Sunday, February 02, 2014

"மதம்"- " நம்பிக்கை": வேறுபாடு பற்றி ஒரு சிந்தனை

அனைத்து மதத்தினர் மத்தியிலும் "நம்பிக்கை" என்று ஒன்று உண்டு. அந்த நம்பிக்கையை, "மதம்" என்பதன் ஒரு அங்கமென்று பலரும் கருதுவர். இத்தகைய கருதல், பலவிதமான பூசல்களுக்கு வித்திடுகிறது என்று எனது கணிப்பு.

மதம் என்பது வாழ்க்கை முறை. மார்க்கம். இதை ஏற்றால், "எனது மதம், மதமல்ல; மார்க்கம்" என்று ஒவ்வொரு மதத்தினரும் சிக்கலான தத்துவங்களைப் பேசிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. முஸ்லீம்கள், "இஸ்லாம் என்பது மதமல்ல; அது மார்க்கம்." என்று கூறுகின்றனர். இதையே, பெளத்தர்களும் கூறுகின்றனர், சனாதனியர்களும் கூறுகின்றனர். இந்த "மதமல்ல; மார்க்கம்", என்ற விவரிப்புக்கான தேவை, "மதம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறு "மார்க்கம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறென்று கருதுவதால் தான்.

"நம்பிக்கை" என்பது "நம்பிக்கைகள்". எவைகளை நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க‌ முடியாமல் நம்புகிறோமோ அவைகளை நம்பிக்கைகள் எனலாம். நம்பிக்கையில்லாதா மனிதர்கள் இருக்கவே முடியாது. பெரியார் கூட ஒரு நம்பிக்கையுடைய மனிதர்தான். "கடவுள்" என்று ஒன்று இல்லை என்று நம்பியவர். சமூகத்தில் நீதிவேண்டுமென‌ என நம்பியவர். இவைகளை அவரால் கூட நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க முடியாது, அல்லது நிரூபணம் செய்யமுடியாது.

சமூகத்தில் நீதிவேண்டுமென்பது கூட ஒரு நம்பிக்கைதான். அதற்கு வக்காலத்து செய்ய வேண்டுமானால், "அநீதி" எனும் பின்புலத்தில் மட்டுமே செய்யமுடியும். "நீதி - அநீதி" என்று இருபுறத்தையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பிற்கு, அதாவது, நீதி- அநீதி என்ற பிரிவினையே செய்யப்படாத ஒரு அமைப்பிற்கு, "நீதி வேண்டும்" என்ற கருத்தாக்கத்திற்கே பொருளில்லை. நாம் சமூகத்தின் அங்கம் என்பதால், சமூகம் என்பது "நீதி முறைகளுடன் செயல்படும் ஒரு அமைப்பு" என மனதில் நாம் வரையறுத்துவைத்திருப்பதால், சமூகத்திற்கு நீதி தேவை என நம்புகிறோம்.

 திறமை/அதிகாரம்/சக்தி ஆகியவைகள்தான் சமூகத்தின் செயல்பாடுகளுக்கான காரணம் என்று ஒருவர் அமைக்கும் சமூகத்தில், நீதி-அநீதிகள் அனர்த்தமாகின்றன. "survival for the fittest" என்பது இவர்களது நம்பிக்கையாகிவிடுகிறது.

மீண்டும் மதம்- நம்பிக்கை பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

இதனால், "இந்து நம்பிக்கை" என்ற சொல்லிற்கும், "இஸ்லாமிய மதம்" என்ற சொல்லிற்கும் அர்த்தமில்லை. இந்து மதத்தினர்கள் எனக் கருதப்படுபவர்களில், அத்வைதம், புராண நம்பிக்கைகள் என ஒன்றுக் கொன்று சம்பந்தமே இல்லாத நம்பிக்கைகள் இருக்கின்றன.

அது போலவே, "இஸ்லாமிய மதம்" என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. "இஸ்லாமிய நம்பிக்கைகள்" என்று உண்டு.

மிக எளிதாக விளக்குவதற்காக, "பிஜே" எனும் "பி ஜெயினுல் ஆபிதீன்" என்பவரையும் "ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரையும் எடுத்துக் கொள்வோம். இவர்கள் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்களது நம்பிக்கைகள் வேறுபடுகின்றன.

