்கிறாயே, அவர் என்ன ஆதாரம் சொன்னார் என்று சொன்னாயா ? ஈராக்கில் பூகம்பம் வருவதால் அதுதான் நஜ்த் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கவாதமா ? "பூகம்பம்" என்றால் உண்மையான பூகம்பம் தானா ? சரி வைத்துக்கொள்வோம். "சாத்தானின் கொம்பு" என்றால் ஈராக்கில் சாத்தானின் "கொம்பு" அதாவது உண்மையான கொம்பு ஒன்று அல்லவா அங்கு உருவாகி இருக்க வேண்டும். இதிலிருந்து பூகம்பம் என்றால் உண்மையான " நில நடுக்கம்" என சொல்லப்படுகிற பூகம்பம் இல்லை என்றுத் தெரியவில்லையா? அது கொள்கை மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான சொல்லாடல் என்று உனக்குப் புரியத் தெரியவில்லையா?

4. சரி, இப்னு கத்தாபி மற்றும் இப்னு ஹாஜர் தெளிவு படுத்தியுள்ளனர் என்று சொன்னாயே, அவர்கள் கூறிய "அந்த தெளிவு படுத்தலில்" ஈராக் மதீனாவிற்கு கிழக்கே உள்ளது என்று கூறியுள்ளனரே! அது சரியா தவறா என்று பார்த்தாயா? இப்போதாவது மேப்பினை எடுத்து வைத்து பார்த்து தெரிந்து கொள்வாயா?

5. மேலும் நீ எழுதுகிறாய்: "குழப்பங்களும் பிரச்சனைகளும் வழி கெட்டக் கொள்கைகளும் ஈராக்கில் தான் முதலில் தோன்றின." அடப் பொய்யா, "முஸ்லைமா" என்பவன் நபிகள் நாயகம் காலத்திலேயே பிரச்சனை செய்தானே, அவன் ஈராக் பகுதியையா சேர்ந்தவன் ? சவுதி அரேபியா தலை நகரான ரியாத் அங்கம் வகிக்கும் நஜ்த் பகுதியைத் தானே சேர்ந்தவன். பதில் சொல்லு.