பிஜே என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன: கடவுள் உருவமுடையவ‌ன்; அந்த உருவம் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளது. அந்த நாற்காலியை எட்டு "ஜின்கள்" எனப்படுபவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்; அந்த உருவம் வானத்தில் ஒரு திசையில் அமந்துள்ளது; அந்த உருவத்திற்கு கால், கைகள் உண்டு; மனிதன் என்பவன் அவருடைய உருவத்தில் படைக்கப்பட்டுள்ளான்; அதாவது கடவுள் மனிதனைப் போல இருப்பான். இந்த நம்பிக்கைக்கு பெயர் என்று எதுவும் இல்லை என்றாலும், பிஜே இதனை "இஸ்லாமிய நம்பிக்கை" எனக் கருதுவதால், இதனை இஸ்லாமிய நம்பிக்கை எனக் கொள்வோம்.

"ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன. அனைத்துப் பொருட்களும் கடவுளின் ஒளியினால் ("நூர்") படைக்கப் பட்டுள்ளது; கடவுளைப் போன்று எதுவும் இல்லை; நாம் மனிதர்களிடம் உதவி கேட்டால் கூட அது கடவுளிடம் கேட்டதற்கே சமம் என்று கருதவேண்டும்; நாம் மனிதர்களுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணியே ஆகும் எனக் கருதவேண்டும்; கடவுள் தனது படைப்பினங்களைக் கொண்டும் உதவுவான். இதனை பிஜே இஸ்லாமிய நம்பிக்கை இல்லையென்றும், "சூஃபித்துவம்" என்றும் கூறுவார். ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் படி இது இஸ்லாமிய நம்பிக்கை.

 ஆனால் மதம் எனும் அடிப்படையில் இருவரும் "இஸ்லாமிய மதம்" அல்ல. நான் மேலே சொன்னவாரு "இஸ்லாமிய மதம்" என்று ஒன்றுமே கிடையாது. "அரேபிய மதம்" என்று வேண்டுமானால் ஒன்று உண்டு. அந்த அரேபிய மதம் என்பது "அரேபிய வாழ்க்கை முறை அல்லது மார்க்கம்" என்பதாகும். பிஜேக்கு நான்கு மனைவி கிடையாது, ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கும் கிடையாது என்றே நினைக்கிறேன். பிஜேயும் ஜமாலியும் கைலி அணிகின்றனர். அரேபியர்களைப் போலல்லாமல் வேறு உடை உடுத்துகின்றனர். ஒட்டக் கறிகளை சுவைத்திருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் இருவரும் இஸ்லாமிய‌ மதத்தினையோ அரேபிய மதத்தினையோ சேர்ந்தவர்களில்லை.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள், இஸ்லாமிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்; தமிழ் முஸ்லீம்களின் மதத்தினைக் கொண்டுள்ளார். பிஜே அவர்கள் தான் கூறும் இஸ்லாமிய நம்பிக்கையையும், தமிழ் முஸ்லீம்களின் மதத்தினையும் கொண்டுள்ளார்.

இதேப் போல பாரதியார், அத்வைத/இஸ்லாமிய/பெளத்த/சூஃபி நம்பிக்கையையும், தமிழ் பிராமணர்களின் மதத்தினையும் கொண்டவர். (பெளத்தர்கள் "கடவுள்" எனும் வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், "உண்மை" என்ற வார்த்தையினைப் பயன்படுத்தியுள்ளனர். "உண்மை" என்பது இஸ்லாமிய மற்றும்  வேத நம்பிக்கைகளின் படி கடவுளின் பெயர்களில் ஒன்று.)

வள்ளலாரும் பாரதியார் போலவே. அவருடைய மதம் தமிழ்-சைவர்களின் மதம். அவரின் நம்பிக்கை இஸ்லாமிய/அத்வைத/பெளத்த நம்பிக்கை.

பெரியாரின் மதம் ஈரோடு தமிழர்கள் அல்லது தெலுங்கு தமிழர்களின் மதம். அவருடைய நம்பிக்கை, இஸ்லாமிய, பெளத்த/அத்வைத நம்பிக்கையின் சில அம்சங்கள்.

மோடி, அத்வானி, ஹெச் ராஜா, காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களின் நம்பிக்கைகள் புராண நம்பிக்கைகள்: அதாவது கடவுளுக்கு உருவம் உண்டு; அவைகள் பலவகைப்படும்; அவைகள் குடும்பஸ்தர்கள்

2 comments:

வேகநரி said...

நல்ல கட்டுரை.

மு மாலிக் said...

நன்றி வேகநரி அவர்களே